இந்தியா இப்போதும் உலகுக்கு வழிகாட்ட வேண்டும் 

இந்தியா இப்போதும் உலகுக்கு வழிகாட்ட வேண்டும் 


ஜெனீவா:

            உலகம்  முழுவதும்  அச்சுறுத்தலை  ஏற்படுத்திவரும் கொரோனா    தொற்று  நோய்க்கு   இதுவரை  மருந்து கண்டு பிடிக்கப்படாத   நிலையில்   உலக  சுகாதார நிறுவன   நிர்வாக   இயக்குனர்    மைக்கேல்  ரியான் கூறியதாவது:-


“மெல்லக் கொல்லும் நோய்களை நாட்டில் இருந்து ஒழித்ததில்  இந்தியா  உலகுக்கே  முன்னிலையாக விளங்கியது.  பெரிய அம்மை நோயை ஒழித்து உலகுக்கு சிறந்த பரிசை வழங்கியது. போலியோவையும் இந்தியா ஒழித்துவிட்டது. எனவே இந்தியாவுக்கு வியக்கத்தக்க திறன் இருக்கிறது.

            இந்தியா  போன்ற   நாடுகள்  கொரோனா தொற்றுநோய் தாக்குதலை  தடுப்பது  குறித்து  என்ன செய்ய வேண்டும் என்று உலகுக்கு காட்ட வேண்டும். இந்த தொற்று  நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுமா என்பதற்கு எளிதில் பதில் சொல்ல முடியாது. இதற்கு முன்பு செய்ததுபோல இந்தியா இப்போதும் உலகுக்கு வழிகாட்ட வேண்டும்.


செ .ஏ.துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,