சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை

சிங்கப்பெண்


  கவிதை


 


சிங்கப்பெண்ணே
உன் கர்ஜனைக்காகக்
காத்திருக்கிறது 
இந்த உலகம்


உனது கம்பீரம்
எதை நோக்கி
என்பதைத் 
தீர்மானித்துவிட்டாயா


உனது வேட்டை
எதைக் குறிவைக்க
வேண்டுமென்று
முடிவெடுத்துவிட்டாயா


உனது சிம்மாசனம்
உன்னை
அடையப்போகும்
நாளைக் குறித்துவிட்டாயா


ஓர் ஆணின் அன்பில்
அடங்கிப்போ
ஆணாதிக்கத்திற்கு
எதிர்த்து நில்


தன் இருப்பிடத்தில்
அடைந்துகிடப்பதில்லை
பெண்சிங்கங்கள்
வெளியில் வா
வெற்றி உனது...


மகளிர் தின
நல்வாழ்த்துகள்...


என்றும் உங்கள் 
கவிஞன்  க.மணிஎழிலன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,