ஆட்சியை பிடிக்கத்தான் கட்சி நடத்துகிறோம் அன்புமணி


 


 

தமிழகத்தில் இளைஞர்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் - பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்


 


                    வேறு கட்சி ஆட்சி நடத்த தாங்கள் கட்சி நடத்தவில்லை என்றும், ஆட்சியை பிடிக்கத்தான் தாங்களும் கட்சி நடத்துவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்







                மேலும், தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் தான் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும், ஒரு பைசா செலவில்லாமல் உயர்கல்வி வரை படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அன்புமணி கூறியுள்ளார். இதேபோல் செலவின்றி தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க தன்னிடம் பல நல்ல திட்டங்கள் உள்ளதாகவும் அன்புமணி கூறி வருகிறார். இலவச கல்வி, செலவின்றி மருத்துவம் ஆகிய இரு முழக்கங்களும் இளைஞர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் கட்டணம் கட்ட முடியாமல் சிரமப்படும் நிலையில் அன்புமணியின் உறுதி இளைஞர்களை கவரும் வகையில் உள்ளது.


 






அதிமுக கூட்டணியில் இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சியை விட்டுத்தராத வகையில் அன்புமணியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் ஆட்சியை பிடிப்போம் எனக் கூறும் போது 30 ஆண்டுகளாக கட்சி நடத்தும் தாங்கள் ஆட்சியை பிடிக்க வேண்டும் என பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வேறு கட்சி ஆட்சி நடத்த தாங்கள் கட்சி நடத்தவில்லை என்றும், ஆட்சியை பிடிக்கத்தான் தாங்களும் கட்சி நடத்துவதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.








Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,