மீட்டியது சிவம் மீண்டது சிவம் (4)

மீட்டியது சிவம் மீண்டது சிவம் (4)


பூலோகத்தில் பூக்கள் 
பறிக்க விண்ணில் இருந்து உன்னை 
இறக்கிய வாகனம் 
இறை பொருள் தந்த 
இந்த  தேகம் ஆகும் 


இருக்கும்போதே 
பூக்களைவ்பறித்து 
மதுவையுண்டு 
மாயை தெளிய 
காண கிடைப்பவன் 
சர்வம ஆவான் 


அன்றும் இன்றும் என்றும் நின்றும் 
காத்தும் பார்த்தும் 
கடந்தும் படர்ந்தும் 


அடர்ந்து வந்த 
சூழல்கள் எதிலும் 
எதிரே நின்று 
காத்தவன் எவனோ 


அவனை கொண்டு 
வாழும் வாழ்வில் 
விதிகள் என்பன 
நீ விதிப்பவை அல்ல 


சுயமது உயர காணும் யாவும் கடினம் என்பின் 
Kaappadhu எங்கனம் 
அறிவை கொண்டு 
அறிதல் விடுத்து 


நம்பிக்கை கொண்டு 
உயர பழகு 
இறைவன் மீது 
பிடிப்பு  பெருக 


பிடிப்பவை எல்லாம் 
பொயென அறிவாய் 
இறை கொண்டு 
காக்கும் வாழ்வு அதனை 


முறை யுடன் 
பக்தி கூட்டிக் 
கூட்டி விளையும் 
நன்மை யாதென 
காண்பாய் 


அகத்தில் உறையும் 
தெய்வம் என்னை 
நித்தியம் நித்தியம் 
எண்ணி கொண்டு 


பூஜிக்கும் பொழுதுகள் 
பூர்வம் காட்டும் 
ஆதியின் வேரில் 
நீரை ஊற்றி 


மரமாய் நிற்கும் 
கற்பக  விருக்ஷம்


T. ஜெயந்தி ராகவன் 


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,