விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது


 உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவல் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதன்காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பஸ்நிலையத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது


இந்த கபசுர குடிநீர்  அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொருளாளர் பெருஞ்சித்திரனார், விடுதலை சிறுத்தைகள் கட்சி விருத்தாசலம் ஒன்றியே பொருளாளர் எழில்வான்சிறப்பு, முற்போக்கு மாணவர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வைரமுத்து, ஆசிரியர் காப்பாளர் சங்க மாவட்ட தலைவர் கணேசமூர்த்தி ஆகியோர் பங்களிப்பில் 1500 -க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது


 மேலும் ஊரடங்கு உத்தரவு மத்திய மாநில அரசுகள் விலக்கிவைக்கும் வரை கபசுர குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தனர்


 இதில் பூவனூர் எல்ஐசி குமார், டைலர் தேவா, சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


செய்தியாளர். கடலூர். காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,