நாகராஜா கோவில்   

நாகராஜா கோவில்      


நாகராஜா கோவில் என்பது கன்னியாகுமரி மாவட்டம்,  நாகர்கோயிலில்  உள்ளது. இக்கோயிலின்  பெயரிலேயே   ஊர் நாகர்கோவில்   என்றழைக்கப்படுகிறது. இது கேரள பாரம்பரியக் கோவில். இங்கு மூலஸ்தானத்தில் ஐந்துதலை நாகராஜர் அருள் பாலிக்கிறார். இக்கோவிலைச் சுற்றி ஏராளமான பாம்பு சிலைகள் உள்ளன. பொதுமக்கள் ஆவணி  மாதத்தில் இச்சிலைகளுக்கு பாலூற்றி அபிஷேகம் செய்வதை சிறப்பாகக் கருதுகின்றனர்.


            இக்கோவிலின்  கருவறையின் மேல் ஓலை வேயப்பட்டு உள்ளது. இது   வேறு  எந்தக்  கோவிலிலும்  பார்க்கமுடியாத  சிறப்பு  அம்சமாகும். இக் கோவிலின் கருவறை மண் ஆறு மாதம் கருப்பாகவும் ஆறு மாதம் வெண்மையாகவும் காணப்படும். இது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.


இக்கோவிலில் அருள்பாலிக்கும்  பாலமுருகனுக்கு  ஆண்டுதோறும் சஷ்டி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சூரன் பாடும் நடைபெறுகிறது.




  1. இக்கோவிலில் புற்று மண் பிரசாதம், நாகர் பிரதிஷ்டை, நூலும் பாலும் நைவேத்தியம், பாலாபிஷேகம், பால் பாயாசம் ஆகிய  ஐந்தும்  முக்கியமானவை.

    2. நாகராஜா ஆலயத்தில் காலை 4 மணிக்கும், பகல் 10 மணிக்கும் பாலாபிஷேகம் செய்யப்படுகிறது.


  2. உத்திராயணம், தெட்சிணாயணம் தொடங்கும்போது நிறைபுத்திரி பூஜை செய்வது வழக்கம். முதல் நெல்லை கொண்டு வந்து நாகருக்கு படைத்து பூஜை செய்வதை நிறைபுத்திரி பூஜை.

    4. இங்கு சிவனும், அனந்தகிருஷ்ணனும் பிரதிஷ்டை செய்திருப்பதால் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    5. இந்த ஆலயம் ஒருகாலத்தில் சமணர்கள் தியானம் செய்யும் பள்ளியாக இருந்தது. அதனால் ஆலயத்தின் தூண்களில் சமணர்கள் சிற்பத்தை பார்க்க முடிகிறது.

    6. கோவில் அமைந்துள்ள இடம் ஆதிகாலத்தில் கோட்டாறு என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளன.

    7. ஆலயத்துக்குள் இப்போதும் பாம்புகள் நடமாட்டம் உள்ளது. அடிக்கடி பக்தர்கள்  பாம்பு  செல்வதை  பார்ப்பார்கள். ஆனால் அந்த பாம்புகள் யாரையும் தீண்டியது இல்லை.

    8. ஆலயத்தை சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாம்புகள் யாரையும் தீண்டாது என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

    9. ஆலய பின்புறம் உள்ள மிகப்பெரிய தீர்த்த குளத்துக்குள் ஏராளமான பாம்புகள் இருப்பதால் அக்குளத்தை பூட்டி வைத்து இருக்கிறார்கள்.

    10. ஆலயத்தின் அனந்தகிருஷ்ணர் கடுசர்க்கரையால் செய்யப்பட்டவர். என்பதனால் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை.

    11.  ஆலயத்தில் உள்ள 13 சன்னதிகளில்  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரலாற்று சிறப்புடன் பின்னணி சுவாரசியங்கள் உள்ளன.

    12. ஆலய காவல் தெய்வமாக நாகமணி பூதத்தான் கருதப்படுகிறார். இவரது தனி சன்னதி பிரகார சுற்றுப்பாதையில் உள்ளது.

    13. ஆலய பூஜைகள் அனைத்தும் கேரளாவின் தாந்தீரிக முறைப்படி நடத்தப்படுகின்றன.

    14.  ஆலய முன்பகுதியில் சாலைக்கு பக்கத்தில்  மிகப்பெரிய  தீர்த்த குளம் இருந்தது. ஒரு காலத்தில் இக்குளத்தில்  தெப்ப உற்சவம் நடந்தது. அக்குளத்தை மண்  போட்டு  மூடி  மாநகராட்சி  தனது  இடம்  என்று  கையகப்படுத்தி  உள்ளது.

    15.  ஆலயத்தில் நடத்தப்படும் பூஜை முறைகள்-குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், நோய் தீர்ப்பது போன்ற அனைத்துக்கும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். பூஜைகள் ஒன்றாக இருந்தாலும் சங்கல்பங்கள் மாறுபடும்.

    16.  ஆலயத்தில்  பூஜை  செய்யும்  ‘பாம்பு  மேக்காடு’ இல்லத்தை  சேர்ந்தவர்கள் பரம்பரையாகவே நாகத்தை வழிபடுபவர்கள். பாம்புகளைக் குழந்தைகள் போல் வளர்ப்பவர்கள்.

    17. ஆலயத்தைச் சுற்றி உள்ள பூந்தோட்டங்கள் அழகு மிக்கவை. இத்தோட்டத்தில் உள்ள நாகப்பூவை நாகராஜரின் உருவகக் குறியீடாகக் கருதுகின்றனர்.

    19. கோவிலையும், அதனைச் சார்ந்த தோட்டங்களையும் நாகங்கள் காவல் புரிகின்றன என்பது ஐதீகம்.

    20. சில ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் குளத்தின் அருகே இரண்டு தாலைப்பாம்பு ஒன்று கிடைத்தது. அண்மைக்காலம் வரை அதன் உடல் பாதுகாக்கப்பட்டு வந்தது.

    21.  கோவில் கிழக்கு நோக்கி அமைந் திருந்தாலும் மகாமேரு மாளிகை என்று அழைக்கப்படும் தெற்கு வாயில் வழியாகத்தான் பக்தர்கள் செல்கின்றனர்.

    22. அர்த்த  மண்டபத்தில்  உள்ள  தூண்களிலும்,  சுவரிலும் சமணர்கள் வணங்கும்  பார்சுவநாதர், மகாவீரர், பத்மாவதி ஆகியோர் உருவங்களும், இந்து சமயத்தவர் வணங்கும் முருகன், கிருஷ்ணன், பத்மநாப சுவாமி தட்சிணாமூர்த்தி ஆகியோர் உருவங்களும் புடைப்புச் சிற்பங்களாக பொறிக்கப்பட்டுள்ளன.

    23. உயிரினங்கள் அனைத்தும் இறைவனை வழிபடும் என்ற கருத்தினை விளக்கும்படி  இக்கோயிலில்  சிலைகள்  உள்ளன.  மனிதனும் குரங்கும், காகமும் சிவலிங்க வழிபாடு செய்யும் காட்சிகள் இக்கோவிலில் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

    24. துர்காதேவி ஆலயமும், கோயில் முகப்பிலே காணப்படும் இரண்டு அரசமரங்களும் பெண்களால் மிகவும் புனிதமாகக் கருதப்படுகின்றன.  


 



  1. பிள்ளைப்பேறு வேண்டுவோர் நாகச்சிலைகளால் சூழப்பட்ட அம்மரங்களைச் சுற்றி வலம் வந்தால் பலனடைவர் என்பது மக்கள் நம்பிக்கை.

    25. துர்க்கா தேவி சங்குச் சக்கரதாரியாய் நாற்கரங்களுடன் திருமாலின் அம்சமாகக் காட்சி தந்து அருள் புரிகின்றார்.

    26. பாலமுருகன் கோயில் அருகே இடும்பனுக்கும் இங்கே ஒரு சன்னதி உள்ளது.

    27. 1980-ம் ஆண்டில் இருந்து  ஆலயத்தில் கந்தசஷ்டி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    28. கேரளத்தாரின் புத்தாண்டு ஆவணி மாதத்திலேதான் தொடங்குகின்றது. அந்த அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதி மக்கள் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில்  இக்கோவிலுக்கு வந்து வழிபட்டுச் சென்றதாகத் தெரிய வருகிறது. அது இன்றும் தொடர்கிறது.

    29. ஆலயத்தில் ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்படும் திருவிளக்கு  அலங்காரம்  கொங்கு  நாட்டு  விளக்கு  என்று  அழைக்கப்படுகிறது.

    30. இக்கோவிலில்  காணப்படுவது  போன்று  கல்லிலே  செதுக்கப்பட்ட  பாம்பின் சிலைகள்  திருச்செங்கோட்டிலும் காணலாம்.


செ ஏ தரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,