பணக்கார   நாடு – சோழ   நாடு







பணக்கார   நாடு – சோழ   நாடு


சோழர்   காலத்தில்   தமிழ்நாடுதான்   உலகத்திலேயே மிகவும்   பணக்கார  நாடு.  சுமார்  40,000  கோயில்களை சோழர்கள்  தங்கள்  ஆட்சிக்  காலத்தில்  கட்டினார்கள்.  அன்று  உலகிலேயே   உயர்ந்த  கட்டிடம்  தஞ்சை  பெரிய   கோவிலும்   கங்கை கொண்ட  சோழபுரமும்தான்.     


அப்போது,  வட  அமெரிக்கா,  தென்  அமெரிக்கா கிடையாது.  இலண்டன்  ஒரு  சிறு  மீன்  பிடிக்கும் கிராமமாக  1066-ல்  நிறுவப்பட்டது.


தஞ்சை  பெரிய  கோபுரம்  முழுவதும்  தங்கத்தால் போர்த்தப்பட்டது.  இதுபற்றிய  கல்வெட்டும்  உள்ளது.  இந்தத்  தங்கப் போர்வை  1311-ஆம் வருடம் மாலிக்கபூரின் முஸ்லிம்  கடைகளால   கொள்ளையடிக்கப்பட்டு,  500 யானைகள் மேல்  எடுத்துச்  செல்லப்பட்டது.


இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?


எல்லாம்   கடல்    வாணிபம்   ஏற்றுமதிதான்.   ஜப்பான் நாட்டில்   தங்கச்   சுரங்கம்   கிடையாது.  ஆனால்    ஏற்றுமதி   வியாபாரம்   மூலம்  அவர்களுக்குத் தங்கம் கிடைத்தது.   அதே  போல்  சோழ  நாட்டில்  தங்கச் சுரங்கம்  கிடையாது.    இரும்பு  சாமான்கள்,  துணிகள்,   கைவினைப் பொருட்கள்,   தானிய  ஏற்றுமதிமூலம்  தங்கம்  கிடைத்தது .  உலகிலேயே   ஒரே   சீராக   80  இலட்சம்  ஏக்கர்  நிலம் காவிரிப் படுகையில்தான்  அமைந்திருந்தது.  எங்கும் மூன்றுபோகச்  சாகுபடிக்கு  காவிரியில்  நீர் வந்து கொண்டிருந்தது.  வியாபாரத்திலும்,  ஏற்றுமதியிலும், விவசாயத்திலும்  கிடைத்த பணத்தை – தங்கத்தை   சோழர்கள்  படைபலத்தைப்  பெருக்கிக்  கொள்ள பயன்படுத்தினர். 


மலேயா  காடுகளிலிருந்தும்   மைசூர் காடுகளிலிருந் தும்   யானைகள்  பிடித்து  வரப்பட்டன.   பர்மாவிலிருந்து தங்கம்   கொடுத்து  குதிரைகள்  வாங்கப்பட்டன.  அசுவசாஸ்திரம்  என்ற  குதிரைப்  பராமரிப்பு  நூல் எழுதப்பட்டது.    


முதன் முதலில்  குதிரைகளுக்கு  லாடம் அடிக்கும் முறையைக்  கண்டுபிடித்தவர்கள் தமிழர்களே. 



செ ஏ துரைபாண்டியன்



 



 















ReplyForward







Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,