நான் ரசித்த இலக்கியச்சுவை கண்ணொடு கண் இணை கவ்வி

நான் ரசித்த இலக்கியச்சுவை


 


கம்பஇராமயணத்திலிருந்து
ஜனகர் விஸ்வாமித்ரரிடம் ,"இதுதான் சிவதனுசு !" என்கிறார்


வில்லைப்பார்த்தவிஸ்வாமிதரர் "குழந்தாய்: என்று அழைக்கிறார்,உடனே லஷ்மணன்
ஆர்வமாய் எழுந்திருக்கவும், "உன்னை இல்லை லஷ்மணா ! ராமனைஅழைத்தேன்" என்கிறார்.


ராமர் எழுந்துநிற்கிறார்.


விஸ்வாமிதரர் கோபக்கார ரிஷி என்ன சொல்லப்போகிறாரோ எனதயங்கி நிற்கிறார்.


அப்போது ராமரின்பார்வை சட்டென மாடத்தின்மீது பாய்கிறது.


அங்கே நின்றிருந்த சீதையும் ராமனையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.


'வில்லைப்பார் என்கிறார் விஸ்வாமித்ரர். தநு:பஸ்ய என்பது வால்மீகி வாக்கு.
ராமன் வில்லைப்பார்க்காமல் வேறு ஒன்றைப்பார்ப்பதை ரிஷி கண்டுகொண்டார். இங்கே தான் வால்மீகி இத்துடன் நிறுத்திக்கொள்கிறார் என்றால் கம்பர் சீதையைப்பார்க்கும்படலமாய் அழகாய்விவரிக்கிறார்.


சீதையும் ,' எத்த்னயோபேர்வந்தார்கள் சென்றார்கள்!இவரையும்பார்ப்போமே!'என்றுதான் வருகின்றாள்.


ஆயிரம்கோடிமின்னல்களூக்கெல்லாம் அரசியாக வந்து நிற்கிறாளாம். அந்தப்ரகாசத்தில் மெய்மறக்கிறது ராமனுக்கு.


ராமனைக்கண்ட சீதைக்கும் இனம்புரியாத பரவசம் ஏற்படுகிறது.


...கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று 
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.(கம்பர்)


கண்ணால் கவ்வுகிறார்களாம்! இருவரின் நிலையும் ஒன்றேபோல இருக்கிறது.ஒருவர்பார்த்து மற்றவர்பார்க்காமல்போனால் அது உபயோகமில்லையே!


கண்வழி இதயம் இடம் மாறுகிறதாம் .விழியில்விழுந்து மனதில் நுழைந்து....


வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்


அப்புறம் என்ன ஆனதாம்?


கம்பர் இந்தவரிகளைஎழுதும்போது அவருடைய சிஷ்யன் அருகிலிருந்தவன் கேட்டானாம் "அப்புறம் என்ன ஆயிற்று குருவே?"


"அதை நான் எழுதத்தயாராக இல்லை எழுதுகோலைக்கிழே வைத்துவிட்டேன் "என்றாராம் கமபர்.


பிறகு சொல்கிறார்.


"'பிரிந்தவர் கூடினால் பேசல்வேண்டுமோ? ரொம்பநாள்கழித்து அவங்க சந்திக்கிறாங்க இங்க... நான் என்னப்பா பேசறது ?"


 


உமாதமிழ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,