இந்திய ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி,  முதல் உலக போருக்குப் பின்னர் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குப் பதிலளிக்க 1926-இல்  அமைக்கப்பட்ட ஹில்டன்-யங் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1935 இல்  தான்  கொல்கத்தாவில்  நிறுவப்பட்டது,  ரிசர்வ் வங்கி, பர்மாவின் நடுவண் வங்கியாக,  ஜப்பானின்  பர்மா  ஆக்கிரமிப்பு வரை மற்றும் 1937-ல் பர்மா, இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்த பின்னரும், 1947 வரை  மியான்மரின்  தலைமை வங்கியாகச் செயற்பட்டது. இந்தியாவிலிருந்து  பாகிஸ்தான் 


பிரிந்த பின்னர், பாகிஸ்தானின் தலைமை வங்கியாக 1948 வரை   செயற்பட்டது.


இந்திய ரிசர்வ் வங்கி  (Reserve Bank of  India)  ரிசர்வ் வங்கி சட்டம், 1934  விதிகள் படி, பிரித்தானிய இந்தியாவில்  ஏப்ரல் 1,1935 இல் நிறுவப்பட்டது. இதன் மூலதனம் முற்றிலும் தொடக்கத்தில் 100 ரூபாய் கொண்ட பங்குகளாகப் பிரிக்கப்பட்டு, தனியார் பங்குதாரர்களுக்குச் சொந்தமாக  கொல்கத்தா  நகரை தலைமையகமாக கொண்டு துவங்கப்பட்டஇவ்வங்கி 1937-ஆம் ஆண்டு முதல்  மும்பை   நகரை  தலைமையகமாகக் கொண்டு இயங்கி  வருகிறது.  இவ்வங்கி 1949 ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது.  இதுவே   இந்தியாவின் நடுவண் வங்கி மற்றும்  அரசின் கருவூலம் ஆகும்.


 


முதலில்  நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு,  நாட்டின் பல பொருளாதார  நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது.


பொது மக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவது போல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமை (ஏஜன்ட்) ஏற்றுச் செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும். ரிசர்வ் வங்கியைப் பொது மக்கள் நேரடியாகப்  பயன்படுத்தாவிட்டாலும்  பொது  மக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றைக் கண்காணித்தும்  வருகிறது.


இந்திய நாட்டின் நாணய மதிப்பு (அந்நியச் செலாவணிக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு) ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும்  தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது.    


  ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டாரக் கிளைகள் உள்ளன.


 


  இந்திய ரூபாய் மற்றும் கையிருப்பில் உள்ள 30,210 கோடி  அமெரிக்க  டாலர்  (2011 ஆண்டு)  தொடர்பான நாணயக் கொள்கைகளை தோற்றுவிக்கும் ஆணையமாகும்.  


 


வங்கியின் பொது கண்காணிப்பு மற்றும் இயக்கம் 20 உறுப்பினர்களைக் கொண்டது. அவர்கள் ஆளுநர் மற்றும் நான்கு துணை ஆளுநர்கள், மத்திய நிதி அமைச்சகத்தின் ஒரு அரசு அதிகாரி, நாட்டின் பொருளாதார உறுப்புகளை பிரதிநிதித்துவம் செய்ய பத்து அரசு இயக்குநர்கள், மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் புது தில்லி தலைமையகங்களின் பிரதிநிதியாக நான்கு மத்திய அரசு இயக்குநர்கள் ஆகியோராவர். உள்ளூர் வாரியங்கள் ஒவ்வொன்றுக்கும், பிராந்திய மற்றும் பொருளாதார நலன்களையும், கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வங்கிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும், நான்கு ஆண்டுகளுக்கு, ஐந்து உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுவர்.


மத்திய இயக்குநர்கள் வாரியம், மத்திய வங்கியின் முக்கிய குழுவாகும். இந்திய அரசு, நான்கு ஆண்டு காலத்திற்கு இயக்குனர்களை நியமிக்கிறது. ஒரு ஆளுநர், நான்கு துணை ஆளுநர்கள், பிராந்தியக் கிளைகளை பிரதிநிதித்துவம் செய்ய பதினைந்து இயக்குநர்கள், நிதி அமைச்சகத்திலிருந்து ஒருவர், மற்றும் பல்வேறு துறைகளில் இருந்து இதர பத்து இயக்குனர்களையும் கொண்டுள்ளது.


ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநராக சக்திகாந்த தாஸ் உள்ளார். இவர் இந்திய குடியரசுத் தலைவரால் 2018, டிசம்பர் மாதம் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.


மேற்கே மும்பை , கிழக்கில் கொல்கத்தா, தெற்கே சென்னை மற்றும் வடக்கில் புது தில்லி :என இந்திய ரிசர்வ் வங்கி நான்கு பிராந்திய பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளது. பிரதிநிதித்துவம், மத்திய அரசாங்கத்தால் நான்கு ஆண்டு காலத்துக்கு நியமனம் செய்யப்படும் ஐந்து உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படுகிறது.. ரிசர்வ் வங்கி 22 வட்டார அலுவலகங்களைக் கொண்டுள்ளது.


ஜூலை 1, 2007 அன்று வாடிக்கையாளர் சேவைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி புதிய வாடிக்கையாளர் சேவைத் துறையை உருவாக்கியது.


வங்கி, அதிகாரிகளுக்கு இரண்டு பயிற்சி கல்லூரிகள், மற்றும் நான்கு  மண்டல பயிற்சி மையங்கள் உள்ளன.


வங்கியின் அடிப்படைச் செயல்பாடுகள்



  • தேசிய நிதிக்கொள்கையை உருவாக்குதல், செயல்படுத்துதல்  மற்றும்  கண்காணித்தல்

  • வங்கிகளின் பணக்கையிருப்பு  விகிதம்  முறைப்படுத்துதல்

  • நிதிசார் துறைகளை முறைப்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடல்

  • பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நிதி சார்ந்த கோட்பாடுகளை வரையறுத்தல்

  • அன்னியச் செலாவணிமுறைப்படுத்துதல் சட்டம், 1999 ன் படி முறைப்படுத்துதல்

  • இந்திய ரூபாய்  நாணயம்  மற்றும்  தாள்  அச்சிடுதல்

  • பழைய தாள்களை புதிய தாள்களுக்குப் பரிமாற்றம் செய்தல்

  • மத்திய மாநில அரசுகளின் முதன்மை வங்கியாக செயல்படல்

  • ரூபாய் நோட்டுக்களை வெளியிடுதல்

  • இந்தியாவின் பண நிலைத் தன்மையை பாதுகாக்கும் அளவுக்கு இருப்புக்கள் வைத்தல்

  • பொதுவாக நாணயம் மற்றும் கடன் திட்டங்களை நாட்டின் சிறந்த நலனுக்காகச் செயல்படுத்தல்


ஆகியiவை வங்கியின் அடிப்படைச் செயல்பாடுகளாக ரிசர்வ் வங்கியின் அறிமுகவுரை முன்வைக்கிறது.


 


இது ரிசர்வ் வங்கியின் ஒரு பிரிவாகும். நாணயங்களைப் பொது மக்கள் புழக்கத்திற்காக வங்கிகள் மற்றும் அரசாங்கக் கருவூலங்கள் வழியாக வெளியிடும் துறையாகும். முதலில், வெளியீடுத் துறையின் சொத்துக்கள், ஐந்தில் இரண்டு பங்குக்கு தங்க நாணயம், தங்கப் பொன் அல்லது ஸ்டெர்லிங் பத்திரங்களின் மதிப்புக்கு ₹ 40 கோடி (₹ 400 மில்லியன்) விட குறைவாக இருக்கக்கூடாது என்றும் மீதமுள்ள சொத்துக்கள் - ரூபாய், நாணயங்கள், இந்திய ரூபாய் பத்திரங்கள், பரிமாற்றம் மற்றும் இந்தியாவில் செலுத்த வேண்டிய உறுதிமொழி நோட்டுகள் என வைத்துக்கொள்ளாம்.


 


இந்திய ரிசர்வ் வங்கி, நாட்டின் முக்கிய பணவியல் ஆணையமாகும் மற்றும் மத்திய வங்கி தேசிய மற்றும்  மாநில      அரசாங்கங்கள் வங்கியாக செயல்படுகிறது. இது, உற்பத்தித் துறைகளில் போதுமான அளவு கடன் ஓட்டத்தை உறுதிப்படுத்ததுகிறது, அதே போல் பணவியல் கொள்கை கண்காணிக்கிறது. அதன் நோக்கங்கள், விலை நிலைத்தன்மையை பராமரிப்பது மற்றும் உற்பத்தி துறைகளில் போதுமான கடன் ஓட்டத்தை உறுதிப்படுதுவது. தேசிய பொருளாதாரம், பொதுத் துறையை சார்ந்தது ஆனால், மத்திய வங்கி, 1990 நிதி சந்தை சீர்திருத்தங்கள் முதல் தனியார் துறைக்கு தள்ள ஒரு பிரம்மாண்டமான பணவியல் கொள்கையை ஊக்குவிக்கிறது. செயல்படுத்தப்படுகிறது மற்றும் உற்பத்தி துறைகளில் கடன் போதுமான அளவு ஓட்டம் உறுதிப்படுத்த வேண்டும், அதே போல் பணவியல் கொள்கை கண்காணிக்கிறது. நோக்கங்கள் விலை நிலைத்தன்மையை பராமரிப்பது மற்றும் உற்பத்தி துறைகளில் கடன் போதுமான ஓட்டம் உறுதி.


வங்கி ஓம்புட்ஸ்மன் திட்டம், வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு திறமையான தீர்வு கான வுருவாக்கப்பட்டது.


நல்ல தரமான நாணயங்களைப் பொது மக்களுக்கு வழங்குவது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பராமரிக்க மற்றும் மேம்படுத்த வணிக வங்கிகளுக்கு கடன் வழங்கவது. ரிசர்வ் வங்கியின் அடிப்படை நோக்கங்கள்,


இந்திய ரிசர்வ் வங்கி, இடையேயான துறை மற்றும் உள்ளூர் பணவீக்கம் தொடர்பான பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. இந்த பிரச்சினைகளுள் சில, பொதுத்துறை ஆதிக்கத்தால் ஏற்படுகிறது


இந்திய ரிசர்வ் வங்கி ,அரசாங்கத்திற்கு ஒரு வங்கியாளர் மற்றும் மத்திய மாநில அரசாங்கங்களுக்கு வணிக வங்கியாளராகவும் செயல்படுகிறது. அனைத்து வங்கிகளின் வங்கி கணக்குகளையும் பராமரிக்கிறது.


பொது மக்கள் நடத்தும் வங்கிகளை மேல்பார்வையிடும் பொறுப்பும் இந்திய ரிசர்வ் வங்கிக்கு உண்டு. தகுதியானவை என்று தனக்குத் தோன்றும் வங்கிகளைத் தனது ஆட்சிக்கு உரியவையாக அமைத்துக் கொள்ளும். அவ்வாறு அமைத்துக் கொண்ட வங்கிகள் ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் அட்டவணையில் காணப்படும். அவையே அட்டவணை வங்கிகள் எனப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்கள் இத்தகைய வங்கிகளைக் கட்டுப்படுத்தும்.


இந்திய ரிசர்வ் வங்கியின் அட்டவணையில் சேர்க்கப்படாத வங்கிகள் அட்டவணையில்லா வங்கிகள் ஆகும். இவை மக்களால் மதிக்கப்பட்டதாகவும் தகுதிமிக்கதாகவும் இருந்தாலும் இவை அட்டவணையில் சேர்க்கப்பட்ட பிறகே அட்டவணை வங்கிகள் பட்டியலில் இடம் பெறும். ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்கள் இவ்வங்கிகளையும் கட்டுப்படுத்தும்.


  செ ஏ துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,