ஜனநாயகத்திற்கு இலக்கணம் எழுதிய     ஆபிரகாம் லிங்கன்  நினைவு நாள்

ஜனநாயகத்திற்கு இலக்கணம் எழுதிய


          ஆபிரகாம் லிங்கன்  நினைவு நாள்


     









மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி



                                   என்பது ஆபிரகாம் லிங்கனின் மிகப் புகழ்பெற்ற மக்களாட்சி குறித்த விளக்கம் ஆகும்.


ஃபீனிக்ஸ் பறவையைப் போல் தொடர் தோல்விகளிலிருந்து துவண்டெழுந்து, 1860ல் அமெரிக்க மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்தவர்   குடியரசுக் கட்சியின்  வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் 16வது குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார்.


ஐக்கிய அமெரிக்காவைப் பிளவுபடாமல் காக்க, தென் மாநிலப் பிரிவினைக் கருத்தாளர்களை எதிர் கொண்டு உள்நாட்டுப் போர் நடத்தி  புகழ்பெற்ற  விடுதலை எழுச்சி அறிவிப்பு  ஒன்றை வெளியிட்டார்.  தொடர்ந்து 1865 இல் ஐக்கிய அமெரிக்காவின் 13 வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம்  அடிமை முறையை ஒழித்தார். இவருடைய தலைவருக்கான பண்புகளை அறிய இவர் நடத்திய உள்நாட்டுப் போர், மற்றும் அடிமை முறையை எதிர்த்து இவர் நாட்டு மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்து வகையில் எழுப்பிய குரலும் முக்கியமானவை. 


கெட்டிஸ்பர்க் சொற்பொழிவு  எனப் புகழ்பெற்ற இவர் ஆற்றிய உரை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. உள்நாட்டுப் போர் முடியும் தருவாயில் தென் மாநிலங்களுடன் இணக்கமான முறையில் அமெரிக்க ஒன்றியத்தை நிறுவ முயன்றார். இவர் அடிமை முறையை ஒழிப்பதில் ஒரு சிறிதும் தளர்வில்லாமல் உறுதியாக இருந்ததை ஒரு சிலர் கடுமையாக சாடினார்கள் (எ.கா. காப்ர்ஹெட்ஸ்). ஆனால் வேறு சிலர் இவர் போதிய விரைவுடன் அடிமை முறையை ஒழிக்கவில்லை என்றும், அடிமை முறையை போற்றிய தென் மாநிலங்களிடம் உள்நாட்டுப்போரின் இறுதியில் போதிய அளவு கடுமையாக நடந்துகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இறுதியில் 1865 இவர் வாஷிங்டன் டி. சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்தவர்.


 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ந் தேதி அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்த  இவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு  தச்சர்.  சிறுவனாக இருந்தபோது,  தந்தையின்  பணிகளில்  லிங்கன் உதவி புரிந்தார். தாயார் நான்சி ஹாங்க்ஸ் (Nancy Hanks).    


காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார்  லிங்கன். அவருக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் வளர்க்கப்பட்டார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. பிறருக்கு உதவி செய்தல், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே அவரிடம் இருந்தது. எப்போதும் கலகலப்பாகப் பழகுதல்; கதை சொல்லுதல்; வேடிக்கையாகப் பேசுதல் ஆகிய  குணங்கள்  அவர்மீது  மற்றவர்களை  விருப்பம்  கொள்ளச் செய்தன.


            ஒருமுறை,  நியூ ஆர்லியன்ஸ்  என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு அவர் சென்றிருந்தபோது அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதையும் அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிக்கப்படுவதையும் ஒட்டுமொத்தமாகக் கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்ட அவர் மனம் துடித்தது. இந்தக் கொடுமைக்கு முடிவு காண  விரும்பி அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய  முற்பட்டார்.  தனது இருபத்துமூன்றாவது  வயதில் முதன் முதல் ஆபிராகாம் லிங்கன் பிளாக் காக் போரில் (black hawk war) கலந்து தலைவனாக பணியாற்றியது அவருக்குப் புதியதோர் பாதையை காட்டியது.


1833 இல்  ஆண்ட்  ரூத்லெஸ்  என்ற பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் ஆண்ட் நோய்வாய்ப்பட்டு இறந்தார். 7 ஆண்டுகள் கழித்து லிங்கன் தனது 33 வயதில் (1842) மேரி டாட் (Mary Todd) எனும் பெண்ணை மணந்தார். அவருக்கு  நான்கு  ஆண்  குழந்தைகள்  பிறந்தன.


            தனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் எழுத்தராக  பணியில் சேர்ந்தார். பின் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் நட்டமடைந்தார், அடுத்து ஓர் அஞ்சலகத்தில் அஞ்சல்காரராகப் பணியாற்றினார்.  பின்  அவர் தாமாகவே  படித்து  வழக்குரைஞர்  ஆனார்.     


            அரசியலில் ஈடுபடுவதன் மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும்  என்ற  முடிவுக்கு  லிங்கன்  வந்திருந்தார்.  1834 ஆம்  ஆண்டு தமது 25 ஆவது வயதில்  முதன் முதலாக  இலினோய்  மாநில  சட்டமன்றப் பதவிக்கு போட்டியிட்டு பொது மக்களிடம் அவர் செய்த பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று  முடிவில் வெற்றி பெற்றார்.


            அடுத்து அமெரிக்க செனட்டுக்கு நடந்த தேர்தலில் மிகப் பிரபலமான நீதிபதி ஒருவரை எதிர்த்து நின்றார். இந்தத் தேர்தலின் வெற்றியை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.


அன்றைய அமெரிக்க நிலைமை, பல்லாயிரம் நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம், வெள்ளையர் – கறுப்பர் என்ற  பாகுபாடு, தேசத்தைச் சீரழிக்கும் சூழ்நிலை ஆகியற்றையெல்லாம் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் லிங்கன் குறிப்பிட்ட அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கி தேர்தல் முடிவு அவருக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1847 தொடக்கம் 1849 ஆண்டுகளில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார்.


பின்  அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் தனியார் துறையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.


1854 ல் லிங்கன் மீண்டும் அரசியலில் நுழைந்தார். குடிப்பழக்கம், புகைக்கும் பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 1860 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


 ஜனாதிபதி ஆனதும் ஒரு உறுப்பினர், "லிங்கன் அவர்களே, உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது!", "என நக்கலாக சொல்ல", அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் கொடுங்கள், தைத்து தருகிறேன். அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும்."  என்றார் அமைதியாக".


பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862 ல் அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர். அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக்கூடாது என்று பிரகடனம் செய்தார்.


 


1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிச்பெர்க் பேருரையில் (Gettysburg speech) "விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவை பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப்போர் நடத்தப்படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப்பட்டவர், எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. "மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் அழிந்து போகாது". எனக் குறிப்பிட்டார்.


லிங்கனின் சீர்திருத்தக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும், அடிமைத்தன ஒழிப்பும் அடித்தட்டு மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது.


1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 4 வாக்குகள் மிகையாக பெற்று இரண்டாம் தடவையாக ஜனாதிபதியாக லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 பெரிய வெள்ளிக் கிழமை   (Good Friday) யன்று தனது மனைவியுடன் "அவர் அமெரிக்கன் கசின்" என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தார். அவர் நாடகத்தை ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் (John Wilkes Booth) என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வைத்து சுட்டான். மறுநாள் காலை 56 வயதான லிங்கனின் உயிர் பிரிந்தது. பிரிந்து போன வட தென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன. தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது. ஆனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  அந்த மகிழ்ச்சிகரமான வெற்றியை கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதையான ஆபிரகாம் லிங்கன் அப்போது  இல்லை. 


(தொடரும்)


செ ஏ தரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,