விருத்தாசலத்தில் தடை உத்தரவை மீறி செயல்பட்டு வந்த ஒரு அரவை மில்லுக்கு தாசில்தார் கவியரசு சீல்

உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவல் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதன்காரணமாக       விருத்தாசலத்தில் தடை உத்தரவை மீறி செயல்பட்டு வந்த ஒரு அரவை மில்லுக்கு தாசில்தார் கவியரசு சீல் வைத்த போது எடுத்த படம்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கடலூர் ரோட்டில் உள்ள ஒரு அரவை மில், தடை உத்தரவை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் இன்று காலை அந்த அரவை மில்லுக்கு தாசில்தார் கவியரசு, நெய்வேலி நில எடுப்பு தாசில்தார் அந்தோணி ஆகியோர் திடீரென்று சென்று ஆய்வு செய்தனர். அப்போது, தடை உத்தரவை மீறி செயல்பட்டு வந்தது தெரிய வந்ததால், அந்த மில்லை தாசில்தார் கவியரசு சீல் வைத்தார். அவருடன், கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் இருந்தார்


செய்தியாளர். கடலூர். R. காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,