ஊரடங்கிலும் மாணவர்களை புத்தகம் படிக்க மொபைல் போன் வழியாக ஆர்வப்படுத்தும் ஆசிரியர்கள்

உலக புத்தக தினம்


  வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் என்ன ? 
  ஊரடங்கிலும் மாணவர்களை புத்தகம் படிக்க மொபைல் போன் வழியாக ஆர்வப்படுத்தும் ஆசிரியர்கள்  புத்தகங்கள் படிக்கும் மாணவர்களுக்கு பரிசு அறிவிப்பு 



தேவகோட்டை - ஊரடங்கு நேரத்திலும் மொபைல் போன் வழியாக மாணவர்களை ஆர்வப்படுத்தி புத்தகங்களை வாசிக்க சொல்லி வருகின்றனர் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்.ஊரடங்கு துவங்கும் நாளுக்கு முன்னதாக இப்பள்ளியில் 6,7,8 படிக்கும் மாணவர்களுக்கு வீட்டில் படித்து வர புத்தகங்கள் வழங்கப்பட்டது.


                                 தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் விடுமுறைக்கு முன்பு வீட்டில்  ஒவ்வொரு மாணவரும் படிக்கும் வகையில் மாணவர்களின் வீட்டுக்கு நான்கு ,நான்கு புத்தகங்கள் கொடுத்து படிக்க சொல்லி கொடுத்து அனுப்பினார்கள்.அதன் தொடர்ச்சியாக மாணவர்களின் வீட்டுக்கு ஆசிரியர்கள் மொபைல் போன் வழியாக பேசி மாணவர்களின் நலன் விசாரிப்பதோடு , புத்தகங்களையும் படிக்க சொல்லி வருகின்றனர். புத்தகம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கருப்பையா ,ஸ்ரீதர், முத்து மீனாள்,முத்து லெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.மாணவர்களுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில்  மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களில் படித்ததை கேட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.


 தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஊரடங்கு விடுமுறை துவங்கும் முன்பு படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,