விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில்  ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில்  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுக்க மார்ச் 24 தேதி முதல் மே 03 தேதி வரை ஊரடங்கு உத்தரவு மத்திய மாநில அரசு அறிவத்துள்ளது.



இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் தொழிற்சாலைகள் இயங்காமல் இருப்பதால் பொதுமக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இதனால் பொதுமக்களுக்கு அனைத்து பொருட்களும் கிடைக்கும் வகையில் வரும் 20ஆம் தேதிக்கு மேல்
 ஒரு சில தொழிற்சாலைகளை திறந்து நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 



இக்கூட்டத்தில் கடலூர் 
பிற்படுத்த நலத்துறை மற்றும் சமூகநலத்துறை ஆட்சியர் விக்னேஸ்வரன் விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் , நெய்வேலி நில எடுப்பு பிரிவு வட்டாட்சியர் அந்தோனிசாமி,விருத்தாசலம் வேளாண்மை துறை அலுவலர் சவிதா, மங்களூர் வேளாண்மைத்துறை இயக்குனர் பொறுப்பு பிரேமா சாந்தி நல்லூர் வேளாண்மை உதவி இயக்குனர் கீதா கம்மாபுரம் வேளாண்மை இயக்குனர் அமுதா விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு, திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல் வேப்பூர்,வட்டாட்சியர் கமலம் ,மற்றும்  வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் ,விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம்,கம்மாபுரம் வட்டார வளச்சி அலுவலர்கள் பிரேமா,தண்டபாணி மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் ,வட்டார மருத்துவர் வளர்மதி ,புலிகேசி,நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், நகர வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், நகர கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன்,
 மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு வரும் 20ஆம் தேதிக்கு மேல் ஒரு சில தொழில் நிறுவனங்கள் திறப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தினர்..


 கடலூர் மாவட்டம் செய்தியாளர் ஆர். காமராஜ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,