கர்ப்ப காலத்தில் குழந்தை

 















கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை


எந்த அளவில் இருக்கும்?+


ஒரு பெண் கர்ப்பமாகிவிட்டால்குழந்தையை கையில் எடுத்தும் கொஞ்சும் வரை அக்குழந்தையின் நினைவிலேயே இருப்பாள். கர்ப்ப காலத்தில் குழந்தை ஒவ்வொரு வாரமும் வளர்ச்சி பெறும். சொல்லப்போனால் குழந்தையின் வளர்ச்சி ஒரு அபூர்வமான ஒன்று என்றும் கூறலாம்.


 ஆம்ஒரு செல் மற்றொரு செல்லுடன் இணைந்துபின் அந்த செல்கள் பெருகிசில மாதங்கள் கழித்துகுழந்தையாக பிறக்கிறது என்றால் சாதாரணமான நிகழ்வா என்னஉங்களுக்கு கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த அளவில் இருக்கும் என தெரிந்து கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


            1-2 வார காலத்தில்கருமுட்டையானது விந்தணுவுடன் இணைந்துசிறிய கடுகு அளவில் இருக்கும். இந்நிலையில் கருவில் சுமார் 32 செல்கள் இருக்கும்.


            5-ம் வாரத்தில்அந்த கரு சற்று வளர்ந்து மிளகு அளவு இருக்கும். இந்த காலத்தில் தான் இரத்த நாளங்கள்இதயம்தண்டுவடம் மற்றும் மூளை வளர்ச்சி பெற ஆரம்பமாகும். இந்த வாரத்தில் கரு சுமார் 0.05 இன்ச் இருக்கும்.


            7 வாரத்தில் கரு 1/2 இன்ச்அதாவது ஒரு ப்ளூபெர்ரி அளவில் இருக்கும்.


            9 
வாரத்தில் உங்கள் குழந்தை செர்ரிப் பழ அளவில் இருக்கும். வாரத்தில் தான்கரு ஒரு உருப்பெற்ற கருவாகி இருக்கும்.


           15 வாரத்தில் குழந்தை ஒரு ஆப்பிள் அளவில்அதாவது இன்ச் இருக்கும். இந்த வாரத்தில் குழந்தை மெதுவாக நகர ஆரம்பிக்கும்.


 


            18 வாரத்தில் குழந்தை இன்ச் இருக்கும். 19 ஆவது வாரத்தில்குழந்தையின் கால்கள் வளர ஆரம்பிக்கும்.


            22 வாரத்தில் குழந்தை சுமார் 10 இன்ச் அளவில் இருக்கும். இந்த காலத்தில் குழந்தையின் நுரையீரல் வளர ஆரம்பமாகும்.


           30 வாரம் இந்த வாரத்தில் கருப்பையில் இருக்கும் குழந்தை தூங்குவதையும்விழித்துக் கொண்டிருப்பதையும் உணர முடியும். 30 வார காலத்தில் குழந்தை சுமார் 15 இன்ச் அளவில் இருக்கும்.


            40-42 வாரம் இது கர்ப்ப காலம் முடிவடையும் காலமாகும். இந்த காலத்தில் குழந்தை 20 இன்ச் அளவில் இருக்கும்.


 



 

 



 



 





செ ஏ துரைபாண்டியன்










 

 








 

 







 







 




 





 



 




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,