சென்னை: தமிழகத்திலும், ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்திலும், ஜூன் 30 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது இன்றுடன்( மே 31) முடிவடைகிறது. இந்நிலையில், மத்திய அரசு பல்வேறு தளர்வுகளுடன் நாடு முழுவதும் ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்தது. இதனடிப்படையில், தமிழகத்திலும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையிலும் தற்போதுள்ள ஊரடங்குஉத்தரவு ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், கீழ்கண்ட சில தளர்வுகளுடனும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள தடைகள் மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்.
* வழிபாட்டு தலங்கள், பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை
* நீலகிரி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா செல்லவும் தடை
* தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்கள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். எனினும், மருத்துவத்துறை, காவல்துறை, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் மற்றும் தனிமைபடுத்தப்படும் பணிகளுக்கு மட்டும் விலக்கு
* வணிக வளாகங்களுக்கு தடை நீடிக்கிறது
* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு திறக்கக்கூடாது. இந்நிறுவனங்கள் ஆன்லைன் வழி கல்வி கற்றல் தொடரலாம். அதனை ஊக்கப்படுத்தலாம்.
* மத்திய உள்துறை அமைச்சகத்தால், அனுமதிக்கப்பட்ட பணிகளை தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை நீடிக்கும்
*மெட்ரோ ரயில் / மின்சார ரயில் சேவை கிடையாது
* திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை
* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை
* மாநிலங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து
மேற்கண்ட கட்டுப்பாடுகள், தொற்றின் தன்மைக்கு ஏற்ப படிப்படியாக தளர்வு அளிvக்கப்படும்.latest tamil news


* திருமண நிகழ்ச்சிகளில் 50க்கு மேல் பங்கேற்க கூடாது.
* இறுதி ஊர்வலத்திற்கும் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.
* சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் சலூன்கள், அழகு நிலையம் செயல்பட அனுமதி
* வணிக வளாகங்கள் தவிர மிக பெரிய கடைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பஸ்கள் இயங்கும்.60 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்
* போக்குவரத்திற்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மண்டலங்களுக்கு இடையே செல்ல தடை நீடிக்கப்படுகிறது.
* பஸ்களில் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை
* மண்டலங்களுக்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை.
* பிற மண்டலத்திற்கு செல்லும் போது இ-பாஸ் முறை நீடிக்கும்
* மாநிலங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது.
* ஜூன் 8 முதல் தேநீர் கடைகள், உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுடன் நிபந்தனையுடன் அனுமதி
* வாடகை டாக்சிகள் 3 பேருடன் இயங்க அனுமதி
* அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,