இலக்கியச் சோலையிலே


 


இலக்கியச் சோலையிலே


 


சுமார் 36 ஆண்டுகளுக்கு முன் வந்த படத்தில் உள்ள, ஒரு பாடல், ஆடல், இசை, அபிநயங்கள்.  . நீங்களும் இலக்கியச் சோலையினுள் புகுந்து பாடலில் உள்ள வரிகளை, இசையை, நடனத்தை, நடிப்பை ஒரு சேர இரசியுங்களேன்.


... சா... மக மக சா
மக மக சா... சா...

அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
என் சிலம்பொலியும் புலம்புவதை கேள்

அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்

விரல் கொண்டு மீட்டாமல்
வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சமல்
கொதிக்கின்ற சோலை

பகலிரவு பல கனவு
இரு விழியில் வரும்பொழுது

அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்

ஆகாயம் இல்லாமலே
ஒரு நிலவு தரை மீது தல்லாடுது
ஆதாரம் இல்லாமலே
ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது

தாளத்தில் சேராத தனி பாடல் ஒன்று
சங்கீதம் காணாமல் தவிக்கின்றது
விடியாத இரவேதும் கிடையாது என்று
ஊர் சொன்ன வார்தைகள் பொய்யானது

வசந்தம் இனி வருமா
வாழ்வினிமை பெருமா
ஒரு பொழுது மயக்கம்
ஒரு பொழுது கலக்கம்
பதில் ஏதும் இல்லாத கேள்வி


படம்   வைதேகி காத்திருந்தாள்


நடிகர்கள்    விஜயகாந்த், ரேவதி


பாடலாசிரியர்  வாலி


இசை  இளையராஜா


பாடியவர்  எஸ். ஜானகி


ஆண்டு  1984


பாடலை காண





  

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,