சிலம்புச் செல்வர்  ம. பொ. சிவஞானம்

சிலம்புச் செல்வர்  ம. பொ. சிவஞானம்


 



தமிழ்த்தேசத் தந்தை என அழைக்கப்படும் . பொ. சிவஞானம் (சூன் 261906  பிறந்வர்


1956ஆம் ஆண்டில், தமிழர்களுக்கென தமிழ்நாடு தனி மாநிலம் படைத்ததால் தமிழ்த்தேசத் தந்தையாக போற்றப்படுபவர் ம.பொ.சிவஞானம் ஆவார்


. தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் இவர் ஒரு முக்கிய  இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார். இவர் .பொ.சி. என அறியப்படுபவர். 


        ம.பொ.சி. இந்த மூன்றெழுத்துக்கு அபூர்வமான காந்த சக்தி உண்டு. சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு அரசியலிலும் சரி, இலக்கிய உலகிலும் சரி இந்த மூன்றெழுத்து மனிதர் செய்த சாதனைகள் அபாரமானவை. இவரிடம் என்ன காந்த சக்தியா இருந்தது? அன்றைய தமிழ் உணர்வுள்ள இளைஞர்களை இவர் அப்படி கவர்ந்திழுத்து வைத்துக் கொண்டார். அவர் மேடைப் பேச்சை, அப்படியே பதிவு செய்து அச்சிட்டால், ஒரு சிறிதுகூட இலக்கணப் பிழையின்றி, சொற்றொடர் அழகாக அமைந்து, வாய்விட்டுப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைந்திருக்கும். தோற்றத்தில் மட்டுமென்ன? அந்த ஆழ்ந்து ஊடுறுவும் கரிய கண்கள். அபூர்வமான மீசை. படியவாரப்பட்ட தலை, வெள்ளை வெளேரென்ற தூய கதராடை, முழுக்கைச்சட்டை, தோளில் மடித்துப் போடப்பட்ட கதர் துண்டு. மேடையில் அவர் நிற்கும் தோரணையே ஒரு மாவீரனின் தோற்றம் போலத்தான் இருக்கும்


                சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது.


       மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதே ம. பொ. சி. என்று ஆயிற்று. சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியிலுள்ள சால்வன் குப்பம் என்ற பகுதியில் 26/6/1906 அன்று பிறந்தார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவரின் பள்ளிப்படிப்பு மூன்றாம் வகுப்போடு முடிந்தது. குழந்தைத் தொழிலாளியாக நெசவுத் தொழில் செய்தார். பின்னர் அச்சுக் கோக்கும் பணியில் சேர்ந்து . இத்தொழிலை அவர் அதிக நாள் செய்து வந்தார். 31 ஆம் வயதில் திருமணம் நடந்து இவருக்கு  ஒரு மகன் இரு மகள்கள் எனக் குழந்தைகள்.


 பின்னர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைவாசம், காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். எழுநூறு நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தார். ம.பொ.சி. தன் சிறைவாசத்தைச் சிலப்பதிகாரத்தைக் கற்றுக்கொள்ளப் பயன்படுத்தினார்.  சிறைவாசம் அவருக்களித்த பரிசு தீராத வயிற்றுவலி. வாழ்நாளின் இறுதிவரை அவரை அந்த வயிற்று வலி வதைத்தது.


1945 ஆம் ஆண்டு ம.பொ.சி. தமிழ்முரசு எனும் திங்கள் இதழைத் தொடங்கி . ஒன்றரை ஆண்டுக்காலம் அவ்விதழ் மூலம் புதிய தமிழகம் எனும் தனது கருத்தாக்கத்தை ம.பொ.சி. பரப்புரை செய்துவந்தார்.


மற்றும் 'செங்கோல்' என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார்.


“கிராமணி குலம்” (1934-37) மாதமிருமுறை, தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் “பாரதி” மாதப் பத்திரிகை (1955-56), “தமிழ் முரசு” (1946-51), “தமிழன் குரல்” (1954-55), “செங்கோல்” (1950-1995) ஆகிய பத்திரிக்​கைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். ​மேலும் இவர் தமிழி​சைப் பணி, நூலகப் பணி என்று பல்​வேறுவிதமான பணிக​ளைச் ​செவ்வ​னே ​செய்தார்.



சுதந்திர இந்தியாவில், சுதந்திர தமிழரசு அமைந்தே தீரவேண்டும்; மற்றும் தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும்; அத்தகைய சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டு என தமிழ்த்தேசிய முழக்கமிட்டவர் ம.பொ.சிவஞானம் ஆவார்.


'தமிழ்நாட்டைத் தாய்நாடாகவும், தமிழ் மொழியை தாய்மொழியாகவும் கொண்டு வாழும் தமிழ்நாட்டின் நிரந்தரக் குடிகள் அனைவரும் தமிழராகக் கொள்ளப்படுவர். தமிழர் எங்கெல்லாம் பெருவாரியாக வசிக்கிறார்களோ அந்தத் தொடர்ச்சியான பிரதேசங்கள் தமிழ்நாடாகக் கொள்ளப்படும்' என்றும், தமிழர் தனித்தேசிய இனம், தமிழ்நாடு தமிழர்களின் தாயகம் என்றும் கூறி 1946ஆம் ஆண்டில், தமிழ்த்தேச விடுதலைப் போராட்டத்தை தொடங்கி வைத்தவர் ஐயா ம.பொ.சி. அவர்கள் ஆவார். 


மொழிவழியாக உருவாகும் தமிழ்நாட்டோடு சேர்க்கப்பட வேண்டிய பகுதிகளாக ஐயா ம.பொ.சி. வரையறை செய்த தமிழர் பகுதிகளாவன:


மலையாளிகளின் ஆதிக்க திருவிதாங்கூர் அரசில் இருந்த தமிழர் மிகுதியாக வாழ்ந்து வந்த தென்பகுதி வட்டங்கள்;


கன்னட ஆதிக்க மைசூர் அரசில் இருந்த கோலார் தங்கவயல் பகுதி;


பிரெஞ்சுப் பேரரசின் பிடியில் இருந்த பாண்டிச்சேரி - காரைக்கால்;


திருப்பதி மலைக்குத் தெற்கேயுள்ள சித்தூர் மாவட்டத் தமிழ்ப் பகுதிகள்;


புதுக்கோட்டை மன்னராட்சிப் பகுதி;


தமிழீழத்தின் யாழ்ப்பாணப் பகுதி


ஆகிய தமிழர் தாயக நிலங்களை உள்ளடக்கியதாகும். 


மேற்கண்ட தமிழர் தாயகத்தை படைக்க தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தை 1946ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாளில் தொடங்கினார். அது பற்றி ம.பொ.சி. தனது தமிழ்முரசு இதழில்


நவம்பர் மாதம் 21ஆம்தேதி மாலை தமிழ்முரசு காரியாலயத்தில், தமிழரசுக் கோரிக்கையை ஆதரிப்போரின் கூட்டம் ஒன்று கூடியது. நகரின் பல பாகங்களிலிருந்தும் சுமார் 70 பேருக்கு மேல் வந்திருந்தனர். திரு. ம.பொ.சிவஞானம் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தலைவர் முகவுரையில், தமிழகத்திற்கு வெளியே திருவிதாங்கூர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, இலங்கை முதலிய பிரதேசங்களில் தமிழர் படும் அல்லல்களையும், அவர்கள் விஷயத்தில் தமிழ் நாட்டவர் கொள்ளவேண்டிய அக்கறையையும் அவசியத்தையும் விவரித்துக் கூறினார்.


மேலும், பிரிட்டிஷ் மந்திரி சபையின் திட்டத்தின்படி தமிழ்நாடு ‘ஏ’ பிரிவில் சேர்க்கப்பட்டதால் ஏற்படும் கேடுகளையும் எடுத்துக்காட்டினார். நெடுநேர ஆலோசனைக்குப்பிறகு “தமிழரசுக்கழகம் “ என்ற பெயருடன் ஒரு கழகம் நிறுவப்பட்டது. “  என்று செய்திக்குறிப்பு வெளியிட்டார்.


ஆகஸ்ட் 81954 ஆம் ஆண்டில், ம.பொ.சி. காங்கிரசிலிருந்து விலகிய அவர் மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்ற பெயரை வைக்கப் போராடினார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் சென்னையைக் கேட்டபோது, அதனை எதிர்த்துப் போராடித் தமிழகத் தலைநகராகச் சென்னையை ஆக்கியது இவரே


       . திருவேங்கடத்தையும் (திருப்பதி) தமிழகத்துடன் இணைக்கப் போராடினார்; அதில் வெற்றி கிடைக்கவில்லையானாலும்  அந்தப்போராட்டத்தால் திருத்தணி தமிழகத்துக்கு கிடைத்தது. குமரி மாவட்டம், செங்கோட்டை, பீர் மேடு, தேவிக்குளம் போன்றவை தமிழகத்துக்கு கிடைக்கப் போராடினார். குமரியும் செங்கோட்டையும் தமிழகத்துக்கு கிடைத்த போதும் பீர் மேடு,  தேவிக்குளம் கேரளத்துடன் இணைக்கப்பட்டன.


பாரதியின் எழுத்துக்கள்தான் இவரை . சங்க இலக்கியங்களில் ஒன்றினார்


இவரின்  தமிழ் அறிவையும், புலமையையும் வளர்த்த பெருமை பாரதியையே சாரும். பாரதியை பற்றி ம.பொ.சி. பல ஆராய்ச்சி நூல்களை எழுதியுள்ளார்:



  • வள்ளலாரும் பாரதியும் [1965].

  • எங்கள் கவி பாரதி [1953].

  • பாரதியாரும் ஆங்கிலமும் [1961].

  • பாரதி கண்ட ஒருமைப்பாடு [1962].

  • உலக மகாகவி பாரதி [1966].

  • பாரதியார் பாதையிலே [1974].

  • பாரதியின் போர்க்குரல் [1979].

  • பாரதியார் பற்றிய .பொ.சி. பேருரை [1983].

  • என்னை வளர்த்த பாரதி[2013] .பொ.சி. கூறிவிக்கிரமன் (எழுத்தாளர்), நாகராஜன் தொகுத்தது


சிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமை இவரையேச்  சாரும். இந்த காவியத்தின்  மேல் கொண்ட ஆழ்ந்த காதலால் தன் மகள்களுக்கு கண்ணகி, மாதவி என பெயர் சூட்டினார்



 




சிலப்பதிகாரத்தை உலகறியச் செய்ய வேண்டும் என்கிற வேட்கையில் சிலப்பதிகார மாநாடுகள் நடத்தினார். சிலம்பின் மேல் இவர் கொண்டிருந்த காதலை அறிந்த ரா.பி.சேதுப்பிள்ளை, நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் 'சிலம்புச் செல்வர்' என்னும் பட்டத்தை ம.பொ.சிக்கு வழங்கினார்.



சிலப்பதிகாரம் பற்றி இவர் . எழுதிய நூல்கள்:



  • சிலப்பதிகாரமும் தமிழரும் [1947]

  • கண்ணகி வழிபாடு [1950]

  • இளங்கோவின் சிலம்பு [1953]

  • வீரக்கண்ணகி [1958]

  • நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை) [1961]

  • மாதவியின் மாண்பு [1968]

  • கோவலன் குற்றவாளியா? [1971]

  • சிலப்பதிகாரத் திறனாய்வு [1973]

  • சிலப்பதிகார யாத்திரை [1977]

  • சிலப்பதிகார ஆய்வுரை [1979]

  • சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு [1980]

  • சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் [1990]

  • சிலம்பில் ஈடுபட்டதெப்படி? [1994]


                 தமிழ் வரலாற்றில் முதன்முதலாக சிலப்பதிகார மாநாடு 1950 ல் சென்னை இராயபேட்டை காங்கிரஸ் திடலில் ந டைபெற்றது. ரா.பி.சேதுப்பிள்ளை தொடங்கி வைக்க , டாக்டர். மு.வரதராசனார் தலைமை வகித்த இந்த மாநாட்டில்  காமராஜர் உட்பட அனைத்து கட்சி தமிழ் அறிஞர்களும் இதில் கலந்து கொண்டனர்


இவர் . எதிர்பார்த்ததைப் போல சிலப்பதிகார விழா மாபெரும் சர்வ கட்சி தமிழ் கலாச்சார விழாவாக மாறியது. அதற்கடுத்த ஆண்டு முதல், தனது  தமிழரசு கழகம் மூலம் சிலப்பதிகார விழாவை ஆண்டுதோறும் கொண்டாடினர்.


 


இவர்தான் வ. உ. சிதம்பரனார் செய்த தியாகங்களை உலகறியச் செய்தவர் . வ.உ.சி. யின் வரலாற்றைப் பற்றி, இவர். எழுதிய 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் நூல் பெருமை வாய்ந்தது. இதனால்தான் பின்னாளில் வ.உ.சி., 'கப்பலோட்டிய தமிழன்' என்றே தமிழ்நாடு முழுவதும் போற்றப்பட்டார். பி. ஆர். பந்துலு அவர்கள் இவரின்  நூலைத் தழுவி கப்பலோட்டிய தமிழன் என்னும் திரைப்படத்தை இயக்கினார்.நடிகர்திலகம் வ. உ. சிதம்பரனாராக


மக்களுக்கு தோன்றினார்


வ .உ.சி பற்றிய இவர்  எழுதிய நூல்கள்:



  • கப்பலோட்டிய தமிழன் [1944]

  • தளபதி சிதம்பரனார் [1950]

  • கப்பலோட்டிய சிதம்பரனார் (விரிவான பதிப்பு) [1972]


 


        1939 ஆம் ஆண்டு சென்னை ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் , வ.உ.சிதம்பரனாருக்கு சிலை வைக்க முயன்று அச்செலவிற்கு பணம் படைத்தோரின் உதவி நாடி அம்முயற்சி தோல்வியுற்றதால் மனம் வருந்தி, ஹாமில்டன் வாராவதியருகிலுள்ள கட்டைத் தொட்டிக் கடைக்காரர்களிடம் சென்று கடைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கையேந்தி பணம் பெற்றும், டிராம்வே தொழிலாளர் சங்கம், ராயபுரம் அலுமினியம் தொழிலாளர் சங்கம் போன்ற பல்வேறு சங்கங்களின் உதவியோடும், சிலை வைத்ததாகக் குறிப்பிடுகிறார்[


இவரின்  வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் வரலாற்று நூல், கட்டபொம்மனின் புகழை எங்கும் பரவ செய்தது. இந்நூலைத் தழுவி பி.ஆர். பந்துலு வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் திரைப்படத்தை இயக்கினார்.


இந்த படத்திலும் கட்டபொம்மனாக நடிகர் திலகம் நடித்தார் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது


 கட்டபொம்மன் பற்றி இவரின்  நூல்கள்:



திருவள்ளுவர் பற்றி . எழுதிய நூல்கள்”



  • வள்ளுவர் வகுத்த வழி [1952]

  • திருவள்ளுவரும் காரல் மார்க்சும் [1960]

  • திருக்குறளில் கலை பற்றிக் கூறாததேன்? [1974]


இராமலிங்க அடிகள் பற்றி . எழுதிய நூல்கள்:



  • வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு[1963]

  • வள்ளலாரும் பாரதியும்[1965]

  • வள்ளலார் வளர்த்த தமிழ்[1966]

  • வள்ளலார் வகுத்த வழி[1970]

  • வள்ளலார் கண்ட சாகாக் கலை[1970]

  • வானொலியில் வள்ளலார்[1976]

  • வள்ளலாரும் காந்தியடிகளும்[1977]

  • வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (பள்ளிப் பதிப்பு) [1963]


1962-ல் ம.பொ.சி எழுதிய 'வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு' என்னும் நூலுக்குச் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இவருடைய 'விடுதலைப் போரில் தமிழகம்' என்னும் நூலே இந்திய விடுதலைப் போரில் தமிழர்கள் ஆற்றிய பங்கை எடுத்துரைத்த முதல் நூல்.


இவரின் ஆங்கில புலமைக்கு இந்த நூல்கள்



  • The Great Patriot V.O. Chidambaram Pillai

  • The First Patriot Veera Pandia Katta Bomman

  • The Universal Vision of Saint Ramalinga


இவர் நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார்.


சிறப்புகள்
தமிழக அரசால் வைக்கப்பட்டுள்ள
ம. பொ. சி அவர்களின் திருவுருவச் சிலை
இடம்: செவாலிய சிவாஜி கணேசன் சாலை பாண்டி‍ பஜார் சாலை சந்திப்பில்
சிலம்புச் செல்வர்' என்ற விருது சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது.
சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தன.
மதுரைப் பல்கலைக் கழகம் 'பேரவைச் செல்வர்' என்ற பட்டம் வழங்கியது.
மத்திய அரசு பத்மஸ்ரீ விருது தந்து போற்றியது.
தமிழக மேலவையின் தலைவராக பணியாற்றினார்.
'
சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன் மற்றும் கல்விக் குழுத் தலைவராக பணியாற்றினார்.
ம. பொ. சிவஞானத்தைப் பற்றிய நூல்கள்
சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யுடன்..., மு. மாரியப்பன், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை.
அறிஞர்கள் பார்வையில் ம. பொ. சி., ம.பொ.சி.மாதவி பாஸ்கரன், பத்ம ஸ்ரீ  டாக்டர் ம.பொ.சி.அறக்கட்டளை, சென்னை


 


இவர் அக்டோபர் 31995 அன்று விண்ணுலகை எய்தினார்


 


அவர் பிறந்த நாளில் அவரை போற்றுவோம். அனைத்து தமிழக மக்களும் அவருக்கு கடமைப்பட்டவர்கள் என சொல்லவேண்டும்


வாழ்க அவர் புகழ்



தமிழகத்தின் வரலாற்றில் ஏன் இந்திய வரலாற்றில் இவரின் வாழ்க்கை மிக  முக்கிய பங்கு வகித்துள்ளது என்றால் அது மிகையாகாது


 



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி