வங்கியில் 2,426 நிறுவனங்கள் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் ரூ.1.47 லட்சம் கோடி கொள்ளை
புதுடில்லி: வங்கியில் 2,426 நிறுவனங்கள் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் ரூ.1.47 லட்சம் கோடியை கொள்ளையடித்துள்ளதாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (ஏஐபிஇஏ) கடந்த இரு நாட்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டிருந்தது.
நாட்டில் உள்ள அரசு வங்கிகளில் மட்டும் 2,426 நிறுவனங்கள் கடன் பெற்று ரூ.1.47 லட்சம் கோடியை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றன. இதில் ரூ.200 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் 147 நிறுவனங்கள் இருக்கின்றன. இந்தக் கடன் தொகையின் மதிப்பு ரூ.67 ஆயிரத்து 609 கோடியாகும். இதில் முதல் 10 இடங்களில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்ற நிறுவனங்களாகும்.
நாட்டை ஏமாற்றி ஒருவர் கைலாய நாடு உருவாக்கியுள்ளதாக, அறிவித்துள்ளார், ஆன்மிகவாதி என்ற போர்வையில். அவர் எங்கிருக் கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற பதில் போல் இந்தப் பொருளாதாரக் குற்றவாளிகளும் தப்ப விடக் கூடாது |
Comments