பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா

பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா..



: இந்தியாவை தேவையில்லாமல் சீண்டி தற்போது சீனா பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது.


1962 பின் ஏற்பட்ட மிகப்பெரிய மோதல்  இந்தியாவுக்கும்  சீனா இடையில் தற்போது இருக்கும் மோதல் எனலாம்


. ஆனால் இப்போது நடக்கும் சண்டை என்பது வெறும் சில கிலோ மீட்டர் பகுதிக்காக நடக்கும் சண்டை எனதான் பார்வையாளர்களுக்கு தெரியுமே தவிர உண்மையில் . இது வெறும் நிலத்திற்கான சண்டை இல்ல. இந்தியாவின் நிலங்களை சீனா அபகரிக்க முயல்வதே ஆகும்


   , இந்தியாவின் நிலத்தை அபகரித்து, தனது பறந்து விரிந்த தன்மையை அதிகமாக்குவது.ம் மற்றும்  இந்தியாவை ஆசியாவில் வளரவிடாமல் தடுத்து அதன், வலிமையை மட்டுப்படுத்துவது. இந்த இரண்டுதான் சீனாவின் தற்போதைய மோதலுக்கு காரணம்


 


  சீனாவின்  தற்போதைய கனவான  உலகம் மொத்தத்தையும் கட்டுப்படுத்தும் வல்லரசு நாடாக மாறவேண்டும் என்பதே


இதற்காக அது  தனது பொருளாதாரத்தை உயர்த்தி, சந்தையை மேம்படுத்தி, உலகை பொருளாதார ரீதியாக கட்டுப்டுத்துவதும் மற்றும்  ராணுவ ரீதியாக அழுத்தம் கொடுத்து, ஆக்கிரமிப்பு செய்து படைகள் மூலம் அண்டை நாடுகளை கட்டுப்படுத்துவது.


  இது என்ன புதுசாக என நினைக்காதீர்கள்


இதையேதான்  அமெரிக்கா செய்து வந்து கொண்டிருப்பதை தற்போது  சீனாவும் செய்கிறது. அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளில் மட்டும்தான் தன் ஆதிக்கத்தை காண்பிக்கிறது


சீனாவோ  எல்லா நாடுகள் மீதும் இந்த ஆக்கிரமிப்பை த செய்கிறது.


பிரிட்டன் செய்த காலனி ஆதிக்கத்திற்கும் இதுவும் ஒன்றுதான் எனலாம்


. அமெரிக்காவும், பிரிட்டனும் ராணுவம் மூலம் மட்டுமே செடயததை சீனா ராணுவம் மட்டுமில்லாமல் , பொருளாதாரம் மூலமும் மற்ற நாடுகளை வீழ்த்த துடிக்கிறது


  ஆனால் சீனாவாவின் எண்ணம் ஈடேறவில்லை என்பதுதான் தற்போது நிலை


 பிரிட்டன்,அமெரிக்கா இரண்டும் தனது பிக்பாஸ் ராஜதந்திரத்தில் வெற்றி பெற்றது


. ஆசியாவில் இருக்கும் நாடுகளை எல்லாம் கட்டுப்படுத்தி, பின் உலகை கட்டுப்படுத்தலாம் என்பதுதான் சீனாவின் மாஸ்டர் பிளான். இதில் தொடக்கத்தில்  வெற்றிபெற்ற பின் தற்போது அது முடியவில்லை


அப்போது ரஷ்யா, தென் கொரியா என்ற இரண்டு நட்பு நாடுகளை பெற்றதும்  பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம்,நேபாளம், கனடா என்று முக்கியமான நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததும், சீனா தனது உலக சர்வாதிகாரத்தில் வென்று விடுமோ என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.


 எப்போது இந்தியாவை சீண்டியதோ அப்போதில் இருந்தே சீனா தோல்வியை தழுவி வருகிறது.


இந்தியாவை சீண்டிய பின் சீனாபல விதமான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.


. இந்த  எதிர்ப்புகள் சீனாவின் உலகை ஆளும் கனவை தகர்த்ததால் சீனா தற்போது விழி பிதுங்கி நிற்கிறது


கொரனோ பாதிப்புக்குபின்  உலக அளவில் நாடுகள் எல்லாம் சீனாவிற்கு எதிராக கிளம்பிவிட்டன.


,இந்த  உலக நாடுகள் சீனாவை விடுத்து இந்தியாவில் முதலீடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டன


 உள்நாட்டுக்கு உள்ளேயே சீனாவிற்கு எதிராக அழுத்தம்.


ஏற்பட்டதும் சீனாவை நிலை குலைய செய்து விடடது


. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், வியட்னாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் என்று பல நாடுகளுடன் கடல் ரீதியாகவும், ராணுவ எல்லை ரீதியாகவும் மோதி வரும் சீனாவை அந்த நாடுகள் சுதாரித்து கொண்டு சீனாவின் மோதலை சமாளிக்க முடிவு கட்ட எண்ணிவிட்டன


. ஏசியன் (ASEAN) குழுவில் இருக்கும் நாடுகள் மட்டும் சீனாவிற்கு எதிராக திரும்பி உள்ளது. ஏசியன் (ASEAN) என்பது இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, மியான்மர், புருனோய், லாவோஸ் ஆகிய நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஆகும்.


இன்னொரு பக்கம் அமெரிக்கா சீனாவிற்கு எதிராக இந்தியாவை ஆதரித்து படைகளை அனுப்புகிறது. ஆஸ்திரேலியா சீனா மீது பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுக்கிறது. ஜப்பான் இந்தியாவிற்கு ஆதரவாக கடற்படையை அனுப்பி வருகிறது. இன்னொரு பக்கம் பிரிட்டனும் இந்தியாவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்கிறது .


சீனா  தனது திட்டத்தில் தோல்வியை தழுவிட்ட நிலையில்  சீனாவில் இருந்து முதலீடுகள் வேகமாக வெளியே செல்கிறது.


 சீனாவில் முதலீடு செய்த அமெரிக்க நாடுகள் எல்லாமே வேகமாக தற்போது இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறன்றன


 சீனாவின் ராணுவ பலம் முதலில் உடைந்தது. தற்போது பொருளாதர முதலீடுகள் காரணமாக சீனாவின் பொருளாதார பலம் உடைந்து நொறுங்கி உள்ளது.


இன்னொரு பக்கம் உள்நாட்டு குழப்பம் அந்த நாட்டில் ஏற்பட தொடங்கி உள்ளது.


 சீனாவிற்கு எதிராக உள்நாட்டு மக்களே கொதித்து எழ தொடங்கி உள்ளனர். இந்தியாவை சீண்டியதால், 40+ ராணுவ வீரர்களை இந்தியாவிடம் பறிகொடுத்த காரணத்தாலும் சீன மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சீன ராணுவமும் அந்நாட்டு அரசு மீது கடும் கோபத்தில் உள்ளது.


அதேபோல் ஹாங்காங் மக்களின் தொடர் போராட்டம், அது தொடர்பான உலக அழுத்தமும் சீனாவை நிலைகுலைய வைத்து உள்ளது. இவையெல்லாம் லாம் சேர்ந்து சீனாவின் அதிபர் ஜிங்பிங்கிற்கு எதிராக பெரிதாக வெடிக்கும் என்று கூறுகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் இது புரட்சியாக மாற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் சீனாவின் உலகை ஆளும் கனவும் கொஞ்சம் கொஞ்சமாக நொறுங்க தொடங்கிவிட்டது



 


 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி