விநாயகரின் அறுபடை வீடுகள்
விநாயகரின் அறுபடை வீடுகள் பற்றி அறியலாம் .
முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பது உங்களுக்கு தெரியும். அவரின் அண்ணனான கணபதிக்கும் அறுபடை வீடுகள் இருப்பது தெரியுமா? ஓம்கார வடிவான கணபதிக்கும் சிறப்பான ஆறு படை வீடுகள் இருக்கின்றன. அந்த ஆறுபடை வீடுகளையும் தரிசிக்கலாமே
ருப்பது மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் நுழைவு மண்டபத்தில் வீற்றிருக்கும் சித்தி விநாயகர் சந்நிதி. மீனாட்சி அம்மன் சந்நிதியின் நுழைவு வாயிலின் இடது புறமாக இந்த கணபதி கம்பீரமாக காட்சி அளிக்கிறார். மாணிக்கவாசக பெருமான் பாண்டிய மன்னன் விருப்பப்படி குதிரை வாங்கச் செல்கையில் இந்த சித்தி விநாயகரை வணங்கி விட்டு சென்றதாகத் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. இதனால் இந்த விநாயகர் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானவர் என்று அறியலாம். சகல காரியங்களிலும் வெற்றி அளிக்கும் சித்தி விநாயகராக இவர் அருளாட்சி செய்கிறார். இவரை வணங்கினால் புகழும், பெருமையும் சேரும். அவப்பெயர் நீங்கும். காசி படைவீடு வேழமுகத்தானின் படைவீடுகளில் ஐந்தாவதாக இருப்பது காசியில் இருக்கும் துண்டி ராஜ கணபதி சந்நிதி. காசி மஹாத்மியம் என்ற நூலை பாடி பரவசப்படும் கணபதி இவர். காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு முன்பு துண்டி கணபதியின் ஆலயம் உள்ளது. சிறிய கோயில் என்றாலும் புகழ் பெற்று உள்ளது. சிறிய தெருவில் கடைகளுக்கு இடையே கணபதி அமர்ந்த நிலையில் செந்தூர நிறத்தில் காணப்படுகிறார். இவருக்கு செந்தூர வர்ணத்தில் குங்கும அபிஷேகம் செய்வதால் இப்படி காட்சி அளிக்கிறார். பக்தர்கள் 'துண்டி மகராஜ்' என்று பரவசத்தோடு அழைக்கிறார்கள். காசிக்கு வருபவர்கள் இந்த கணபதியிடம் உத்தரவு பெறாமல் சிவனை வணங்கவோ, ஊரை விட்டுச் செல்லவோ கூடாது என்பது மரபு. ஞானத்தின் உருவான இவர் தீட்சா கணபதியாக இருந்து, ஞானத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார். காசிக்க்ச் சென்று துண்டி பிள்ளையாரை வணங்க முடியாதவர்கள் பிள்ளையார்பட்டி கணபதியை வணங்கி அதே அருளைப்பெறலாம் என்று ஆன்றோர்கள் சொல்கிறார்கள். திருநாரையூர் படைவீடு தும்பிக்கையானின் படைவீடுகளில் ஆறாவதாக இருப்பது திருநாரையூர். இந்தத் தலத்தில் இருக்கும் புகழ்பெற்ற பொள்ளா பிள்ளையார் சந்நிதி. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூரில் ஆறாவது படைவீடாகத் திகழ்கிறது. திருநாரையூர் சவுந்தர்யேஸ்வரர் ஆலயத்தின் இடப்பக்கம் உள்ள சந்நிதியில் அருளும் பிள்ளையார், உளி கொண்டு செதுக்கப்படாதவர் என்பதால், பொள்ளா பிள்ளையார் என்று போற்றி வணங்கப் பெறுகிறார். நம்பியாண்டார்நம்பி மூலம் ராஜராஜ சோழனுக்கு தேவாரத் திருமுறைகள் கிடைக்கச் செய்தவர் இந்த பிள்ளையார்தான். இவரை வணங்கிட, கல்வியும் ஞானமும் மேம்படும் என்பது ஐதீகம். திருவண்ணாமலை, திருக்கடவூர், மதுரை, விருத்தாசலம், காசி அல்லது பிள்ளையார்பட்டி, திருநாரையூர் என ஆறு படைவீடுகளில் கோயில் கொண்டு பக்தர்களைக் காக்கும் கணநாதரை தரிசித்து அருள் பெறுவோம்.
![](https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.15752-0/p280x280/110324461_622520682034945_9005982998251102267_n.jpg?_nc_cat=104&_nc_sid=b96e70&_nc_ohc=QzrnZ3TUlzYAX9UQFiQ&_nc_ht=scontent-bom1-1.xx&_nc_tp=6&oh=7f20903dfa085f709ca1e97b201ce0ad&oe=5F4043EF)
![](https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.15752-0/p280x280/110660192_716886592433935_3204567767189897024_n.jpg?_nc_cat=110&_nc_sid=b96e70&_nc_ohc=GzdEzgQdvpAAX8LujH1&_nc_ht=scontent-bom1-1.xx&_nc_tp=6&oh=3b569b03aa5a27e0278f2098ee214164&oe=5F3D1F1B)
![](https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.15752-0/p280x280/110332487_335987950901367_8343315705824301446_n.jpg?_nc_cat=102&_nc_sid=b96e70&_nc_ohc=taw8OWWV7uoAX_Wc2c-&_nc_ht=scontent-bom1-1.xx&_nc_tp=6&oh=543af512349110e16135392776d19b14&oe=5F3F598C)
![](https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.15752-0/p280x280/112813288_738058547031237_524805858033794322_n.jpg?_nc_cat=106&_nc_sid=b96e70&_nc_ohc=bdi4qx67mmEAX8fR-al&_nc_ht=scontent-bom1-1.xx&_nc_tp=6&oh=1e99759e773a768c0ca1ad2dd4d6b403&oe=5F40A86A)
![](https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.15752-0/p280x280/114899950_626559691577168_6587694785457987142_n.jpg?_nc_cat=101&_nc_sid=b96e70&_nc_ohc=8WPxKjDX0XMAX8UcRq9&_nc_ht=scontent-bom1-1.xx&_nc_tp=6&oh=d8c48632320d5595fd5e282b8d128f2d&oe=5F3D6F6F)
![](https://scontent-bom1-2.xx.fbcdn.net/v/t1.15752-0/p280x280/113162480_2455942884703096_3449745713164915955_n.jpg?_nc_cat=109&_nc_sid=b96e70&_nc_ohc=hnNs4X_xwa8AX89NqzZ&_nc_ht=scontent-bom1-2.xx&_nc_tp=6&oh=3a3b24b9b0a463dd5ea361b051c85ed0&oe=5F3CFFB5)
![Manjula Yugesh](https://scontent-bom1-2.xx.fbcdn.net/v/t1.0-1/cp0/p60x60/41719372_135487067399061_578855973960024064_n.jpg?_nc_cat=111&_nc_sid=7206a8&_nc_ohc=GDpKGh81pu0AX_BwjZb&_nc_ht=scontent-bom1-2.xx&oh=71a65c611c40f5d5225afda10da4c5cb&oe=5F3D134B)
Comments