கொரோனாவுக்கு எதிரான போரில் புத்தரை நினைவுகூர்ந்த ஐ.நா. சபை

 

கொரோனாவுக்கு எதிரான போரில்


புத்தரை


நினைவுகூர்ந்த ஐ.நா. சபை


04-07-2020



புத்தர்பிரானின் போதனைகள்கொரோனாவுக்கு எதிரான போரில் நாடுகளும்மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதை நினைவுபடுத்துவதாக ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.


புத்தர்


நியுயார்க்:

புத்தர்பிரான் பிறப்பையும், ஞானம் அடைந்ததையும் குறிக்கும் வகையில் புத்த பூர்ணிமா எப்போதும் மே மாதம் கொண்டாடப்படும். இந்த முறை, கொரோனா வைரஸ் பரவலால் இந்த நாளை ஐ.நா. சபை தாமதமாக கொண்டாடியது. இதையொட்டி ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் ஒரு செய்தி விடுத்துள்ளார்.


 


 


 


அதில் அவர் கூறி இருப்பதாவது:-


கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த காலகட்டத்தில், புத்தர்பிரான் வலியுறுத்திய ஒற்றுமையும், பிறருக்கு சேவை செய்வதும் முன் எப்போதையும் விட இப்போது முக்கியமானது. உலகளாவிய ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று நோயின் சமூக, பொருளாதார விளைவுகளை நாடுகளால் சமாளிக்க முடியும். புத்தர்பிரானின் போதனைகள், கொரோனா வைரஸ் விடுக்கிற சவால்களை சந்திப்பதற்கு நாடுகளும், மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதை நினைவுபடுத்துகின்றன. நாம் நமது ஆற்றல்களையும், நிபுணத்துவத்தையும் இணைப்பதின்மூலம் மட்டுமே இன்று நம் உலகில் உள்ள மிகப்பெரிய பலவீனங்களை சரி செய்ய முடியும். சர்வதேச ஒத்துழைப்பின்மூலம் மட்டுமே பொருளாதார, சமூக பாதிப்புகளை எளிதாக்குவோம்.









 

 

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி