சிவப்பு ராஜ்மா சுண்டல்











சிவப்பு ராஜ்மா சுண்டல்


 

 

நவ என்றால் ஒன்பது என்று மட்டுமல்லாமல், புத்துணர்ச்சி என்ற பொருளும் உண்டு. நவராத்திரி ஒன்பது நாள்களும் பூஜை செய்து தேவியை வழிபட்டால், நம் மனத்தில் புத்துணர்ச்சி பெருகும். மனம் செம்மையாகும். செம்மையான மனத்தின் எண்ணங்களும் செம்மையாகும். செயல்களும் செம்மையாகும்; வாழ்க்கையும் செம்மையுடன் சிறப்பாகும். நவகிரகங்களினால் ஏற்படக்கூடிய சகலவிதமான தோஷங்களையும் நீக்கும். எனவே நவராத்திரி காலங்களில் அம்பிகையைப் பக்தி சிரத்தையுடன் வழிபட வேண்டும் என்கிறார்கள் புண்ணிய புருஷர்கள். அம்பிகைக்கு நைவேத்தியம் செய்யும் இந்த சிவப்பு ராஜ்மா சுண்டல், அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் சுண்டலாகும்.

தேவையானவை

சிவப்பு ராஜ்மா - ஒரு கப்

கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய்- 5

தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊறவிடவும். பிறகு குக்கரில் வேகவிடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து வேக வைத்த ராஜ்மா, உப்பு சேர்த்துக் கிளறவும்.

தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.


























































o





 












 














Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,