95 ஆண்டுகளுக்கு முன்பே சமஸ்கிருத திணிப்பை தடுத்தவர்!

 பனகல் அரசர் நினைவு நாள் இன்று நவம்பர் டிசம்பர் 16

95 ஆண்டுகளுக்கு முன்பே சமஸ்கிருத திணிப்பை தடுத்தவர்!


மத்திய பா.ஜ.க. அரசு, இந்தியா முழுமையும் சமஸ்கிருதத்தைத் திணிக்க அதி தீவிரமாய் முயன்றுகொண்டிருக்கிறது. ஆனால், சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் (சென்னை மாகாணம்) முதல்வராக இருந்த ஒருவர் கட்டாய சமஸ்கிருதத்துக்குத் தடைவிதித்திருக்கிறார்!
அவர் – இராமராய நிங்கர். “பனகல் அரசர்’ என்றால் பட்டென்று புரியும்.
ஆந்திர மாநிலம் வாரங்கல் அருகில் உள்ள பனகல் எனும் ஊரின் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர், பனகல் அரசர். ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தில் நீதி கட்சி ஆட்சி நடைபெற்ற்றுக்கொண்டிருந்த சமயத்தில்,அப்போதைய முதலமைச்சர் சுப்பராயலு உடல்நிலை காரணமாக பதவி விலகினார். இதையடுத்து ஏப்ரல் 11, 1921 அன்று முதல்வராக பதவியேற்றார் பனகல் அரசர்.
அப்போது மருத்துவப் படிப்பு படிக்கவேண்டுமானால் சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. “மருத்துவத்துக்கும் சமஸ்கிருத மொழிக்கும் என்ன தொடர்பு? ஆங்கில வழியில் கற்றுத்தரப்படும் மருத்துவப்படிப்புக்கு எதற்காக சமஸ்கிருத பாடம்?” என்று பலரும் ஆதங்கப்பட்டனர் என்றாலும், இந்த விதி அமலில் இருந்தது.
இந்த நிலையில்தான், “மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை’ என்று உத்தரவிட்டார் முதல்வராக இருந்த பனகல் அரசர். இதற்கு செல்வாக்கு மிகுந்த குறிப்பிட்ட சமுதாயத்தினரிமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருந்து சாதித்தார் பனகல் அரசர்.
இதன் மூலம், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரே மருத்துத்துறையில் கோலோச்சிக்கொண்டிருந்த நிலை மாறி, அனைத்து சமூகத்தவரும் மருத்துவராகும் வாய்ப்பு ஏற்பட்டது.
இது மட்டுமல்ல… கோயில் சொத்துக்களை ஒருசிலரே அனுபவித்து வருவதைத் தடுக்கும் வகையில் கோயில்களுக்கென தனி துறையை உருவாக்கியதும் இவரே. இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றினார்
அப்போது இதற்கு பல தரப்பினரின் எதிர்ப்புகளை சமாளித்து அந்த சட்டத்தை நிறை வேற்றினார். இந்து அறநிலையத்துறை உரு வாகியதன் தொடக்கம் இதுதான். கோயில் என்பது அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவானது.
பனகல் அரசர் சிலை ( சென்னை தி.நகர் பனகல் பூங்கா)
பனகல் அரசர் சிலை ( சென்னை தி.நகர் பனகல் பூங்கா)
தொழில்துறையை ஊக்குவிக்கவும் சட்டத்தைக் கொண்டுவந்தார்: வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்.
தலைநகரமான சென்னையை விரிவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, சைதாப் பேட்டைக்கும் சேத்துப்பட்டுக்கும் இடையில் இருந்த பெரிய ஏரியை வற்றச்செய்து, அங்கு பெரிய குடியிருப்புத் திட்டத்தை உருவாக்கியவர் இவரே. அந்த பகுதிதான் இன்றைய தியாகராயர் நகர். புதுடில்லி போல இப்பகுதி திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
அவரது நினைவாக உருவாக்கப்பட்டதுதான் தி.நகரில் உள்ள பனகல் பூங்கா.
நன்றியுடன் நினைவு கூர்வோம்
இணையத்தில் இருந்து எடுத்தது

4
2 comments
Like
Comment

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி