ஒளிக்கற்றுக் குழவி

ஒளிக்கற்றுக் குழவி
---கவிதை

















தொட்டுக் கொள்ளும் தூரம்தான்
இருந்தும்
இருவரும் சேர்ந்தே தனிமையின்
ஆழ்ந்த இருளுக்குள்
தொடுதிரைகளின் ஒளிக்கற்றையில்
உன்னை நீயும் என்னை நானும்
நம்மை நேரமுமாக மாற்றி மாற்றித்
தேடுகிறோம்.
அதன் குழைந்த
சிணுங்கள்கள் தனித்திருத்தலை
நினைவுருத்தித் தொட்டணைக்கக்
கெஞ்சுகிறது.
ஒரு பசியுள்ள சிசுவைப் போல
அதன் கணத்த அழுகையானது
விரல்காம்புகளில்
விசும்புகிறது.
சுரக்கும் உள்ளுணர்வுகளையெல்லாம்
அதன் மென்மையான நாவிடுக்கில்
கசிந்துவிட்டு வற்றிய இருபெரும்
என்புகளாக காலத்தைக் கட்டியணைத்து
உறங்கச்செல்வோம் வா..

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,