தேசத்தை கட்டமைப்பதில் காவல் துறையின் பங்கு "

 பள்ளி மாணவ மாணவியர்க்கு " தேசத்தை கட்டமைப்பதில் காவல் துறையின் பங்கு " என்ற தலைப்பில் நடந்த தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டி 73 பள்ளிகளிலிருந்து 316 மாணவ , மாணவிகள் பங்கேற்பு . முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ , மாணவிகளுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் வெற்றிக்கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் (3012.2020).





சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் , இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் , மண்டல அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் காணொளி வாயிலாக, " தேசத்தை கட்டமைப்பதில் காவல் துறையின் பங்கு " என்ற தலைப்பில் தமிழிலும் , " Role of Police in Nation Building " என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.


சென்னை பெருநகரில் உள்ள 73 பள்ளிகளிலிருந்து 316 மாணவ மாணவியர்கள் இப்பேச்சு போட்டியில் பங்கேற்றனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால் , இ.கா.ப அவர்கள் இன்று ( 30.12.2020 ) காலை வேப்பேரி , ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு இறுதிப் பேச்சுப்போட்டியில் தமிழ் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவ, மாணவிகளுக்கும், ஆங்கிலப்பேச்சுப்போட்டியில் 3 மாணவ , மாணவிகளுக்கும், மண்டல அளவில் வெற்றி பெற்ற 15 மாணவ , மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் மேற்படி பேச்சு போட்டியில் நடுவர்களாக பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் முனைவர் திரு . A. அமல்ராஜ் , இ.கா.ப , ( தலைமையிடம் ) , இணை ஆணையாளர்கள் திரு . R. சுதாகர் , இ.கா.ப ( மேற்கு ) , திருமதி . S. மல்லிகா , ( தலைமையிடம் ) துணை ஆணையாளர் திரு.பெரோஷ்கான் அப்துல்லா , ( நிர்வாகம் ) காவல் அதிகாரிகள் மற்றும் மாணவ , மாணவிகள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,