எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் கட்சி தொடங்குகிறார் சிவாஜிராவ் கெய்க்வாட்
எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் கட்சி தொடங்குகிறார்
சிவாஜிராவ் கெய்க்வாட்?
எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் சிவாஜிராவ் கெய்க்வாட் தனது க்டசியை
தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின்
பிரபல நடிகரான சிவாஜிராவ்
கெய்க்வாட் என்கிற ரஜனிகாந்த் தனது அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பை டுவிட்டர் சமூக வலைதளம் மூலமாக கடந்த 3-ந் தேதி உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் இவர் தொடங்க இருக்கும் புதிய கட்சி பெயர் ‘மக்கள் சேவை கட்சி’ என்றும், அந்த கட்சிக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் தனது கட்சிக்கு ‘பாபா முத்திரை’ சின்னத்தை அவர் கேட்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டிசம்பர் 31-ம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக
அறிவித்துள்ள நிலையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்சி தொடங்கும் தேதியை டிசம்பர் 31-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எம்.ஜி.ஆர் ஆட்சியை கொடுப்பேன் என்று . எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் கட்சி தொடங்க ஆயத்தமாக வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments