சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

 சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் வழக்கமாக டிசம்பர் மாதத்தில் முடிவடைந்தாலும், வருகிற 10-ந்தேதி வரை பருவமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.  
இந்நிலையில் சென்னையில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,