ஷேக்ஸ்பியர்

ரோமியோ ஜூலியட் நாடகம் பாலியல் எண்ணம் செறிந்த, பருவகால வயது, காதல் மற்றும் மரணம் இவற்றினாலான புகழ்பெற்ற காதல் வீரத் துன்பியல் நாடகம். இந்த நாடகத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான கெம்பே பீட்டர் எனும் வேலைக்காரன் வேடம் ஏற்றிருந்தார். ரோமியோ ஜூலியட் கதை காலம் கடந்த காதல் கதை. உலகில் மொத்தம் பத்து காதல் கதைகளை பட்டியலிட்டால் அதில் இந்த ரோமியோ ஜூலியட் கதை கண்டிப்பாக இடம் பெறும். இரண்டு தனிக்குடிகளுக்கு இடையில் உள்ள பகைமை இரண்டு காதலர்களை வாழ்வில் ஒன்று சேரவிடாமல் மரணத்தில் ஒன்று சேர்க்கும் கதை. .
இதில் வரும் மேல்மாடக் காட்சி இன்றளவில் பெரிதும் ரசிக்கபட்டும், பலரது கற்பனைக்கு ஒரு உந்துதலாகவும் இருந்து வருகிறது.
Comments