நதியில்லா ஓடமாய்
நதியில்லா ஓடமாய்
- கவிதை
-மு. மாஜிதா.
நதியில்லா ஓடமாய்
எரிந்த காகிதமாய் /
நினைவுகள் அலையோடு
நேர்த்தியாய் துயலோடு /
நீங்கா தடையமோ
நித்த கிதமோ /
கண்ணீர் சிதறிடவே
வாழ்வு பதறிடவே/
நான் மெய்யோடும்
கரை கற்பனையோடும் /
உறவோ முடிவுரையோ
நானோ நிர்கதியோ /
உறவின்றி எரிந்தது
தனிமையோ வந்தது /
நேசமே பிழையானது
வாழ்வோ தனித்தானது /
உறவாடி சென்றாய்
துண்டித்து வென்றாய் /
தந்த காயங்களே
ஓயாத ரணங்களே /
நீயின்றி மனம்தான்
சிறகிழந்த பறவைதான் /
நீயின்றி பயணமே
நதியில்லா ஓடமே..... !!!
மு. மாஜிதா.
Comments