நதியில்லா ஓடமாய்

 நதியில்லா ஓடமாய் 

                                 -  கவிதை

                                                          -மு. மாஜிதா.

                                                                     


                                                                              










நதியில்லா ஓடமாய் 

எரிந்த காகிதமாய் /

நினைவுகள் அலையோடு 
நேர்த்தியாய் துயலோடு /

நீங்கா தடையமோ 
நித்த கிதமோ /

கண்ணீர் சிதறிடவே 
வாழ்வு பதறிடவே/

நான் மெய்யோடும் 
கரை கற்பனையோடும் /

உறவோ முடிவுரையோ 
நானோ  நிர்கதியோ  /

உறவின்றி எரிந்தது 
தனிமையோ வந்தது /

நேசமே பிழையானது 
வாழ்வோ தனித்தானது /

உறவாடி சென்றாய் 
துண்டித்து வென்றாய் /

தந்த காயங்களே 
ஓயாத ரணங்களே /

நீயின்றி மனம்தான் 
சிறகிழந்த பறவைதான் /

நீயின்றி பயணமே 
நதியில்லா ஓடமே..... !!!

மு. மாஜிதா. 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,