மழை கொட்டித் தீர்க்கப் போகிறது
நடப்பு மாதம் மட்டுமின்றி அடுத்து வரும் நாட்களிலும் மழை கொட்டித் தீர்க்கப் போகிறது என்று
வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு நல்ல மழைப்பொழிவு கிடைத்துள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகியவற்றால் நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. நடப்பு ஜனவரி மாதத்தில் படிப்படியாக மழையின் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை நாளுக்கு நாள் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன. மறுபுறம் பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த சூழலில் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (ஜனவரி 13) வெளியிட்டுள்ள செய்தி, மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கிறது. அதாவது, தமிழகத்தில் பருவமழை முடிவுக்கு வராமல் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது குளிர்காலமே இல்லை என்ற சூழல் காணப்படுகிறது. வரும் 17ஆம் தேதிக்கு பிறகு மழையின் அளவு குறையும்.
இந்த சூழலில் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (ஜனவரி 13) வெளியிட்டுள்ள செய்தி, மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கிறது. அதாவது, தமிழகத்தில் பருவமழை முடிவுக்கு வராமல் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது குளிர்காலமே இல்லை என்ற சூழல் காணப்படுகிறது. வரும் 17ஆம் தேதிக்கு பிறகு மழையின் அளவு குறையும்.
பின்னர் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதையடுத்து மீண்டும் மழை தொடங்கும். இது ஜனவரி மாத இறுதி முதல் பிப்ரவரி வரை நீடிக்கும். தற்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் மழைப்பொழிவானது வரலாறு காணாதது. கடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 200 முதல் 300 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. புயல் எதுவுமின்றி டெல்டா பகுதிகளில் 100 முதல் 200 மில்லிமீட்டர் மழை பெய்திருக்கிறது.
பின்னர் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதையடுத்து மீண்டும் மழை தொடங்கும். இது ஜனவரி மாத இறுதி முதல் பிப்ரவரி வரை நீடிக்கும். தற்போது நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் மழைப்பொழிவானது வரலாறு காணாதது. கடலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 200 முதல் 300 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. புயல் எதுவுமின்றி டெல்டா பகுதிகளில் 100 முதல் 200 மில்லிமீட்டர் மழை பெய்திருக்கிறது
.
Comments