ஞாயிறு திரை மலர் 07.02.2021

    ஞாயிறு திரை மலர் 07.02.2021
















========================================================






“உலக நாட்டியப் பேரொளி” என்று புகழ் பெற்ற நடிகை பத்மினியின் திருமணம், கேரளாவில் உள்ள குருவாïர் கோவிலில் 1961-ம் ஆண்டு மே 25-ந் தேதி சிறப்பாக நடைபெற்றது. மாப்பிள்ளை டாக்டர் ராமச்சந்திரன், கேரளாவில் உள்ள தலைச்சேரியைச் சேர்ந்தவர். சென்னையில் மருத்துவக் கல்லூரியில் படித்து, எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர். ஆலப்புழையில் சொந்தமாக “கிளினிக்” நடத்தி வந்தார்.
குருவாயூரில், குருவாயூரப்பன் கோவிலில் நடைபெற்ற பத்மினியின் திருமணத்தைக் காண, தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரெயில்களிலும், தனி பஸ்களிலும், வேன்களிலும் குருவாïருக்குச் சென்றனர்.
தில்லானா மோகனாம்பாள்
திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று பத்மினி அறிவித்து இருந்தபோதிலும், நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணத்துக்குப்பின் சில சிறந்த படங்களில் அவர் நடித்தார். “தில்லானா மோகனாம்பாள்” ஒரு திரைக்காவியமாக அமைந்தது. 1967-ல் வெளி வந்த “இருமலர்கள்” ஒரு காதல் காவியம். இதில் சிவாஜிகணேசன், பத்மினி, கே.ஆர்.விஜயா ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர். வியட்னாம்வீடு (1970) படத்திலும் சிவாஜி – பத்மினி நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.
“தேனும் பாலும்” படத்தில் சிவாஜிகணேசனுடன் பத்மினியும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் “சித்தி”யிலும் பத்மினியின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. “திருவருட்செல்வர்”, “பேசும்தெய்வம்”, “குலமா குணமா” முதலிய படங்களிலும் பத்மினி நடித்தார்.
சிவாஜியுடன் அதிக படங்கள்
தமிழ் கதாநாயகர்களில் சிவாஜி கணேசனுடன்தான் பத்மினி அதிக படங்களில் நடித்துள்ளார். அவர்கள் ஜோடியாக நடித்த படங்கள் 59. எம்.ஜி.ஆருடன் 12 படங்களிலும், ஜெமினிகணேசனுடன் 12 படங்களிலும் இணைந்து நடித்தார்.
எம்.ஜி.ஆர் – மஞ்சுளா நடித்த “ரிக்ஷாக்காரன்” படத்தில் பத்மினி குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
அமெரிக்காவில் உள்ள நிïஜெர்சி நகரில், டாக்டர் ராமச்சந்திரன் சொந்தமாக ஆஸ்பத்திரி (கிளினிக்) நடத்தி வந்தார். எனவே, கணவருடன் அமெரிக்கா சென்ற பத்மினி அங்கு ஒரு நாட்டியப் பள்ளியை தொடங்கினார். டாக்டர் ராமச்சந்திரன், கடந்த 1981-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மகன் பிரேம் ஆனந்த்
கணவர் இறந்த துயரம் பத்மினியை வெகுவாக பாதித்தது. எனினும் தன் ஒரே மகன் பிரேம் ஆனந்த்தை நன்கு படிக்க வைக்க வேண்டும், அவன் எதிர்காலத்தை நன்கு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார்.
அதேபோல் மகனை உயர் பட்டப்படிப்பு படிக்க வைத்தார். இப்போது பிரேம் ஆனந்த், அமெரிக்காவில் இருந்து வரும் உலகப்புகழ் பெற்ற “டைம்” ஆங்கிலப் பத்திரிகையில் பத்திரிகையாளராகவும், புகைப்பட கலைஞராகவும் வேலை பார்க்கிறார்.
பிரேம் ஆனந்துக்கு திருமணம் ஆகி விட்டது. மனைவி கேரளாவைச் சேர்ந்தவர். டாக்டருக்கு படித்தவர். இந்தத் தம்பதிகளுக்கு ஒரே மகன் (அதாவது, பத்மினிக்கு ஒரே ஒரு பேரன்). அவர் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறார்.
இணையத்தில் இருந்து எடுத்தது ====================================================================












ஸ்ரீதர் படமென்றாலே காதல் படம், சோகப் படம், சீரியஸ் படம் என்றே இருந்தது. ‘ஒரு காமெடிப் படம் எடுத்தால் என்ன?’ என்று தோன்றியதன் விளைவு... காதலிக்க நேரமில்லை’. முத்துராமன், ரவிச்சந்திரன், நாகேஷ் எனப் பலரும் நடித்திருந்தார்கள். ஆனாலும் டைட்டிலில் முதலில் இடம் பெற்றது... டி.எஸ்.பாலையாவின் பெயர்.

படம் முழுக்க முத்துராமன் வர மாட்டார். ரவிச்சந்திரன் வரமாட்டார். நாகேஷ் வரமாட்டார். ஆனால், முத்துராமனுடன், நாகேஷுடன், ரவிச்சந்திரனுடன், வி.எஸ்.ராகவனுடன், காஞ்சனா -ராஜஸ்ரீயுடன் என படம் நெடுக வலம் வருவார். நம் வயிறைப் பதம் பார்ப்பார்.

வாக்கிங் ஸ்டிக்கை பிடித்துக் கொண்டு, வேஷ்டியை பிடித்துக் கொண்டு, இந்தப் பக்கம் குதித்து, அந்தப் பக்கம் குதித்து, பாலையா செய்த சேட்டைகள்... சிரித்துச் சிரித்து கண்ணீரே வந்துவிடும் நமக்கு. ‘அசோகர் உங்க மகருங்களா?’, ‘அவர் பாக்கெட்ல நாலஞ்சு கப்பல் ஓடுது, கப்பல் ஓடுது’ என்பாரே... ‘பெத்த தகப்பன் கேக்கறேன், பெத்த தகப்பன் கேக்கறேன்’ என்பன போன்ற பல இடங்கள்... நடிப்பில் உச்சம் தொட்டிருப்பார். ஒவ்வொரு முறையும் பாலையாவுக்காகவே படம் பார்த்தவர்கள்தான் ஏராளம். அந்த கதை சொல்லும் காமெடியின் போது, படம் பார்க்கிறவர்கள், நாகேஷைப் பார்க்கவே மாட்டார்கள். பாலையாவின் முகத்தையும் எக்ஸ்பிரஷனையுமே பார்த்துச் சிரித்தார்கள்.

நன்றி: இந்து தமிழ் திசை 

=======================================================


குணசித்திரத்தால் கட்டிப்போட்ட எஸ்வி ரங்காராவ், 1969ல் எம்ஜிஆரின் நம்நாடு படத்தில் மோசமான அரசியல்வாதி ஆளவந்தாராக நடித்தபோது பலருக்கும் வியப்பே மேலோங்கியது.
ஆனால் அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் மக்களின் அறியாமையை வைத்து காசாக்குவார்கள், அரசியலில் வெற்றிபெற என்னென்ன தகிடுதத்தங்களை செய்வார்கள் என்பதையெல்லாம் அவர் நடிப்பில் வெளிப்படுத்தை காணும்போது மிரட்சி ஏற்படாமல் போகாது.
”ஆண்டவனே மனிதனா பிறந்து தேர்தல்லு நின்னு ஜெயிச்சா லும் அவனும் லஞ்சம் வாங்காம இருக்கமுடியாது.”
“ஏழைங்ககிட்ட இருந்து காப்பாத்துறேன்னு பணக்காரங்ககிட்டேயிருந்து காசு வாங்கனும், பணக்காரன்கிட்டயிருந்து காப்பாத் துறேன்னு ஏழைங்க கிட்ட வோட்டை வாங்கனும். அப்புறம் ரெண்டுபேரையும் சுத்தமா மறந்துடணும்.”
“”ஒரு கெட்ட காரியத்தை செஞ்சிமுடிச்சி கொள்ளையடிக்க னும்னா எப்பவும் ஒரு நல்லவனை முன்னால நிறுத்தனும்.” இப்படி நம்நாடு படத்தில் எஸ்வி ரங்காராவ் அடிச்சிவிடும் வசனங்கள் எவர்கிரீன் மாஸ்..
சர்வதேச, தேசிய விருது என பல தரப்பட்ட விருதுகளை குவித்த எஸ்வி ரங்காராவ் தமிழில் கடைசியாக 1974ல் நடித்த அன்புச்சகோதரர்கள் படத்தில் ‘’முத்துக்கு முத்தாக சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக’’ என பாடி குணசித்திர நடிப்பால் கண்கலங்க வைத்துவிட்டுத்தான் போனார்.
உலகநாயகன் கமலஹாசன் சொல்வார். சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய குறை எஸ்வி ரங்காராவுடன் நடிக்கும் கிடைக்காமல் போனது என்று..
எஸ்வி ரங்காராவ்க்கு மனக்குறை என்றால் ஷேக்ஸ்பியராக நடிக்கவேண்டும் என்ற ஆசை கடைசிவரை நிறைவேறாமலேயே போய்விட்டதுதான்.

=================================================


"நடிகை சுஜாதா” இவரை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். உடலை காட்டினால் தான் சினிமாவில் இருக்க முடியும் என நினைத்தவர்கள் மத்தியில் தனது மரணம் வரை கவர்ச்சி காட்டாமல் நடித்த ஒரே நடிகை.
உடலை காட்டி எப்போதுமே உழைக்க கூடாதென ஆரம்பத்திலேயே நினைத்ததாக அவர் பல பேட்டிகளில் கூறி இருந்தார்.
சுஜாதாவின் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் ஒரு துளியேனும் சந்தோஷம் இல்லை என்றே சொல்ல முடியும். சுஜாத்தாவின் தந்தை கேரளாவை சேர்ந்தவர்.
ஆனால் இலங்கை யாழ்ப்பாணம் என்ற இடத்தில் தொழில் நிமித்தமாக குடியேறினார்.
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை என்ற இடத்தில் பிறந்த குழந்தை தான் சுஜாதா. ஆரம்ப பாடசாலை கல்வியை தெல்லிப்பழையில் தொடங்கிய சுஜாதா அவரது தந்தையின் ஆசிரியர் பணி இடம் மாற்றம் காரணமாக இலங்கை காலி என்ற இடத்திற்கு சென்றார். அங்கு தனது பள்ளிப் படிப்பை தொடர்ந்தார்.
சிறு வயதிலேயே துடிப்பு மிக்க சுஜாதா ஒரு விளம்பரத்தில் நடித்ததன் விளைவாக சிங்கள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைக்க கேட்ட போது சுஜாதாவின் தந்தை படிப்பு முக்கியம் நடிப்பு அல்ல என தடை செய்தார்.சுஜாதாவின் 14 வது வயதில் மீண்டும் சொந்த ஊரான கேரளாவில் குடியேறினார்கள்.
அதன் பின் சுஜாதாவிற்கு மேடை நாடக வாய்ப்பு வந்தது தந்தை மறுத்தாலும் தாயின் அனுமதியுடன் நடிக்க அந்த நாடகம் மிக பெரிய ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து அவள் ஒரு தொடர்கதை வாய்ப்பு வந்தது. தந்தையின் பேச்சு தாயிடம் எடுபடவில்லை. சுஜாதா நடிக்க ஆரம்பித்தார் அதன் பின் தான் விளவு புரிந்தது.
பணத்தை கண்டதும் சுஜாதாவின் தாயார் பேயாக மாறினார். வரும் அத்தனை வாய்ப்புகளையும் எடுக்கும் படி கட்டாயப்படுத்தினார். ஓய்வின்றி நடிக்க சொல்லி தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மனமுடைந்து போனார் சுஜாதா. அப்போது அவரது அம்மாவின் பார்வை பணத்தின் மீது மட்டுமே இருந்தது.
இந்த நிலையில் மேல் வீட்டில் குடி இருந்தவருடன் காதல் ஏற்பட பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார். பிறந்த வீட்டை விட புகுத்த வீடு கொடுமையின் உச்சமானது.
இணையத்தில் இருந்து எடுத்தது


-------------------------------------------------------------------------------
அரிய புகைப்படங்கள்



















==========================================================




















1958–59களில் நான் தேவர் பிலிம்சின் ‘‘வாழ வைத்த தெய்வம்’’ படத்திற்கு முதன் முறையாக கதை – வசனம் எழுதி, அதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்ததைத் தொடர்ந்து, என்னை எப்படியாவது சிவாஜிகணேசன் நடிக்கும் படங்களுக்கு எழுதச் செய்து விடவேண்டும் என்ற எண்ணத்தில் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் சேர்ந்து திட்டமிட்டு அதில் முனைப்பாக இருந்தனர். என் அதிர்ஷ்டமும், யோகமும் அவர்கள் இருவருடைய வடிவங்களாக வந்தன! ‘‘பதிபக்தி’’, ‘‘பாகப்பிரிவினை’’ ஆகிய வெற்றிப்படங்களின் மூலம் தொடர்ந்து சிவாஜி நடிக்கும் படங்களை இயக்கிப் புகழேணியில் ஏறிக்கொண்டிருந்த டைரக்டர் ஏ.பீம்சிங்கிடம் என்னைப்பற்றி சாவித்திரியும், சிவாஜியிடம் ஜெமினியும் பரிந்துரைத்து, என்னை எழுத வைக்கவேண்டும் என்று ஏற்பாடு.அந்தச் சமயத்தில்தான் ‘‘பாசமலர்’’ படத்தில் நடிப்பதற்கு ஜெமினியும் சாவித்திரியும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சாவித்திரி பீம்சிங்கிடம் என்னைப்பற்றிக்கூறி, ‘‘குடும்பக் கதைகளுக்கு அவர் மிக நன்றாக வசனம் எழுதுவார். அவரையே ‘பாசமலர்’ படத்திற்கு எழுதச் சொன்னால் நன்றாக இருக்கும்’’ என்று கூற, அதற்கு அவர், ‘‘நீங்கள் சொன்னால் அது சரியா இருக்கும். எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை. சிவாஜி ஒப்புக்கொள்ளணும். அவ்வளவுதான்’’ என்று சொல்லிவிட்டார்.
படம் ‘‘அதை சிவாஜிகிட்டே அவர் (ஜெமினி) சொல்லிக்குவாரு’’ என்றார் சாவித்திரி.
1959–ம் ஆண்டில் ஒருநாள். அன்றைக்கு ஜெமினிக்கும் சாவித்திரிக்கும் ஷூட்டிங் இல்லை. அதனால் நான் சாவித்திரி வீட்டிற்குச் சென்றேன். மூவரும் டிபன் சாப்பிட்டு முடித்து ‘கேரம்’ ஆடத் தொடங்கினோம். சாவித்திரி ஜெமினியைக் கேட்டார்:–
‘‘என்னங்க? பாசமலர் டயலாக் விஷயம் சிவாஜிகிட்டே சொல்லிட்டீங்களா?’’
ஜெமினி:– சொன்னேன். ‘புதுப்பையன்னு சொல்றே. பார்க்கலாம்’னு இழுக்குறான். அதோட (என்னைக்காட்டி) இவன் வேற சிவாஜிகிட்டே வரமாட்டேங்குறான்.
சாவித்திரி (என்னிடம்):– ‘‘ஏன் போகமாட்டேங்குறீங்க?’’
நான்:– ‘‘அண்ணி! அது பெரிய யூனிட்! நான் புதுசு. சிவாஜி என்னை ஏதாவது குறைவா பேசிட்டார்னா, அதைக்கேட்டு நான் பொறுக்கமாட்டேன். பதிலுக்கு ஏதாவது சூடா சொல்லிடுவேன். என்னைப்பத்தி ஒனக்கு நல்லா தெரியும். வீண் வம்பு எதுக்கு? வேண்டாம். எனக்கு தேவர் பிலிம்ஸ் இருக்கு. டப்பிங் படங்கள் இருக்கு. அது போதும்.’’
சாவித்திரி:– அதெல்லாம் சிவாஜி ஒண்ணும் சொல்லமாட்டாரு. அப்படிப் பாத்தா எப்படி முன்னேற முடியும்? நான் சொல்றதைக் கேளுங்கள். பேசாம இவரோட போங்க. கால்ஷீட்டெல்லாம் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க. திடீர்னு வேற ஒரு ரைட்டரை ‘பிக்ஸ்’ பண்ணிட்டாங்கன்னா, எங்க முயற்சி வீணாப்போயிடும். (ஜெமினியிடம்) இதோ பாருங்க. சிவாஜி எங்கே இருக்கார்னு தெரிஞ்சிக்கிட்டு, இவரை அழைச்சிக்கிட்டுப்போயி அறிமுகப்படுத்தி ‘பிக்ஸ்’ பண்ணிடுங்க. இப்பவே ரொம்ப லேட்டு. வளத்தாதிங்க.
ஜெமினி:– ‘‘சரி. இப்போ ஷூட்டிங்ல இருந்தாலும் இருப்பான். பேசமுடியாது. பன்னெண்டு மணிக்கு மேல ‘லஞ்ச்’ டயத்துக்கு முன்னால அழைச்சிக்கிட்டுப் போறேன்.’’
நான்:– ‘‘அண்ணே! அவசியமா? வேண்டாமே!’’
ஜெமினி:– நீ சும்மாருப்பா. நான் பாத்துக்குறேன்.’’
ஜெமினி, சிவாஜி பிலிம்சுக்கு போன் பண்ணி அவர் அடையாறு நெப்டியூன் ஸ்டூடியோவில் இருப்பதாக அறிந்து கொண்டார்.
மதியவேளை! வலுக்கட்டாயமாக ஜெமினி என் கையைப்பிடித்து இழுத்துச்சென்று அவர் காரின் முன்சீட்டில் தள்ளி உட்கார வைத்து அவரே ஓட்டிக்கொண்டு போனார்.அடையாறு நெப்டியூன் ஸ்டூடியோ! குறிப்பிட்ட ஒரு மேக்–அப் அறை! கதவைத் தட்டிவிட்டு ஜெமினி உள்ளே சென்றார். நான் அவரைப் பின்தொடர்ந்தேன்.
சிவாஜி சாப்பிட்டு முடித்த நிலையில் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். அன்றைக்குத்தான் நடிகர் திலகத்தை நான் நேருக்கு நேராகப் பார்த்தேன். என் மனதிற்குள் மகிழ்ச்சி மலர்ந்தது!
சிவாஜி ஜெமினியைப் பார்த்து, ‘‘வாடா’’ என்று வரவேற்றார்.
(சிவாஜியைவிட ஜெமினி எட்டு வயது மூத்தவர். ஜெமினி பிறந்தது 1920–ல். சிவாஜி 1928. ஆனாலும் அவர் ஜெமினியை ஒருமையில்தான் அழைப்பார்.)
சிவாஜி:– (என்னைப்பார்த்து அலட்சியமாக) இவன் யாரு?
ஜெமினி:– அதாம்பா. ஏற்கனவே ஒங்கிட்டே சொன்னேன் பாரு – ஆரூர்தாஸ். இவன்தான்.
சிவாஜி (என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு):– ‘‘ஆரூர்தாஸ்! ஆரூர்னா....’’
நான்:– ‘‘திருவாரூர்.’’
சிவாஜி:– அட! நம்ம ஜில்லாக்காரன்! சினிமாவுக்குப் புதுசா வந்திருக்கே போலிருக்கு. இப்போ தேவர் பிலிம்சுக்கு எழுதுறதாவும், குடும்பக்கதைகளுக்கு நல்லா வசனம் எழுதுவேன்னும் இவன் சொன்னான். சாவித்திரியும் சொன்னதா பீம்சிங் சொன்னாரு.
அப்பா ஆரூரான்! இது ரொம்ப பெரிய படம். நான், இவன், சாவித்திரி நடிக்கிறோம். பீம்சிங் டைரக்ட் பண்றாரு. கண்ணதாசன் பாட்டு. விஸ்வநாதன் ராமமூர்த்தி மியூசிக். எல்லாம் பெரிய செட்டு! நீ சின்னப்பையன். தாங்குவியா?’’
(‘தாங்குவியா’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அவர் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டால் என்னைச் சுட்டதுபோல ‘சுளீர்’ என்றது.)
நான் அவருக்குச் சொன்னேன்:– ‘‘அண்ணே! மடல் பெரிது தாழை. மகிழ் இனிது கந்தம். உடல் சிறியர் என்றிருக்க வேண்டாம். கடல் பெரிது மண்ணீருமாகா – அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும்.’’
சிவாஜி:– ‘‘இதுக்கு என்னா அர்த்தம்?’’
நான்:– ‘‘மடல் பெரிது தாழை – தாழம்பூவோட மடல் பெரிசா இருக்கும். பெண்கள் ஜடையோட சேர்த்து வைச்சிப் பின்னிக்குவாங்க. அடுத்த நாளே அது வாடி வதங்கிப் போயிடும். எடுத்து எறிஞ்சிடுவாங்க. மகிழ் இனிது கந்தம் – மகிழம்பூ பாக்குறதுக்கு சின்னதா இருக்கும். பெண்கள் ஊசி நூல்ல கோர்த்து தலையிலே வச்சிக்குவாங்க, சாமி படத்துக்குப் போடுவாங்க... அது வாடிப்போனாலும் வாசனை போகாது.
கடல் பார்க்கிறதுக்குப் பெரிசா இருக்கும். ஆனால் உப்புத்தண்ணி. அதைக்குடிக்க முடியாது. அந்தக் கடலுக்குப் பக்கத்தில் ஒரு சின்ன ஊத்து தோண்டினால் அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம். இன்னொண்ணு சொல்றேன்.’’
சிவாஜி:– ‘‘சொல்லு.’’
நான்:– ‘‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும். உருள் பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து.’’
சிவாஜி:– ‘‘இது என்னா?’’
நான்:– ‘‘திருக்குறள்!’’
சிவாஜி:– ‘‘என்னா சொல்றாரு உன் திருவள்ளுவரு?’’
நான்:– ‘‘ஒருவருடைய உருவத்தைப் பார்த்து அவரை இகழாமல் இருக்கணும். ஏன்னா உருள்கின்ற பெரிய தேருக்கு சின்ன அச்சாணி காரணமா இருக்கிறது மாதிரியானவுங்களும் உண்டு. இன்னொரு குறள் சொல்லட்டுமா?’’
சிவாஜி:– ‘‘சொல்லு.’’
நான்:– ‘‘கொக் கொக்க கூம்பும் பருவத்து. மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து.’’
சிவாஜி:– ‘‘அப்படின்னா?’’
நான்:– ‘‘கூம்பி, அதாவது ஒடுங்கிப்போய் இருக்கிற காலத்துல கொக்கு மாதிரி காத்திருக்கணும். நல்ல காலம் வரும்போது அந்தக் கொக்கு மீனைக் குத்துறது மாதிரி விரைந்து செயல்படணும். நான் அந்தக் கொக்கு மாதிரி இப்போ சந்தர்ப்பத்துக்காக காத்துக்கிட்டிருக்கேன். அது வரும்போது குத்தி எடுத்திடுவேன்.’’
சிவாஜி:– ‘‘நல்லா படிச்சிருக்க போலிருக்கு.’’
நான்:– ‘‘நிறைய படிச்சிருக்கேன். நான் தடுக்கி விழுந்து வசனகர்த்தாவாகலே; தமிழ் படிச்சிட்டு வந்திருக்கேன். தஞ்சை கரந்தை தமிழ்க் கல்லூரியில் படிச்சு புலவர் பட்டம் வாங்கி, தமிழாசிரியரா போகவேண்டியவன் தவறிப்போய் தலைவிதி காரணமாக சினிமாவுக்கு வந்திட்டேன். கும்பகோணத்துக்குப் போகவேண்டிய நான் திசை மாறி கோடம்பாக்கத்துல வந்து விழுந்திட்டேன்.
(இதைக்கேட்டு சிவாஜி ஒரு சிறு சிரிப்பு சிரித்தார்).
கடைசியாக உங்களுக்கு ஒண்ணு சொல்லட்டுமா?’’
சிவாஜி:– ‘‘சொல்லு. நீதான் சொல்லிக்கிட்டிருக்கே. நான் கேட்டுக்கிட்டிருக்கேன். நல்லாருக்கு. சொல்லு.’’
நான்:– ‘‘நான் பி.யு.சின்னப்பாவோட தீவிர ரசிகன். சின்ன வயசுல – மாணவப் பருவத்துல அவரோட நடிப்பையும், வசன உச்சரிப்பிலேயும் என் மனதைப் பறிகொடுத்தவன். சின்னப்பா செந்தமிழ் நாடக மன்றம் என்கிற பேரில் என் நண்பர்களைச் சேர்த்து நாடகம் நடத்தி இருக்கிறேன்.
அவர் நடித்த ‘‘கண்ணகி’’ படத்தை அவருடைய நடிப்புக்காகவும், இளங்கோவனுடைய அழகான வசனத்துக்காகவும் பல தடவை பார்த்துப் பார்த்து ரசித்திருக்கிறேன்.அந்தப் படத்தில் இருக்கிற இருபத்திரெண்டு பாட்டுகளும் மொத்த வசனமும் எனக்கு மனப்பாடம். இப்போ கேட்டாலும் சொல்லுவேன். இன்றைக்கு அதுபோல் அழகாக வசனம் பேசுவது நீங்கதான். உங்க வசன உச்சரிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். முனைமுறியாமல் கடைசி எழுத்து தேஞ்சி கீழே விழாமல் தெளிவாக பேசுவீங்க.நீங்க சொன்ன மாதிரி இது பெரிய செட்டுன்னு எனக்கு முந்தியே தெரியும். அந்தப்பயம் எனக்கு இல்லை. உங்களுக்கு எழுத ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா ஒரு அடி அடிச்சுக் காட்டுவேன். இது உறுதி. பரவாயில்லே. சந்தர்ப்பம் வரும்போது சந்திக்கிறேன். இப்போ உங்களைச் சந்தித்ததில் சந்தோஷம். வர்றேன்’’ என்று சொல்லிமுடித்து, அடி எடுத்து வைத்து நகர இருந்த என்னைத் தடுத்தபடி சிவாஜி என் கையைப் பிடித்துக்கொண்டார்.மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ‘டென்ஷன்’ ஆகிவிட்ட அவர், சிகரெட்டை டிரேயில் திணித்து விட்டு ஜெமினியிடம் சொன்னார்.:
சிவாஜி:– ‘‘கணேசா! இவன் என்னடா என்னென்னமோ சொல்றான். இவன் சொல்லச்சொல்ல எனக்கு பழைய ஞாபகம் வந்திடுச்சி. அன்னிக்கு ‘‘பராசக்தி’’ படத்தில் இருந்து என்னைத் தூக்கிட்டு, எனக்குப் பதிலாக கே.ஆர்.ராமசாமியை வச்சு நான் நடித்திருந்த சீன்களை எல்லாம் மறுபடியும் ஷூட் பண்ண முயற்சி நடக்கிறதாக கேள்விப்பட்டு நான் கண்ணீர் விட்டேன்.
‘இந்தச் சந்தர்ப்பத்தை விட்டா இனி வாழ்நாள் முழுவதும் சாதாரண நடிகனாகவே இருந்து சாகவேண்டியதுதான். நடக்கிறது நடக்கட்டும். என்ன ஆனாலும் சரி. ஒரு அடி அடிச்சிக்காட்டணும்’னு என் மனதுக்குள்ளே முடிவு பண்ணிட்டேன்.
அன்னிக்கு எனக்கு ஒரு வெறி வந்திடுச்சு. அந்த வெறியை இப்போது இவன்கிட்டே பார்க்கிறேன்.
இவன் ஒரு ‘பாசமலர்’ இல்லை, பத்து ‘பாசமலர்’ எழுதுவான். அந்த அளவுக்கு இவன்கிட்டே சரக்கு இருக்கு. இவனை நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன். நீ இவனைப் பத்தி சொன்னது சரிதான். பின்னிடுவான்.
நீ இப்பவே இவனை சிவாஜி பிலிம்சுக்கு அழைச்சிக்கிட்டுப் போயி தம்பி ஷண்முகத்துகிட்டே அறிமுகம் பண்ணி வச்சிட்டு, அட்வான்ஸ் வாங்கிக்கொடு. அதுக்குள்ளே நான் அவனுக்குப் போன் பண்ணி சொல்லிவிடுகிறேன். டைரக்டர்கிட்டேயும் சொல்றேன். ராஜாமணி பிக்சர்ஸ் மோகன், சந்தானம் அண்ணேகிட்டே நீ சொல்லிடு’’ என்றார். இதைக்கேட்டுக் கண் கலங்கிய நான், ‘‘நன்றி’’ என்று கரம் கூப்பினேன்.
சிவாஜி தொடர்ந்தார்:– ‘‘இப்போ நீ சொன்னே பாரு, அடிச்சிக்காட்டுவேன்னு. அடிச்சிக்காட்டவேண்டாம். எழுதிக்காட்டு. அதுபோதும். ‘‘ஆல் த பெஸ்ட்’’ என்று கை குலுக்கினார்.
ஜெமினி என்னை சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். ஷண்முகத்தின் அறை! அப்போதுதான் தம்பி ஷண்முகம் சிவாஜியுடன் பேசிவிட்டு போன் ரிஸீவரை வைத்தார்.
ஜெமினியைப் பார்த்து ‘‘வாங்கண்ணே! இப்போதான் அண்ணன் சொன்னாரு. ரொம்ப சந்தோஷம்’’ என்று என் கையைப் பற்றிக் குலுக்கினார்.
‘சீனிவாசன்’ என்று கூப்பிட்டார். அவர் வந்தார். அவரிடம் ஆள்காட்டி விரலைக் காட்டினார். அவர் சிவாஜி பிலிம்ஸ் நிர்வாகி என்று பிறகு தெரிந்து கொண்டேன்.என்னைப்பார்த்து ஷண்முகம், ‘‘நீங்க திருவாரூரா?’’ என்றார். ‘‘ஆமா’’ என்றேன். சீனிவாசன் ஒரு கவரைக் கொண்டுவந்து ஷண்முகத்திடம் நீட்டினார். அவர் அதை வாங்கி என்னிடம் கொடுத்து ‘‘நல்லா எழுதுங்க. இது ரொம்ப பெரிய படம். ஆல் த பெஸ்ட்’’ என்றார். ‘‘வித் யுவர் விஷ்ஷஸ். தேங்க்யூ’’ என்றேன். பொறுக்க முடியாத பசியுடன் புறப்பட்டோம்.
நன்றி: நாகராஜன்.காம்
இணையத்தில் இருந்து எடுத்தது














Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,