ஜெய ஏகாதசி

 ஜெய ஏகாதசி 



ஏகாதசியில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி மகாவிஷ்ணுவை பிரார்த்தனை செய்யுங்கள். மங்கல காரியங்கள் நடந்தேறும். சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்வார்; இல்லத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்ய அருளுவார் திருமால்.


 ஒவ்வொரு மாதமும் ஏகாதசி திதி வருவது உண்டு. வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என இரண்டு ஏகாதசிகள் உண்டு. ஏகாதசி என்பது மகாவிஷ்ணுவுக்கு உரிய நாள்.


 ஏகாதசி நாளில் விரதம் மேற்கொள்கிற பக்தர்களும் உண்டு. ஏகாதசி அன்று பெருமாளை வீட்டிலோ ஆலயம் சென்றோ வழிபடுகிற பக்தர்களும் இருக்கிறார்கள். ஏகாதசி திதி நாளில், பெருமாளை வணங்கி, கோவிந்தனின் திருநாமங்களைச் சொல்லி துளசி தீர்த்தம் பருகினாலே மகா புண்ணியம் என்கிறது சாஸ்திரம்.


 ஏகாதசியிலும் துவாதசியிலுமாக விரதம் மேற்கொள்வார்கள். இந்தநாளில் உணவே எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்களும் உண்டு. மகாவிஷ்ணுவின் திவ்விய நாமங்களைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.


 பிப்ரவரி 23ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வரும் ஏகாதசி ஜெய ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.


 ஏகாதசி நாளில்... அரங்கனை, அனந்தனை, நம் ஆயுளெல்லாம் காத்தருளும் ஏழுமலையானை, திருவரங்கனை, குணசீலனை... ஒப்பற்ற பெருமாளை வணங்குவோம். சகல செளபாக்கியங்களும் ஐஸ்வரியங்களும் தந்தருள்வான் வேங்கடவன்.


 ஏகாதசி நாளில், மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வோம். ஒலிக்கவிட்டுக் கேட்போம். சங்கடங்களையெல்லாம் போக்கி அருளுவார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,