காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி"
- Get link
- Other Apps
காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி"
சம்பந்தர் பாடும்போது
காதலென்பது பக்தி.,
"காதல் திருமகன்"
ராமனை தசரதன் குறித்த போது
காதலென்பது அன்பு.,
"ஆதலினால் காதல் செய்வீர்"
பாரதி பாடிய போது காதலென்பது
ஆண்-பெண் நட்பு.,
"முதியோர் காதல்" எழுதியபோது
காதலென்பது உடல் கடந்த
உணர்வு நிலை.,
எப்படியாயினும்,
சொல்லுக்குப் பொருள்
சொல்லோடு மட்டுமில்லை-
இடத்தோடும் இழைந்திருக்கிறது..!
"நய்யப்பட்ட துணியிலும்
பின்னப்பட்ட வலையிலும்
சிக்காமல் சிதறி ஓடும்
தண்ணீரை போலவே
அவ்வளவு எளிதில் யாரும்
"காதலை கைதுசெய்து விட முடியாது"...
#மனதின்ஓசைகள்
#மஞ்சுளாயுகேஷ்.
- Get link
- Other Apps
Comments