உடலில் உள்ள புழுக்கள் இயற்கையான முறையில் வெளியேற செய்ய வேண்டிய வழி முறைகள்.

 உடலில் உள்ள புழுக்கள் இயற்கையான முறையில் வெளியேற செய்ய வேண்டிய வழி முறைகள்.




உங்கள் உடலில் உள்ள புழுக்களை இயற்கையாக வெளியேற்ற விரும்பினால் இதனை தினமும் செய்து வாருங்கள்.


மனித உடலில் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. அதில் உருளைப் புழுக்கள், நாடாப்புழுக்கள், ஊசி புழுக்கள் மற்றும் கொக்கிப் புழுக்கள் போன்றவை மனிதனின் குடலில் வாழும் ஒட்டுண்ணி புழுக்கள் ஆகும். அவை அனைத்தும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். இதனை அடிக்கடி உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லை என்றால் அவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும். இப்படிப்பட்ட கொடிய தன்மை கொண்ட குழுக்களை இயற்கையாக எப்படி அழிப்பது என்று பற்றி பார்க்கலாம் வாருங்கள்.


வெதுவெதுப்பான பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் அரைத்த பப்பாளி விழுது மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, ஒரு வாரம் காலையில் எழுந்ததும் தொடர்ந்து குடிக்க வேண்டும்.



ஒரு டம்ளர் மோரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள புழுக்கள் வெளியேறும். ஒரு டேபிள்ஸ்பூன் வறுத்த பூசணி விதையில் அரை கப் நீர் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


இப்படி ஒரு வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சிறிது வேப்பிலையை அரைத்து விழுது போன்று செய்து, ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் வேப்பிலை விழுதை சேர்த்து காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வர புழுக்கள் தானாக வெளியேறும். மேலும் பூண்டு பல்லை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது பூண்டு டீ தயாரித்து வெறும் வயிற்றில் ஒரு வாரத்திற்கு குடித்து வரலாம்.


காலை உணவில் ஒரு டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காயை சாப்பிடுங்கள். அதன் பிறகு மூன்று மணி நேரம் கழித்து 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் உள்ள புழுக்கள் வெளியேறும். 2 அல்லது 3 கிராம்புகளை ஒரு டம்ளர் நீரில் போட்டு 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து, அதன் பிறகு வடிகட்டி தினமும் இரண்டு அல்லது மூன்று முறை என ஒரு வாரம் குடித்து வர வேண்டும். மிகவும் எளிதாக வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க விரும்பினால் ஒரு வாரத்திற்கு தினமும் கேரட்டை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,