தமிழே என் தாய்மொழித் தமிழே


 உலகத்தின் முதல் மொழியே

உணர்வில் கலந்து விட்ட உயிர்மொழி என் தாய்மொழியே தமிழே உனக்கு என் தலை வணக்கம் தமிழே என் தாய்மொழித் தமிழே அன்பின் ஒலியாய் ஆனந்த எதிரொலியாய் உணர்வுகள் இன்பமாய் ஒலிக்கும் மொழியாய் ஆதி மொழியெனத் தோன்றி மொழிக்கெல்லாம் தாய்மொழி நீயென வையகம் கொழிக்க உணர்ச்சிகள் பேசும் நாடி நரம்பெல்லாம் எழுச்சிப் பேரலையாய் எழும்பும் புரட்சி எழுத்துக்கள் கோர்த்த சொற்களை விதைத்தேன் திக்கித்திணறும் புது நாகரீக மொழியால் திசை மறந்துப் பறந்த திகட்டா தமிழை மீட்க தீப் பந்தம் ஏந்தின ஓடி விளையாடும் சின்னஞ்சிறு மனதிலும் அமிர்த மொழியின் நறுமணத்தைப் பரப்ப தமிழே தாய்மொழியென தமிழே முதற்கடவுளென பிள்ளைப் பார்வையில் மிளிரும் தமிழ் சிறக்க.. தாயே..! தமிழே..! பெரும் காவியங்களின் உயிரே! முக்கனியின் சுவையாகிய முத்தமிழைக் காக்க சங்கம் வைத்து தமிழை உயிரோவியமாய் வளர்த்து வாழ்ந்த கவிக் கடவுளோடு தமிழின் புகழைப் பாடிப் பாடியே தமிழ்த் தாயின் இளைய மகளாய் புதுக் கவி்தைகளின் காவியத்தலைவியாய் தாய் மொழியாம் தமிழ்மொழியை உயிரெனக் காத்திடுவேன்




Manjula sent Today at 14:57


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,