நம்ம பழனி
பழனி மலைக் கோயிலில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை காண ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கோயில் நிர்வாகம் பழனிக்கு வரும் முருக பக்தர்கள் செல்பி எடுத்து மகிழும் வகையில் “நம்ம பழனி” என்ற வாசகத்தை பழனி தண்டபாணி நிலையம் மற்றும் மின் இழுவை நிலையம் ஆகிய இடங்களில் பெயர்ப்பலகை வைத்துள்ளனர். பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துக் கொள்ளலாம் பகலில் செல்பி எடுத்துக் கொள்ளலாம், இரவில் மின் விளக்குடன் கூடிய வெளிச்சத்திலும் செல்பி எடுத்துக்கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது
Comments