ரயில் மூலமும் ஏழுமலையான் தரிசனம்..
ரயில் மூலமும் ஏழுமலையான் தரிசனம்..! ஒரு நாள் சுற்றுலாவாக இந்திய ரயில்வே கழகம் ஏற்பாடு!
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை எளிதாக்க ஒரு நாள் சுற்றுலா திட்டத்தை இந்திய ரயில்வே சுற்றுலா உணவுக்கழகம் தொடங்கி உள்ளது.
'டிவைன் பாலாஜி தரிசனம்’ என்ற பெயரில் ஒருநாள் சுற்றுலாவாக நபர் ஒருவருக்கு 900ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நாட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் தங்கள் சொந்த செலவில் காலை 8 மணிக்குள் ரயில் மூலம் திருப்பதிக்கு வந்து இறங்கும் பக்தர்கள், திருச்சானூர் பத்மாவதி தாயார் தரிசனம், ஏழுமலையான் தரிசனம் உள்ளிட்டவற்றை முடித்துக் கொண்டு மாலை அல்லது இரவு ரயில் மூலம் மீண்டும் ஊர் திரும்பும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. இந்தத் திட்டத்தை வகுத்துள்ளது.
Comments