நெஞ்செரிச்சல் மாரடைப்பு : இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்

 நெஞ்செரிச்சல் மாரடைப்பு : இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?




நெஞ்செரிச்சல் மாரடைப்பு இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். இரண்டிற்கும் அறிகுறிகள் ஏறத்தாழ ஒன்றாக இருக்கும். மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகும். நெஞ்சு வலி வந்தாலும் அது மாரடைப்பாக இருக்கும் என்று அச்சம் கொள்வது வழக்கம். நெஞ்செரிச்சல் தானே தானாக சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருப்பது தவறு. மேலும் இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.


நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு உடனடி எந்த ஆபத்தும் கிடையாது. மாரடைப்பை அலட்சியப்படுத்தினால் உயிரிழப்பை சந்திக்க நேரிடும். மாரடைப்புக்கான அறிகுறிகள் அலட்சியப்படுத்த கூடாது.


வேறுபாடுகளை எப்படி அறிவது:


சில நேரங்களில் மாரடைப்பின்போது இடதுபக்க மார்பு வலி, தோள்பட்டை மற்றும் வயிற்றுக்கு மேல் பகுதியில் வலி ஏற்படும்.



ஓய்வில் இருப்பதைவிட வேலை செய்யும்போது மாரடைப்புக்கான வலி அதிகமாக இருக்கும். நெஞ்செரிச்சல் பெரும்பாலும் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால் தான் ஏற்படும். இதய பாதிப்பு இருப்பவர்கள் குளிர் காலத்தில் மாரடைப்புக்கான வாய்ப்பு அதிகம். சார்பிட்ரேட் என்ற மாத்திரையை நாக்கின் அடியில் வைக்க வேண்டும்.


வலி தொடர்ந்தால் நெஞ்செரிச்சல் ஆக இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் நீங்கள் உங்கள் மருத்துவர்களை ஆலோசனை செய்வது மிகவும் நல்லது .இதய நோய் உள்ளவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் புகைப் பழக்கம், மதுப் பழக்கம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்கரை நோயுள்ளவர்கள் இதய நோயால் பாதிக்கப் படுவார்கள்.


நெஞ்செரிச்சல் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே ஈசிஜி பரிசோதனை செய்வது மிகவும் நல்லது. உங்களை இவ்வளவு பாதிப்பினை உண்டாகக்கூடிய நோய்களை புறக்கணிக்காதீர்கள். உடல்நிலை பிரச்சினையில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,