கடமை
தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற கால கட்டத்தில், அரிசி வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தசலம் கூட்டத்தை முடித்து விட்டு திரும்பிகொண்டிருந்தார்...
வழியில் சோதனைச்சாவடியில் அவரது கார் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து வருவாய் அலுவலர் கரோட்டியிடம் கார் டிக்கியை திறந்து காட்டு என்றார். அவரும் கார் டிக்கியை திறந்து காட்டினார். டிக்கி முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப்பார்த்த பிறகு தான் அந்த அலுவலருக்கு வண்டியில் வந்தது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று," தெரியாமல் நடந்து விட்டது மன்னித்து கொள்ளுங்கள் " என்றார் ..
ஆனால் அண்ணா அவர் உதவியாளரிடம் " இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக்கொள்ளுங்கள் "என்றார். அந்த அலுவலர் தனக்கு எதோ நடந்து விடப்போகிறது என பயந்து அழாத குறையாக கெஞ்சினார். உடனே,அண்ணா நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அதிகாரியின் கையில் தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப்பார்த்தேன். உங்களைப்போன்றவர்கள் தான் உயர் பதவிக்கு வரவேண்டும் ..அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன் , என்றார் ..அவருக்கு பதவி உயர்வும் கிடைத்தது...
இப்போது உள்ள காலமாய் இருந்தால் என்ன நடக்கும்...???????
இணையத்தில் இருந்து எடுத்தது
No comments:
Post a Comment