பாபா ஆம்தே’
இந்தியாவின் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதிகளுள் ஒருவரும் காந்தியவாதியும் ‘பாபா ஆம்தே’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான முர்ளிதர் தேவிதாஸ் ஆம்தே (Murlidhar Devidas Amte) காலமான தினம் இன்று .

இதை அடுத்து ஆம்தே’ வரோராவைச் சுற்றி ஐம்பது கி.மீ. சுற்றளவில் 11 தொழுநோய் சிகிச்சை மையங்களை உருவாக்கினார். நிலத்தை சரிசெய்து, சிறு குடில்களை அமைத்தார். ஏராளமான நோயாளிகள் வந்து சேர்ந்தனர். கைத்தொழில் பயிற்சி அளித்தார். தொழுநோயாளிகள் தயாரிக்கும் பொருள்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இதில் கிடைத்த லாபத்தைக்கொண்டு பார்வையற்றோருக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார். தொழுநோய் ஆய்வு மையம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் அவரை அன்புடன் ‘பாபா ஆம்தே’ என்று அழைத்தனர்.
எந்த மக்களை சமூகம் ஒதுக்கி வைத்ததோ அவர்கள் கரங்களினாலேயே பள்ளிகள், கல்லூரியைக் கட்ட வைத்தார்.
1988-ல் இந்திய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்தி பாரத் ஜோடோ (இந்தியாவை இணைத்தல்) பாத யாத்திரை தொடங்கிய இவர், 5 ஆயிரம் மைல் தூரம் நடை பயணம் மேற்கொண்டார்.
Comments