ஞாயிறு திரை மலர்,28.3.2021

 ஞாயிறு திரை மலர்,28.3.2021










+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


அரிய புகைப்படங்கள்





















++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
`பாதாள பைரவி', `கல்யாணம் பண்ணிப்பார்', `குணசுந்தரி', `மிஸ்ஸியம்மா', ‘மாயாபஜார்’ என்று வெற்றிப் படங்களின் விளைநிலமாகத் திகழ்ந்தது விஜயா புரொடக்‌ஷன்ஸ். எம்.ஜி.ஆர். தனது ‘நாடோடி மன்னன்’படத்தை முடிக்க முடியாமல் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டபோது, அந்தப் படத்தை எடுத்து வெளியிடக் கைகொடுத்தார் நாகி ரெட்டியார். இறுதிவரை “முதலாளி” என்று எம்.ஜி.ஆரால் அழைக்கப்பட்ட நாகிரெட்டியார் ஒரு தொழிலாளியாகவே எளிய வாழ்க்கை வாழ்ந்தார். பத்திரிகை, திரையுலகம் ஆகிய இரு ஊடகங்களில் அவர் நிகழ்த்திச் சென்ற சாதனைகள் பயிலப்பட வேண்டிய பாடம்.






நன்றி: இந்து தமிழ் திசை

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பூங்கோதை: வருவதற்கு நேரான வழி இருக்கும் போது குறுக்கு வழியில் ஏன் வர வேண்டும்?
மலைக்கள்ளன்: பூவைத் தேடி ஓடிவரும் வண்டு, தோட்டக்காரனை எழுப்பி சொல்லிவிட்டா வரும்??!



=======================================================================

அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?
மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.
அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.
மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?
அரசர்: நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி! தந்தையின் முன் தனயனல்ல இப்போது!
மனோகரன்: குற்றவாளி! நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல, பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா? குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூறவேண்டாம்.
இதோ அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். மறவர் குடிப்பிறந்த மாவீரர்கள் இருக்கிறார்கள்! மக்களின் பிரதிநிதிகள் _இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்... என்ன குற்றம் செய்தேன்?
சபையோர்: குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்.
அரசர்: இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது.
மனோகரன்: சம்பந்தம் இல்லாதது சபைக்கு வருவானேன்? குடும்பத்தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்றுதான் முதன் முதலாகச் சந்திக்கிறது மகாராஜா!
அரசர்: போதும் நிறுத்து... வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்த சேனையிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.
மனோகரன்: அதற்குத்தான் காரணம் கேட்கிறேன்!
அரசர்: எதிர்த்துப் பேசுபவர்களுக்கு ராஜசபையில் என்ன தண்டனை தெரியுமா?
மனோகரன்: முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத்தண்டனை அளித்துவிட்டு, மூலையில் கிடந்ததற்கு முடிசூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை விடக் குறைவானதுதான்.
அரசர்: ஆத்திரத்தைக் கிளப்பாதே! நிறைவேற்று. அரசன் உத்திரவு.
மனோகரன்: அரசன் உத்திரவென்ன? ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அரசே! சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் தாய் என்று கேள்விப்பட்ட பின்னும் அடங்கிக் கிடப்பவன் ஆமை!
அரசன்: தாய்க்கும், தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே! தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி எறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?
மனோகரன்: பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்!"













===========================================================

இயக்குநர் மணிரத்னத்தால் தெருவுக்கு வந்தேன்…” - தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனின் அனுபவம்..!
chai with chithra-manickam narayanan
“இயக்குநர் மணிரத்னத்தால் தெருவுக்கு வந்தேன்…” – தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணனின் அனுபவம்..!
2002-ம் ஆண்டு வெளிவந்த மணிரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தை விநியோகம் செய்ததால் வைத்திருந்த பணம் முழுவதையும் இழந்து, தான் நடுத்தெருவுக்கு வந்ததாக சொல்கிறார் செவன்த் சேனல் நிறுவனத்தின் தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன்.
இது குறித்து அவர் அளித்திருக்கும் சமீபத்திய வீடியோ பேட்டியில், “2001-ம் ஆண்டு ஜூலை மாதம் மணிரத்னம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தைத் துவக்கினார். மணிரத்னம் பெரிய இயக்குநர். சுஹாசினியும் எனக்கு பிரண்ட். அதனால் நான் தயாரித்த முந்தின படமான ‘சீனு’ படத்துலவிட்டதை இந்தப் படத்தை வாங்கி விநியோகம் செய்தாவது தப்பிச்சுக்கலாம்ன்னு நினைச்சேன்.
சென்னை, செங்கல்பட்டு ஏரியா, உள்ளிட்ட தமிழகத்தில் 5 முக்கிய ஏரியாக்களின் விநியோக உரிமையை 1 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு மணிரத்னத்திடம் வாங்கி விநியோகம் செய்வதாக ஒப்பந்தம் செய்தேன். இந்தப் பணத்தையும் கொஞ்சம், கொஞ்சமாக நான் அவர்கிட்ட கொடுத்திட்டிருந்தேன். அ்ப்போது அவருடைய தம்பி சீனிவாசன்தான் நிர்வாகத்தைப் பார்த்துக்கிட்டாரு.
2001 ஜூலையில் ஆரம்பித்த படம் உடனேயே அந்த வருஷத்துக்குள்ளேயே ரிலீஸாகும்ன்னு நினைச்சேன். ஆனால், படத்தைத் தள்ளிப் போட்டுக்கிட்டே வந்தாரு மணிரத்னம். இதுனால எனக்கு நிறைய நெருக்கடிகள். பல முறை இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போனதால் விநியோகஸ்தரா தியேட்டர்களை புக் செய்வதில் எனக்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டது.
அந்த வருஷமும் முடிஞ்சு அடுத்த வருஷம் 2002 பிப்ரவரி 14-ம் தேதியன்று ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தை ரிலீஸ் செய்றதா சொன்னாரு மணிரத்னம். அதற்கு முந்தின நாள்தான் படத்தை எங்களுக்குப் போட்டுக் காட்டினாங்க. ‘அபிராமி’ தியேட்டர்ல ஸ்பெஷல் ஷோ. படத்தைப் பார்த்தவுடனேயே ‘இந்தப் படம் ஓடாது’ன்னு எனக்குத் தெரிஞ்சது.
மணிரத்னம் சிறந்த இயக்குநர்தான். இந்தப் படமும் சிறந்த படம்தான். ஆனால், அவார்டு படம். இதுல போயி இவ்வளவு பணத்தை முதலீடா போட்டுட்டோமேன்னு நினைச்சு வருத்தப்பட்டேன்.
நான் வருத்தப்பட்ட மாதிரியேதான் நடந்துச்சு. திருவண்ணாமலைல ஒரு தியேட்டர்ல சீட்டையே கிழிச்சிட்டாங்களாம் ரசிகர்கள். அதுக்கு என்கிட்ட காசு கேட்டாங்க அந்தத் தியேட்டர்காரங்க. படப் பெட்டிகளும் மூணே நாள்ல திரும்பி வந்துச்சு.. 17 பெட்டிகள் திரும்பி வந்துச்சு.. அதையெல்லாம் மணிரத்னம் ஆபீஸுக்கு அனுப்பினேன். அதை அவங்க வாங்க மாட்டேன்னுட்டாங்க. அதை வைக்கக்கூட என் ஆபீஸ்ல இடமில்லை.
அதோடு தியேட்டர்காரங்க ரீபண்ட் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களைச் சமாளிக்கிறதுக்காக பத்து நாள் நான் தலைமறைவானேன். என் வாழ்க்கைலேயே இப்படி ஓடி ஒளியற மாதிரி சூழல் வந்தது, இந்தப் படத்தினாலதான்.
மலேசியாவுக்கு ஓடிப் போய் பதுங்கி.. அங்கேயிருந்துகிட்டே பணத்தைப் புரட்டி திரும்பவும் சென்னைக்கு வந்தேன். தியேட்டர்காரர்களைக் கூப்பிட்டு, “என்னால யாருக்கும் நஷ்டம் வரக் கூடாது”ன்னு சொல்லி பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன்.
1 கோடியே 58 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கின அந்தப் படம், மொத்தமா எனக்கு சம்பாதித்துக் கொடுத்த படம் வெறும் 26 லட்சத்து 50 ஆயிரம்தான். மீதி 1 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நஷ்டம்.
மணிரத்னத்திடம் இதைப் பற்றிச் சொல்லி பணம் கேட்டப்போ அவர் பணத்தைத் திருப்பித் தர மாட்டேன்னுட்டாரு. அப்புறம் கவுன்சில்ல புகார் கொடுத்து சிந்தாமணி முருகேசன் எனக்காக பெரிய பஞ்சாயத்து பண்ணினார். “20 லட்சம் ரூபாய்தான் தர முடியும்”ன்னு சொன்னாங்க. அதையும் அவங்க தயாரிச்ச ‘பைவ் ஸ்டார்’ படத்தோட ரைட்ஸை கொடுத்தாங்க. அதை நான் 30 லட்சம் ரூபாய்க்கு வித்தேன். இந்த ஒரே படத்தால அந்த நேரத்துல எல்லாத்தையும் இழந்துட்டு, தெருவுக்கே வந்துட்டேன்…!” என்று பெரும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்.
நன்றி: டூரிங் டாக்கீஸ்
May be an image of 2 people and text
6

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,