முகத்துல கரும்புள்ளி

 

முகத்துல கரும்புள்ளி மறையலியா, தினமும் இதை சாப்பிடுங்க! அதிசயமா மறையும்!





முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கும் போது பராமரிப்போடு அதை சரிசெய்ய உணவுகளையும் எடுத்துகொள்வது பலன் அளிக்கும்.

அழகான சருமத்துக்கு சிறந்த உணவுகள் உங்கள் சமையலறையிலேயே காலங்காலமாக இருக்கிறது என்பது தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இது நீங்கள் குறையில்லாமல் சரியாக பெறும் போது அழகான ஒளிரும் முகத்தை கண்டு நீங்களே வியப்பீர்கள்.
சருமம் என்பது ஆரோக்கியத்தின் தெளிவான உருவமே. இது சருமம் வறண்டு அல்லது திட்டாக இருப்பதாக செதில்களாக தெரிந்தால் அது கருப்பு புள்ளிகள் உருவாக்கலாம். இதை கண்டால் நீங்கள் உங்கள் உணவிலும் கவனம் செலுத்த வேண்டிய தருணம் என்பதை உணர்ந்து கொள்ளலாம். அப்படி இயற்கையாகவே உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்க நீங்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.

ஒரு டம்ளர் எலுமிச்சை நீரில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து குடிப்பது உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றும். இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் சி இருப்பதால் இயற்கையாகவே சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.

முகம் கவர்ச்சியா இருக்கணுமா, ஒரு மாசம் கேரட் மட்டும் இப்படி யூஸ் பண்ணுங்க!

தினசரி இதை எடுத்துகொள்வது சருமத்துக்கு இயற்கையான பளபளப்பை அளிக்க உதவும். இது முகத்தில் இருக்கும் கருமையான புள்ளிகளை அகற்ற உதவுகிறது.எலுமிச்சையில் இருக்கும் தேன் மற்றும் சிட்ரிக் அமிலம் ஆனது முகத்தை வெண்மையாக வைக்க செயல்படுகிறது. இது கருமையான புள்ளிகள் மற்றும் நிறமியையும் போக்க செய்கிறது.

ஆலோவேரா - கற்றாழை சாறு


இயற்கையாகவே கற்றாழை ஜெல்லில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றூம் வைட்டமின் ஈ போன்றவை நிறைந்துள்ளன. இது தோல் மற்றும் ஆரோக்கியத்துக்கு சிறந்தவை. உடலில் இருக்கும் இயற்கை அமினோ அமிலங்களில் 90% அளவுக்கு கற்றாழை உள்ளது.

கற்றாழை சாறில் சருமத்துக்கு ஊட்டமளிக்கும் பண்புகள் உள்ளது. இது உள் எடுத்துகொள்வதற்கும் நன்மை தரக்கூடியது. கற்றாழை சாறை எடுத்துகொள்வதன் மூலம் முகத்தின் மந்ததன்மையை போக்க செய்கிறது.

மேலும் இது நிறமியை குறைக்கவும் கரும்புள்ளிகளை போக்கவும் செய்கிறது. இந்த கற்றாழை ஜெல்லை முகத்தில் இருக்கும் கரும்புள்ளியை போக்கவும் இதை ஃபேஸ் பேக் போன்றும் பயன்படுத்தலாம்.

பப்பாளி

நொதிகள் மற்றும் தாதுக்களின் நன்மைகளை கொண்டுள்ளது பப்பாளி. தினசரி எடுத்துகொள்ளும் போது இது கருமையான இடங்களின் நிறமாற்றத்துக்கு உதவுகிறது. இது சருமத்துக்கு இயற்கையான பளபளப்பை அளிக்க உதவுகிறது.

தினமும் ஒரு கப் பப்பாளி சாப்பிடுவதோடு இதை தேனுடன் கலந்து மசித்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளி இல்லாத பளபளப்பான முகம் கிடைக்கும்.

​க்ரீன் டீ


தினசரி தவறாமல் ஒரு கப் தயிர் அல்லது ஒரு டம்ளர் மோர் எடுத்துகொள்வது ஆரோக்கியமான நன்மைகளை அள்ளி வழங்கும். மோர் இறந்த செல்களை அகற்ற உதவும். மோரில் இருக்கும் லாக்டிக் அமிலம் இறந்த சருமத்தை அகற்ற உதவுகிறது.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளின் நிறமாற்றத்துக்கு உதவுகிறது. கரும்புள்ளிகள் வேகமாக வெளியேற மோர் குடிப்பதோடு தயிரை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் வெளியேறும்.

​தக்காளி

தக்காளி அதிசயங்களை செய்ய கூடியது. உங்கள் தினசரி உணவில் தக்காளியை சாலட்டுகள், சூப்கள் மற்றும் பழச்சாறுகளில் தக்காளியை சேர்க்கலாம். அதோடு இந்த தக்காளியை கொண்டு கரும்புள்ளிக்கு சிகிச்சையும் செய்யலாம். ஃப்ரெஷ்ஷான தக்காளி துண்டுகளை பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பயன்படுத்துவது கரும்புள்ளிகளை போக்க உதவும்.

முகம் எப்பவுமே வறண்டு சொரசொரன்னு இருந்தால் உணவுல இதையெல்லாம் சேர்த்துக்கங்க!

கரும்புள்ளிகள் அதிகமாக இருந்தால் நீங்கள் தக்காளி சாறை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க் செய்யலாம். இது உங்கள் சருமத்தில் பளபளப்பை உண்டாக்க செய்யும். கரும்புள்ளிகளை போக்க செய்யும்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,