ஜூலியஸ் சீசர்

 ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட தினம்




💥 - மார்ச் 15👀
🎯என் கூடவே பிறந்தே,, இருந்தான்; என்னுடனே உண்டான்; உறங்கினான். கடைசியில எனக்கே உலை வச்சுட்டான்… இந்த மாதிரிப் புலம்பலை பலரும் புலம்பிக்கிட்டே இருக்கறாங்க… கூட இருந்தே குழிபறிக்கின்ற துரோகம் இன்றைக்குப் புதுசா தோன்றியது கிடையாதுங்க… அது அந்தக் காலந்திலிருந்தே தொடர்ந்து இருந்து வருகிறது…இத்தகைய துரோகிகளை நாம் சட்டென்று அடையாளம் காண முடிவதில்லை. ஏனென்றால் இருட்டறையில் நாம் சிக்கிக் கொள்ளும்போதுதான் பூனையின் நகங்கள் எவ்வளவு நீளம் என்பது நமக்குத் தெரிகிறது. பூனையைப் போன்ற பலர் நேரம் வரும் வரை வாலைச் சுருட்டவும், காலம் கனிந்தால் பாலைக் குடிக்கவும், உறவு கசந்தால் தனக்குப் பால் வார்த்த ஆளின் கதையையே முடிக்கவும் செய்வார்கள். நம்பிக் கெடுவதும், நம்பிக்கை இன்மையால் வாழ்வதும் வாழ்வில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
துரோகிகள் புனையும் போலி வேடங்கள் உண்மையைக் காட்டிலும் படு கவர்ச்சியாக இருக்கும். அதனால்தான் நண்பர்களைப் போன்று இருந்து நமக்கு உலை வைக்கும் நண்பரின் துரோகமும் நமக்குத் தெரியாமல் போகிறது. வள்ளுவர் தெரியாமாலா, “மக்களைப் போல்வர் கயவர்” அப்படின்னு சொன்னார். சாதாரணமாகத்தான் துரோகிகள் இருப்பாங்க.. அவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களின் துரோகத்திலிருந்து தப்பிக்க வேண்டும்… நட்பென்ற துரோகத்ததால் வீழ்த்தப்பட்டவர்தான் ஜூலியஸ் ஸீஸர். அவர் ரோமாபுரியை வல்லரசாக உருவாக்கியவர் அவர் பல சீர்திருத்தங்களை நிர்வாகத்தில் செய்து ரோம் சாம்ராஜ்ஜியத்தை உலகில் புகழடையச் செய்தவர். அரசு அதிகாரத்திற்கு அடையாளமாக 2000 ஆண்டுகள் நீடித்த ஒரு பெயர் சீசர் என்பதாகும்.
கி.மு. நூறாம் ஆண்டு பிறந்த ஜூலியஸ் சீசர் கிரேக்க வரலாற்றின் மாபெரும் வீரராகவும், அறிவிற்சிறந்த இலக்கியவாதி மற்றும் சீர்திருத்தவாதியாகவும் போற்றப்படுகிறார் தனது 16-ம் வயதில் கான்சல் கொர்னெலியுஸ் மகள் கொர்னெலியாவை திருமணம் செய்துக் கொண்ட சீசர், பத்தொன்பதாம் வயதில், படைவீரனாகச் சேர்ந்தார். அந்த வேளையில் தெர்முஸ் என்ற ரோமனியப் படைத்தலைவர், மிதிலின் என்ற கிரேக்க நகரை முற்றுகையிட்டார்.
அந்த முற்றுகை வெற்றி அடைய, அவருக்கு ஒரு கப்பல் படை தேவைப்பட்டது. சீசரின் முயற்சியால் அனுப்பப்பட்ட கப்பல் படையுடன் மிதிலின் நகரை தெர்முஸ் வென்றார். இதன் மூலம் “Corona Civica” என்ற வெற்றி கிரீடத்தை அணியும் உரிமையை சீசர் பெற்றார். பின்னர், ரோம் நகருக்குத் திரும்பி வந்த சீசர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். கி.மு. 69ஆம் ஆண்டில் சீசரின் முதல் மனைவி கொர்னெலியா காலமானார். கி.மு. 67ஆம் ஆண்டில் பொம்பெயா என்ற பெண்ணை மணந்து கொண்ட அவர், அதே ஆண்டில், மிகவும் முக்கியமான ஆப்பியன் வழியை (Appian Way) சீர்திருத்தும் பொறுப்பை ஏற்றார்.
எகிப்து நாட்டை போரின் மூலம் வெல்ல ஜூலியஸ் சீசர் துணிந்தபோது, கணவனால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த பேரழகி கிளியோபாட்ரா, சீசருடன் இணைந்து கொண்டார். கிளியோபாட்ராவை விரட்டிவிட்ட அவரது கணவன் தொலமியுடன் சீசர் போரிட்டார். இந்தப் போரில் தோலமியை சீசர் கொன்றார். (தொலமியை கொன்றது கிளியோபாட்ரா என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதுண்டு.) கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய ஜூலியஸ் சீசர் அவரை காதலியாக ஏற்றுக் கொண்டார்.
எகிப்து நாட்டினை வென்ற சீசர் அந்நாட்டுக்கு தனது காதலி கிளியோபாட்ராவை தலைவியாக்கினார். கவுல் போரின் மூலம் சீசர் பெரும் மாவீரனாக உலகிற்கு அறிமுகமான ஜூலியஸ் சீசர் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல ரோமில் செயல்பட்டார். அவரது அதிகாரத்தை பறைசாற்றும் விதமாக கிரேக்க நாடு முழுவதும் சீசருக்கு மாபெரும் சிலைகள் எழுப்பப்பட்டன. நாணயங்களிலும் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டது.
மேலோங்கி வரும் சீசரின் பேராதிக்கத்தை கண்டு கலக்கமடைந்த பலர் சீசரை கொல்ல திட்டமிட்டனர். இதற்கான சதித் திட்டம் வகுக்கப்பட்டது.அரண்மனையின் ஆலோசனை மண்டபத்தில் மார்கஸ் ப்ரூடஸ் (சீசரால் மகன் போல் வளர்க்கப்பட்டவர்), சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து கி.மு. 15-03-44 அன்று சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர். அப்போது ‘யூ டூ புரூட்டஸ்?’ என்ற எவர் ஷாக் வார்த்தை உதயமானதாக ஷேக்பியர் குறிப்பிடுகிறார்
கிரிகோரியன் நாட்காட்டியை சீரமைத்து தற்கால பயன்பாட்டில் இருக்கும் நாட்காட்டியை (கேலண்டர்) உருவாக்கியவராகவும் சீசரின் சிந்தனையில் உருவான அடிமைகள் விளையாட்டு அரங்கம் இன்றளவும் மிகவும் புகழ் பெற்ற பெயரை கொண்டிருந்த சீசர் .தனது 55-வது வயதில் பாம்பேயின் சிலையின் அடிப்பகுதியில் - இதே நாளில் சீசர் கீழே விழுந்த போது அவருடைய உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக் காயங்கள் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.💔



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,