சாதி(கவிதை)- கிருத்திகா தாஸ்

 சாதி
















அடுக்கடுக்காய் வீடுகள் கொண்ட
மலையடிவாரக் கிராமத்தின்
ஒடுக்கப்பட்ட கிணற்றினடியில்
பதுங்கி இருந்தான் , அவன்

தூரத்து மலை இருட்டில்
கரிய நிறம் மறந்த காக்கைகள்
செங்குருதி மண்ணில்
புழுதி கொத்திக் கொண்டிருந்தன

வரிசையில் கடைசியாய்
நின்று கொண்ட அவனுக்கு
ஈக்கள் மொய்த்த
கொட்டாங்குச்சியும் மறுக்கப்பட்டது

வவ்வால்கள் வட்டமடித்த
சிதிலமடைந்த கோயில் வாசலில்
விளையாடிக் கொண்டிருந்தது
செருப்பணியாத அந்தக் குழந்தை

பிணங்கள் மறுக்கப்பட்ட
தெருவொன்றில் - செங்குத்தாக
நின்றிருந்த அந்தத் தேரில்
கண்மூடிச் சரிந்திருந்தான் அவன்

கற்குகைக்குள் ஒடுங்கிக்கொண்ட
முண்டாசு கட்டிய அவன்
முனகிக் கொண்டிருந்தான்
"சாதிகள் இல்லையடி பாப்பா"

- கிருத்திகா தாஸ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,