மகளிர் தின மலர் 2021,/ சுதந்திர வானமே

 சுதந்திர வானமே










கண்ணைக் கட்டிய கருப்புத்துணியை

கொஞ்சம் விலக்கி விட்டுப் பாருங்கள் வானவில்லின் வண்ணங்கள் நாங்கள் கருப்புச் சாயம் பூசிவிடாதீர்கள் படபடக்கும் பட்டாம்பூச்சி நாங்கள்



சிறகுகளை வெட்டிடாதீர்கள் பளபளக்கும் பட்டாடை மட்டுமே தரும் கூட்டுப் புழுக்களல்ல நாங்கள் சற்றும் ஓய்வே இல்லாமல் உழைக்கும் ராணித் தேனீக்கள் பெண்கள் கரு தாங்கும் கற்பகத் தருக்கள் உயிர் வாயிலில், உள்ளம் துடிக்க உலகிற்கு இன்னோர் உயிரைக் கொண்டு வரும் பெண் பிரம்மாக்கள் அதற்கென கருவறையிலடைத்து கைகூப்பத் தேவையில் பல்லக்கிலேற்றி திரை போடவும் வேண்டாம் நடக்கிற பாதையில் பள்ளம் தோண்டாதிருங்கள் எங்களுக்கு வேண்டுவதெல்லாம் பார்வைகள் உறுத்தாத சுதந்திர வானமே உற்சாகமாய் பறந்து திரிய உடையக் கூடிய சிறகுகளை விடவும் தடைபோடும் வேலிகளைத் தாண்ட உதவும் கரங்கள் மட்டுமே... கவிதாயினி


மஞ்சுளாயுகேஷ்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,