ஞாயிறு திரை மலர்,

 ஞாயிறு திரை மலர், 14/3/2021









=============================================================================


இந்தியாவின் முதலாவது பேசும் படம் ஆலம் ஆரா இன்னிக்குதான் வெளியானது















ஆலம் ஆரா ((உலகத்தின் ஆபரணம் என்று அர்த்தம்) மும்பையில் உள்ள மெஜஸ்டிக் திரையரங்கில் 1931 ம் வருஷம் இதே மார்ச் 14ல்தான் திரை இடப்பட்டது.
இந்தப் படம் தான் இந்திய திரை இசையின் முன்னோடி எனக் கூறலாம்.
ஆலம் ஆரா அர்தேசர் இராணி என்பவரால் இயக்கப்பட்டது, இது ஜோசப் டேவிட் என்பவர் எழுதிய ஒரு பார்சி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்.
2 மணி நேரமும் 4 நிமிடங்களும் ஓடக் கூடிய இந்த படத்தில் வித்தல், ஜுபைதா, L .V . பிரசாத் மற்றும் பிரித்திவி ராஜ் கபூர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்ப்பை பெற்றது, மேலும் வாசிர் முஹம்மது கான் பாடிய தே தே குதா கே நாம் பர் என்ற பாடல் இந்தியாவின் முதல் சூப்பர் ஹிட் பாடல் என்ற அந்தஸ்தையும் பெற்றது.
ஒலிப்பதிவில் இரைச்சலை தவிர்ப்பதற்காக இந்தப் படம் பெரும்பாலும் இரவிலேயே படமாக்கப்பட்டது, மைக்ரோ போன்களை காமெரா கோணத்தில் தெரியாதபடி வைத்து ஒலிப்பதிவு செய்தனர்.
ஆனால் இந்தப் படத்தின் பிரதி இப்போது இல்லை. கடைசி பிரதி 2003 புனேயின் திரைப்பட ஆவணக் காப்பகத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்தின் போது அழிந்துவிட்டது.
சில வருடங்களுக்கு முன் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் ஆலம் ஆரா படத்தின் எந்தப் பிரதியும் தேசிய ஆவணக் காப்பகத்தில் இல்லை என்பதை தெரிவித்தது.
ஆனாலும்,இந்தியா முழுவதும் தேடும் பனி தொடங்கியது இருப்பினும் இதுவரை இந்தியாவின் முதல் பேசும் படத்தின் ஒரு பிரதியும் கிடைக்கப் பெறவில்லை.
ஹூம்.. நம் டிஜிட்டல் இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா இந்திய வரலாற்றில் பேசாமல் தன் இருத்தலை நமக்கு உணர்த்துகிறது…
-------------------------------------------------------------------------------------

மோகன்லால் தனது மகள் விஸ்மயா எழுதிய ’கிரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட்’ என்ற புத்தகத்தை பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு அனுப்பி வைத்தார்.
நன்றி: ஏசியன் நெட் நியூஸ்


















=========================================================


இயக்குநர், ரைட்டர், குணசித்திர நடிகர், வில்லன் என பன்முகமாக பளபளப்பவர் பொன்வண்ணன். ‘அன்னை வயல்’ படத்தின் மூலம் இயக்குநரானவர்.




விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றால், அறை முழுவதும் வண்ணங்களும், தூரிகைகளும், புத்தகங்களும், உலகப்பட டிவிடி கலெக்‌ஷன்களும் பரந்து விரிந்து புன்னகைக்கின்றன. பக்கவாட்டில் டிராயிங் ஸ்டாண்ட்டில் பொன்வண்ணனின் கைவண்ணத்திற்காக முற்றுபெற காத்திருக்கிறதுஒரு மாடர்ன் ஆர்ட்.
‘‘ஓவியர்கள் ஜெயராஜ், மாருதி, ‘கலைமகள்’ ஜி.கே.மூர்த்தி, ராமு, கோபுலு இவங்க கோடுகள்எல்லாம் ரொம்பப் பிடிக்கும். அதுவும் கோபுலுவின் ஓவியங்களில் ஒரு மரபுத் தன்மை மிளிரும். நூறு வருடங்களுக்கு முந்தைய மனிதர்களின் முகத்தைக் கூட அப்படியே நேர்த்தியாக கொண்டு வந்திருப்பார் அவர். இவங்க எல்லாரையும் பார்த்து இன்ஸ்ஃபையர் ஆகித்தான் ஓவியரானேன்.
உதவி இயக்குநராக வேலை பார்த்த டைம்ல கூட, ஓவியம் வரையறதை கைவிடலை. அப்பவும் வரைவேன். ஸ்பாட்டுல, ஷூட்டுலனு
பென்சிலும், பேனாவும் கையுமா இருந்திருக்கேன். என்ன ஷாட்? என்ன ஃபிரேம் வைக்கறாங்க? நடிகர்கள் எந்தப் பக்கம் நின்னாங்க? காஸ்ட்யூம் ெதாடர்ச்சினு அத்தனையையும் ஓவியங்களாகவே ஸ்டிரிப்பா வரைஞ்சிடுவேன்.
என்னோட வேலையை ஸ்டோரி போர்ட்டாகவே வரைஞ்சிடுவேன். அதுவே எனக்கு பல இடங்கள்ல வேலை வாய்ப்பையும் வாங்கி கொடுத்திருக்கு...’’ ஆச்சரியம் பொங்க விவரிக்கும் பொன்வண்ணன், பத்திரிகை சிறுகதைகளுக்கு படமும் வரைந்திருக்கிறார்.
‘‘உதவி இயக்குநரா, நடிகரா பிசியா பரபரக்கும் போதும் கூட வார, மாத பத்திரிகைகளின் சிறுகதைகளுக்கு படங்கள் வரைஞ்சு கொடுத்திருக்கேன். ‘விகடன்’லஎஸ்.ராமகிருஷ்ணனின் ‘கேள்விக்குறி’ தொடர் வரும் போது, முழுத் தொடருக்கும் படம் வரைஞ்சிருக்கேன். ரசிச்சு பண்ணின ஒர்க் அது.
எண்ணங்கள்தான் வண்ணங்களாகுது. கான்சப்ட்தான் வண்ணங்களை தீர்மானிக்குது. லைட் அண்ட் ஷாடோஸ், மட்டுமல்ல, கறுப்பு, வெள்ளை கலந்து வரைவதும் பிரியமானதுதான்.
சினிமாவை போல ஓவியத்துறையிலும் இப்ப டிஜிட்டல் புகுந்திடுச்சு. போட்டோ ஷாப் 7, கோரல்டிரானு ஆரம்பிச்சு அதோட லேட்டஸ்ட் வெர்ஷன் வரை தொழில்நுட்ப ரீதியாகவும் ஓவியத்துல அப்டேட்டடா இருக்கேன். இதுக்காகவே வெளிநாட்டுல இருந்து ஒரு வேக்கம்போர்டு இறங்குமதி பண்ணினேன். அதுலேயும் ஒர்க் பண்றேன்.
சாதாரண பென்சிலில் ஆரம்பிச்சு க்ரேயான்ஸ், வாட்டர் கலர்ஸ், ஆயில், அக்ரிலிக்னு ஓவியத்தின் அத்தனை பரிமாணங்கள்லேயும் பயணிக்கறேன். என்னோட திருப்திக்குத்தான் வரையறேன். விற்கணும், கண்காட்சி வைக்கணும்னு இக்கட்டான சூழல்கள் இல்லாததால தோணுற போது வரைய முடியுது.
பெயிண்ட்டிங்ஸ் மட்டுமில்ல. புத்தகங்கள் படிக்கவும் பிடிக்கும். கம்ப்யூட்டர்ல பெரியப் பெரிய கலெக்‌ஷன்ஸ் வச்சிருக்கேன். அதுல ஹிஸ்டரி கன்டன்ட்ஸ் அதிகம். என் போர்ட்ரெயிட் ஒர்க்ஸை எல்லாம் கண்காட்சியா வைக்கற ஐடியாவும் இருக்கு. அதை நோக்கியும் நகர்றேன்...’’ உற்சாகத்துடன் சொல்லும் பொன்வண்ணன், டிராயிங் மாஸ்டர் கோர்ஸ் முடித்தவர்.பள்ளி ஒன்றில் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
‘‘ஈரோடு பக்கம் மொடக்குறிச்சிதான் எங்க ஊர். எங்க வீடு, பக்கத்து வீடுனு எல்லா இடங்கள்லேயும் கிறுக்க ஆரம்பிச்சிருக்கேன். என் முதல் ஓவியம் எனக்கு நல்லா ஞாபகத்துல இருக்கு. அப்ப நான் அஞ்சாங் கிளாஸ் படிச்சிட்டிருந்தேன். கிளாஸ்ல வாத்தியார் எல்லாரையும் வரையச் சொன்னார். நான் மடமடனு ஒரு ஜல்லிக்கட்டு காளையை வரைஞ்சேன். அதைப் பார்த்துட்டு வாத்தியார், என்னைத் தட்டிக் கொடுத்து சாக்லெட் பரிசளிச்சார்.
என் நடிப்பை பாராட்டி எத்தனையோ விருதுகள் கிடைச்சிருக்கு. ஆனா, அந்த சாக்லெட்டுக்கு ஈடாகாது. அதுதான் எனக்குள் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துச்சு.
அப்புறம், புத்தகங்களின் பக்க வடிவமைப்பு மேல ஒரு ஈர்ப்பு வந்துச்சு. ஓவியங்கள் இருந்ததால, காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். ஸ்புட்னிக், சோவியத் நாடுனு பல புத்தகங்கள்லயும் ஓவியங்களைதான் பார்த்து ரசிப்பேன். அப்ப ‘விகடகவி’னு ஒரு கையெழுத்து பத்திரிகையும் நடத்தியிருக்கேன்! அதுல ஓவியங்கள் வரைஞ்சிருப்பேன்.
சுயமா வரைஞ்சது குறைவு. ஓவியர்கள் ஜெயராஜ், மாருதி படங்களை பார்த்து வரைஞ்சது அதிகம். கோபுலு ஓவியங்கள் எல்லாம் ஈர்க்கவே டிராயிங் மாஸ்டராகணும்னு விரும்பினேன். என் அதிகபட்ச கனவும் அதான். அதுக்காகவே என்னை தயார்படுத்திக்கிட்டேன். 9வது படிக்கும் போது டிராயிங் மாஸ்டருக்கான லோயரும், 11வது படிக்கும் போது ஹையரும் எழுதினேன்.
அப்புறம், பனிரெண்டாவது முடிச்சதும் டீச்சர் டிரெயினிங்கும் முடிச்சேன். காலேஜ் போனேன். பி.காம்ல சேர்ந்த சில மாதங்களில்அதை டிஸ்கன்டினியூ பண்ணிட்டேன். ஒரு தனியார் பள்ளியில் லீவ் வேகன்ட்ல ஆசிரியராகவும் வேலை பாத்திருக்கேன். இப்படி ஓவியமும், எழுத்தும், இலக்கியமுமாக என் பாதையை அந்த வயசுல நானே வடிவமைச்சிக்கிட்டேன்...’’ கண்சிமிட்டுபவர், சினிமாவில் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார்.
‘‘அந்த டைம்ல எதிர்பாராமல் சென்னை வரவேண்டிய சூழல். மதர்லாண்ட் பிக்சர்ஸ் பெரிய அளவுல கொடிகட்டிப் பறந்த நேரம் அது. கோவைத்தம்பி சார் ஹிட் படங்களா தயாரிச்சிட்டிருந்தார்.
அவரை யதார்த்தமா சந்திக்கற வாய்ப்பு அமைஞ்சது. என் கையெழுத்து பத்திரிகையை பார்த்தவர், ‘சினிமாவில் சேர்ந்துடறீயா’னு கேட்டார். அந்த காலகட்டத்தில் சென்னை மவுன்ட் ரோட்டுல பெரியப் பெரிய பேனர்ல சினிமா பட விளம்பரங்கள், பீடி விளம்பர பேனர்கள்னு ஓவியங்கள் கோலோச்சும். நான் பிரமிச்சிருக்கேன். அதுவும் கவர்னர் பீடி விளம்பரம் எனாமல்ல வரைஞ்சிருப்பாங்க. ஜே.பி.கிருஷ்ணா ஆர்ட்ஸ் அவ்ளோ அட்ராக்ட் பண்ணும்.
பிரமாண்ட பேனர்ஸ் சுண்டி இழுந்ததுல ‘சினிமாவுல எழுத்து துறை வேணாம், ஓவியத்துறையில சேர விரும்புறேன்’னு அவர்கிட்ட சொன்னேன்.
மதர்லாண்ட் பிக்சர்ஸின் பேனர் ஆர்ட்டிஸ்டான ஆர்ட்லாண்ட்டில் என்னை சேர்த்துவிட்டார்.
ஆனா, அங்க போனதும்தான் தெரிஞ்சது, நாற்பது வருடமா ஆளுமையோடு இருந்த பேனர் துறை அழிவின் விழிம்பில் இருக்குனு. ‘இந்த டைம்ல இந்த துறைக்கு வந்திருக்கேயப்பா’னு அங்குள்ளவங்க என்னை பாத்து பரிதாபப்பட்டாங்க. ஒரு வருஷத்துல சினிமாவில் ஆர்ட் ஒர்க்கிற்கான மவுசு குறைஞ்சு, அது அரசியல் கட்சிக்கான கட் அவுட்கள் வரையற துறையா மாறிச்சு.
அது பிடிக்காமல் மறுபடியும் கோவைதம்பி சாரை போய் சந்திச்சேன். ‘நீங்க சொல்லித்தானே நான் வந்தேன்’னு என் குமுறலை கொட்டினேன். அப்ப அவர் ‘இதயக்கோவில்’ தயாரிச்சிட்டிருந்தார். மணிரத்னம் சார் அசோசியேட் சுபாஷை கூப்பிட்டு, ‘இந்த பையனை மணிகிட்ட சேர்த்து
விட்டுடுங்க. நான் சொன்னேன்னு சொல்லுங்க’ன்னார்.
என்ன காரணமோ... மணி சார் என்னை சேர்த்துக்கவே இல்ல. ஆனாலும் நான் மதர்லாண்ட்லதான் இருந்தேன். கோவைத்தம்பி சார் அப்ப எம்எல்ஏ ஆக இருந்தார். அவரோட பர்சனல் அசிஸ்டெண்ட் மாதிரி ஆகிப்போனேன். தவிர, படத் தயாரிப்பு வேலைகளையும் கவனிச்சிட்டிருந்தேன்...’’ சிறிது நேர மௌனத்திற்குப் பின் தொடர்ந்தார்.
‘‘ஒரு கட்டத்துல ஓவியமும் இல்லாமல், இயக்கமும் இல்லாமல் ஒரு தயாரிப்பு நிர்வாகியா அஞ்சு படத்துக்கு வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். ‘நம்ம டிராவல் இப்படி ஆகிப்போச்சே’னு ஒருநாள் ஃபீல் ஆச்சு. இங்கிருந்தா, நான் அசிஸ்டென்ட்டா ஆகவே முடியாதுனு நினைச்சேன்.
அதை உதறிட்டு, வெளியே வந்தேன். ‘சோலைக்குயில்’ கிடைச்சது. அந்தப் படத்தயாரிப்பாளர் தமிழ்மணி சார் மூலமா இயக்குநர் ராஜன் சார்கிட்ட உதவி இயக்குநரா ஒர்க் பண்ற வாய்ப்பு அமைஞ்சது. அவர்கிட்டத்தான் ஜனநாதன் சாரும் ஒர்க் பண்ணிட்டிருந்தார். அந்த நட்பு இன்னிக்கு வரை ட்ராவல் ஆகுறது தனிக்கதை.
‘சோலைக்குயி’லுக்கு பிறகு எதேச்சையா பாரதிராஜா சாரை சந்திச்சேன். முதல் சந்திப்பிலேயே ‘நீங்க என்கிட்ட அசிஸ்டெண்ட்டா சேர்ந்திடுறீங்களா’னு கேட்டார்.என் வாழ்க்கையின் திருப்புமுனைகள் எல்லாமே ஒரே நாள், ஒரே கேள்வில அமைஞ்சதுதான். கேள்வியை ஒண்ணு நான் கேட்டிருப்பேன். இல்லனா, அவங்க என்கிட்ட கேட்டிருப்பாங்க. ஆனா, எல்லாமே ஒரே நாள்ல நடந்ததுதான்.
‘என் உயிர்தோழன்’ல உதவியாளரா சேர்ந்தேன். அப்புறம், ‘புது நெல்லு புதுநாத்து’ல நடிகராவும், வசனகர்த்தாவாகவும் ஆனேன். ‘நாடோடித் தென்றல்’ வரை ஒர்க் பண்ணிட்டு வெளியே வந்து ‘அன்னை வயல்’ என்ற படத்தை இயக்கினேன். அது வியாபார ரீதியா சில பிரச்னைகளை சந்திக்கும் போது, தயாரிப்பாளரே பிரச்னையானார்.
கருத்தியல் ரீதியான முரண்பாட்டால நான் நினைச்சது வரல. அடிப்படைல நான் இலகுவானவன்தான். ஆனா, என்னால் காம்பரமைஸ் பண்ணிக்க முடியாத சூழல். படமும் தோல்வியாகிடுச்சு. மறுபடியும் உதவி இயக்குநரா ‘கிழக்குச் சீமையிலே’ல ஒர்க் பண்ணினேன். ‘கருத்தம்மா’வில் இருந்து நடிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சு, அங்கிருந்து வெளிய வந்தேன்.
ஓர் இயக்குநரா தோத்த பிறகு, என்னை நடிகனாக்கி அழகு பார்த்தவர் எங்க டைரக்டர் பாரதிராஜா சார்தான். நான் வெரி பிராக்டிகல். இந்த வாழ்க்கையை ரசனையா வாழணும்னா, பொருளாதார தன்னிறைவு அடையணும்னு தெளிவா இருந்தேன். அதே சமயம், கிடைச்ச நேரங்கள்ல ஓவியங்கள் வரைவதையும் விடல...’’ மகிழ்ச்சியுடன் சொல்லும் பொன்வண்ணன், வரலாற்று தொடர்பான புத்தகம் ஒன்றை ஆவணப்படுத்த உள்ளார்.
‘‘எகிப்திய வரலாற்று நூல்களை படிக்கிறப்ப தமிழக வரலாற்றில் ஒரு பெரிய வெற்றிடம் இருப்பது புரிஞ்சது. ஏன்னா, எகிப்திய பிரமிடுகளில் சாதாரண எளிய மக்களின் வாழ்க்கையை படமா வரைஞ்சு வச்சிருக்காங்க. ஆனா, சங்க இலக்கியங்கள்ல கூட அப்படி எளிய மனிதர்களின் வாழ்க்கையை விவரிச்சதில்ல.
இப்ப ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்த தமிழர்களின் மரபை ஓவியங்களா, எழுத்துக்களா ஆவணப்படுத்தும் வேலைல இருக்கேன். சங்க இலக்கியத்தை, அதன் வாழ்க்கையை ஓவியம் சார்ந்த ஒரு புத்தகமாக பண்ணும் வேலையிலும் இறங்கியிருக்கேன். அதுல அகழ்வாராய்ச்சியும் ஓவியமாக மிளரும். தொல்லியல் தொடர்பும் அதில் இருக்கும்.
மரபும், தொல்லியிலுமான அந்த கான்சப்ட் வேலைகள்தான் இப்ப போயிட்டிருக்கு. வெறுமன ஓவியங்களா மட்டுமில்லாம மரபுக்கும் மொழிக்குமான பதிவாகவும் அது இருக்கும்...’’ கனவு மின்ன சொல்கிறார்
நன்றி: குங்குமம்
======================================================








தமிழில் கமலஹாசன் நடித்த “நாயகன்” படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தற்போது பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். மேலும், தற்போதுள்ள பெரும்பாலான பல முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.
அம்மா கதாபாத்திரத்தில் சீரியஸான ரோலாக இறந்தாலும் சரி, காமெடியான அம்மாவாக இருந்தாலும் சரி இவர் நடிப்பில் பட்டையை கிளம்பிவிடுவார். இவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இவருக்கு முதன் முதலில் சிறப்பான பெயரை பெற்றுத்தந்த படம் இயக்குனர் சேரன் இயக்கிய “தவமாய் தவமிருந்து” படம் தான்.
2005 ஆம் ஆண்டு இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சேரனின் பெற்றோர்களாக நடிகர் ராஜ்கிரணும், சரண்யாவும் நடித்திருப்பார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இந்த படத்தில் ஹீரோவாக நடித்த சேரனுக்கும், நடிகை சரண்யாவிற்கும் அடிக்கடி சண்டை வருமாம். ஆனால், எதற்காக சண்டை வருமென்று தெரியாது என்று சரண்யா கூறியுள்ளார்.
படப்பிடிப்பின் போது அடிக்கடி சண்டை வந்ததால் சரண்யா பல முறை அழுத்திருக்கிறாராரம், ஒரு கட்டத்தில் தன்னிடம் சண்டையிடும் சேரனை அருவாள் எடுத்து வெட்டி கொலை செய்துவிடலாம் என்று கூட நினைத்ததாக காமெடியுடன் கூறியுள்ளார் நடிகை சரண்யா, ஆனால் அந்த படம் வெளியான பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்களாம்.
இணையத்தில் இருந்து எடுத்தது

--------------------------------------------------------------------------------------------
















சிவாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு, நடிகர் பொன்வண்ணன் வரைந்த சிவாஜி ஓவியம்
இணையத்தில் இருந்து எடுத்தது
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++





திரைஇசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள், தமிழ் மட்டும் தெலுங்கு திரைப்படங்களில் கொடி கட்டிப் பறந்த , தலை சிறந்த இசை வேந்தர் ஆவார். திரை உலகம் மட்டுமல்லாமல், சமூகத்தில், எல்லோராலும் உயர்ந்த மதிப்புடனும், மரியாதையோடும் மதிக்கப் பட்ட மகானுபாவர்.
அடக்கம், அமைதி, எளிமை என எல்லா நல்ல குணங்களுக்கும் உதாரணமாக அமைந்து, அளப்பரிய திறமை பெற்றிருந்தாலும், ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல், இருக்கின்ற இடம் கூட தெரியாமல், வாழ்ந்து, சரித்திரங்கள், சாதனைகள் படைத்துச் சென்ற மாமனிதர்.(இவருக்கு நீங்கா நிழல்போல, உறுதுணையாக, உதவி புரிந்த புகழேந்தி அவர்களின் சிறந்த சேவையையும், இங்கே நினைவு கூர வேண்டும்)
தமிழ், தெலுங்கு படத்தின் அபாரமான இசையமைப்புக்காக, தேசிய விருது பெற்ற, திறமையானவர். மேலும் நந்தி விருதுகள், மாநில அரசு விருதுகள், ஃபிலிம் ஃபேர் விருதுகள் , போன்றவை ,இவருக்கு அளிக்கப் பட்டதன் மூலம் , கௌரவத்தை அடைந்தன. சிவாஜி, எம்.ஜி.ஆர். , ஜெமினி, எஸ்.எஸ்.ஆர். , என்.டி.ஆர் ,நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா, ஷோபன் பாபு, சாவித்திரி, பத்மினி, அஞ்சலி தேவி, கே.ஆர்.விஜயா போன்ற பெரிய நடிக, நடிகையர் மற்றும் பிரபல இயக்குனர்களின் படங்களில் இடம் பெற்ற , என்றும் ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள எண்ணற்ற பாடல்கள், இவர் இசைக் கற்பனையில் உதித்து, ஒளிர்ந்தவை.
அன்போடு அனைவராலும், ' மாமா', என்று அழைக்கப் பட்ட இவரைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், எம்.எஸ்.வி, எஸ்.பி.பி, சுசீலா ,வாணி ஜயராம் என்று அனைவரும், வணக்கத்துடனும், வந்தனத்தோடும் , பேசுவார்கள்.
இவரும், மெல்லிசை மன்னர் எம். எஸ். வி அவர்களும், ஒருவருக்கொருவர் நல்ல நட்புடன், மதிப்புடன், பழகி வந்தனர்.
கர்நாடிக் இசையை ஆதாரப் படுத்தி கொடுக்கப் பட்ட பாடல்கள், மண்ணின் மணம் வீசும் கிராமியப் பாடல்கள், இனிமையான காதல் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், மனதை வருடும், உருக்கும் தத்துவ, சோகப் பாடல்கள் , இன்று பிரபலமாக உள்ள குத்துப் பாடல்களுக்கெல்லாம் முன்னோடியான, துள்ளல் பாடல்கள் என்று இசையில் விதம் விதமான, தேன் சொட்டும் பாடல்களைத் தந்த மாபெரும் இசை வல்லுநர்கள், இவரும், எம்.எஸ்.வியும் தான், என்றால், அது 1000% அக்மார்க் உண்மை.
இன்று வரை, பின் வந்த எல்லா இசையமைப்பாளர்களிடமும், இந்த இசைமேதைகளின் இணையற்ற இசை வண்ணங்களின், தாக்கம் இருந்து கொண்டிருக்கும் என்பதை மறுக்க முடியாது.
எப்படி இருந்தாலும் இனிப்பு, இனிப்பு தான்.ஒருவரின் படைப்பு, பாயசம், சர்க்கரைப் பொங்கல், கேசரி போன்று சுவையானவை என்றால், மற்றொருவரின் கற்பனையில் எழுந்தவை, லட்டு, மைசூர் பாகு, ஜாங்கிரி போன்று ரசிக்க வைப்பவை.
ஒருவர் பட்டு வேட்டி ,அங்கவஸ்திரம், காஞ்சிபுரம் பட்டுப் புடவை , கைத்தறி ஆடைகள், என்ற பாரம்பரிய, கிராமிய உடைகள் போன்று மெட்டுக்கள் அமைத்தார் என்றால், மற்றவர் அதுவே பாலியஸ்டர் வேட்டி, புடவை, கால்சட்டை, டி சட்டை வகையான உடைகள் போல், மனதை மயக்கும் பாடல்கள் கொடுத்தார்.
எங்களைப் போன்ற, அம்பது, அறுபதுகளில் பிறந்த " வயதான குழந்தைகளைக்" கேளுங்கள். இவர்களைப் போன்ற, பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும், அபரிமிதமான, அபூர்வமான இசைச் சக்கரவர்த்திகளைப் பற்றி , நாளெல்லாம், சொல்லிக் கொண்டிருப்போம். இன்று, பெருகியுள்ள தொலைக்காட்சி சானல்கள், யுட்யூப் போன்ற, ஊடகங்களின் புண்ணியத்தில், அந்தக் காலத்தில், கே.வி.எம், எம்.எஸ்.வி படைத்த, காலத்தை வென்று, மனதில் நிலையான, நீங்கா இடம் பெற்ற, இசைக் கோலங்களைக் கேட்டு, ஆனந்தம் பெற முடிகிறது.
இன்று இசையில் பிரமிக்கத் தக்க மாற்றங்கள், மின்னணுத் துறையின் அசுர வளர்ச்சியால் ஏற்பட்டுள்ளது. பின்னணி இசை, மறு பதிவு, பல்வேறு வகை இசையின் தாக்கங்கள், செவியைப் பிளக்கும் இசை வடிவங்கள் என்று, இன்றைய பாடல்களின் பரிணாமங்களே, சொல்லப் போனால், வேறே ' லெவல்'.
ஆனால், மனதை மகிழ்விக்கும் இனிமை குறைந்துள்ளது, என்பது என் தாழ்மையான கருத்து.
திரை இசைத்திலகம் கே.வி.எம். போன்றவர்கள்,கொடுத்த இசை, ஒளி வெள்ளம் பாய்ச்சி, கண்ணைக் கவர்ந்து மின்னும், ஓராயிரம் வண்ண விளக்குகளுக்கு நடுவே, குடத்துக்குள் வைத்த, அழகான அகல் விளக்கைப் போன்றது.
இன்று விருதுகளை வாரி வழங்கும் ஆரவார சூழ்நிலையில், ஒப்பற்ற இசை விற்பன்னர்களான, கே.வி.எம்., எம்.எஸ்.வி, போன்றோரை, உரிய, உயரிய முறையில், கௌரவிக்க மறந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.
ஆனால், அவர்கள், இந்த விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட, அற்புத மனிதர்கள்.
சில தகவல்கள் உதவி: விக்கிபீடியா
இணையத்தில் இருந்து எடுத்தது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,