நீர் மருத்துவம்
நீர் மருத்துவம்
தினமும் அதிகாலை எழுந்தவுடன் வாயை கொப்பளித்து விட்டு ஒன்னேகால் லிட்டர் மண்பானை தண்ணீரை குடித்து வந்தால் உடல் பிணிகள் அனைத்தும் நாற்பது நாட்களில் நம்மை விட்டு நீங்கிவிடும்
ஆச்சரியமாக இருக்கலாம்
ஆனால் உண்மை இதுதான்
தினந்தோறும் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக சுத்தமான நல்ல தண்ணீரை குடிப்பதை பழக்கப்படுத்தி வந்தால்
உடல் குளிர்ந்து இரத்தம் சுத்தமாகி மலச்சிக்கல் விலகி வாதம் பித்தம் சிலேத்துமம் இவைகளின்
மாறுபாடுகள் சமநிலை பட்டு உடல் பிணிகள் அனைத்தும் விலகிவிடும்
காலை எழுந்தவுடன் குடி நீரை குடிப்பதால் கிடைக்கும் பயன்களில் சில
தீராத தலைவலி தீரும்
உயர் ரத்தம் சமமாகும்
ரத்த சோகை விலகும்
கீல்வாதம் மூட்டுவலி உடல் பருமன்
உடல் வலி பக்கவாதம் இவை அனைத்தும் விலகும்
சளி இருமல் காது இரைச்சல் காசநோய் மற்றும் ஆஸ்துமா தொந்தரவு விலகும்
சளியால் ஏற்படுகின்ற தொண்டைக்கட்டு நீங்கி சுவாசம் சீராக நடைபெறும்
மூளை காய்ச்சல் இதய பலவீனம் நீங்கும் கல்லீரல் நோய் சிறுநீரக நோய்கள் உடலில் தோன்றாத வண்ணம் உயிரை காக்கும்
நோய்கள் தோன்றுவதற்கு காரணமான அதிக பித்தத்தை அறவே நீக்கும்
வயிற்றுப் பொருமல் ரத்தக் கடுப்பு மூலநோய் மற்றும் மலச்சிக்கலை நீக்கும்
பெண்களுக்கு ஏற்படுகின்ற அதிக உதிரப் போக்கை குணப்படுத்தும் முறையாக மாதவிடாய் நடைபெறும்
கர்ப்பப்பை புற்று மார்பகப் புற்று மேலும் தோலில் ஏற்படுகின்ற படை நோய்கள் அனைத்தும் நீங்கும்
ஆறு மாதத்திற்கு ஒருமுறை நாற்பது நாட்கள் இந்த குடிநீர் மருத்துவ முறையை பயன்படுத்தி வந்தால் உடலில் ஏற்படுகின்ற அனைத்து நோய்களும் படிப்படியாக குறைந்துவிடும
இதன் மூலம் மருந்து மாத்திரைகள் எதுவும் இன்றி நாம் ஆரோக்கியமாக ஆயுள் முழுவதும் வாழ முடியும்
நீர் அருந்தும் முறைகள்
ரசாயனப் பொருட்களின் மூலம் சுத்திகரிப்பு செய்த பிளாஸ்டிக் பாட்டிலில் விற்கின்ற நீரைபயன்படுத்தக்கூடாது
இயற்கையான முறையில் கிடைக்கின்ற ஆழ்குழாய் கிணறு நீரை மட்டுமே குடிப்பதற்காக பயன்படுத்தவேண்டும்
அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை சாப்பிட்டு இந்த நீர் மருத்துவத்தை கடைப்பிடித்தால் பூரண நன்மைகள் உண்டாகும்
நீர் மருத்துவத்தை பயன்படுத்தும் பொழுது உடல் சோர்வாக இருப்பதாய் உணர்ந்தால் பயம் வேண்டாம்
வழக்கத்திற்கு மாறாக அதிகமான தண்ணீரை அருந்துவதால் இதன் மூலம் உடலில் தேங்கி இருக்கின்ற மலம் முழுவதும் வெளியேறி விடுவதால் இப்படி ஒரு பிரமை நமக்கு ஏற்படும் அவ்வளவே
மற்றபடி எந்த பக்க விளைவுகளும் இல்லை பாதுகாப்பான வைத்திய முறையே இது
தெரிந்து கொள்ள வேண்டிய
ஒரு சிறுகுறிப்பு
கிணற்று நீர் அல்லது ஆள் குழாய் நீர் எதுவாக இருந்தாலும் இரவே சூடேற்றி இதில் ஐந்தில் ஒரு பங்கை சுண்ட காய்ச்சி இதை ஆறவைத்து ஒரு மண் பானையில் ஊற்றி இந்த நீரையே காலை வேளையில் பயன்படுத்த வேண்டும்
இதுவே தண்ணீரை அறிந்து அதன் மூலம் நோய்களை நீக்கி கொள்வதற்கான சரியான முறையாகும்
காலை எழுந்தவுடன் எப்படி ஒன்னேகால் லிட்டர் தண்ணீரை குடிப்பது என்று யோசிக்கலாம்
ஆனால்
ஒரு வாரகாலம் இதை பழகி வந்தால் இது ஒரு சாதாரண செயல் என்று உங்களால் உணர்ந்து கொள்ள முடியும்
Comments