கொரோனா உங்களை வரவேற்கிறது( 2021)
கொரோனா தொற்று பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகளில் சென்னை மாநகராட்சி இன்று (ஏப்.13) மறுபடியும் தொடங்கிபுடுச்சு.
கொரோனா பாதித்தவர்கள் யார் இருக்கிறார்கள், என்ன நாட்களிலிருந்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது, வீட்டில் அவர்கள் எத்தனை நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும் என்ற விவரங்களுடன் கூடிய ஸ்டிக்கர்களை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஒட்டி வருகின்றனர். மண்டல வாரியாக அந்தப் பணிகளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணிகளிலும் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
மேலும், ஒரு குறிப்பிட்ட தெரு அல்லது குடியிருப்பில் 3-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அப்பகுதியை கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றும் நடவடிக்கையிலும் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
Comments