குழந்தைகளின் தூக்கத்தை கவனியுங்கள்!


குழந்தைகளின் 

தூக்கத்தை கவனியுங்கள்!


பெற்றோர் கவனத்துக்கு...



‘எப்போ பார்த்தாலும் தூக்கம்.... எழுப்பறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது’ என பெற்றோர் புலம்பியது அந்தக் காலம். இந்தக் காலத்துக் குழந்தைகளுக்குத் தூக்கம் இரண்டாம்பட்சமாகிவிட்டது. மொபைல், லேப்டாப், டி.வி என எந்நேரமும் ஏதோ ஒரு திரையில் ஆழ்ந்துகிடக்கிறார்கள். அதற்காக தூக்கத்தைத் தவிர்க்கிறார்கள்.


நள்ளிரவு வரை விழித்துக் கொண்டிருந்துவிட்டு, சில மணி நேரமே தூங்கி எழும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தூக்கம் என்பது மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு அடிப்படை. அது குறையும்போது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படும். அதிலும் குழந்தைகளுக்குப் போதுமான அளவு தூக்கம் இல்லாவிட்டால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான பிரச்னைகளை சந்திப்பார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.


குழந்தைகளுக்கு ஏன் தூக்கம் அவசியம்?


தூக்கத்தின்போதுதான் குழந்தைகளின் தசைகள் தம்மைத்தாமே பழுதுபார்த்துக்கொள்ளும். இதில் இதயமும் அடக்கம். போதுமான அளவு தூங்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளின் மூளைப் புத்துணர்வுக்கும் தூக்கம் அவசியம். 


சரியாகத் தூங்கினால்தான் அவர்களால் கனவுகள் காண முடியும். கனவுகள் அவர்களுடைய கற்பனைகளை விரிக்கும். தூங்கும்போது பகலில் நிகழ்ந்த சம்பவங்களின் நினைவுகளை மூளையானது சேகரித்து வைக்கும்.


அப்போதுதான் குழந்தைகளால் நடந்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை ஆழ்ந்த, போதுமான உறக்கம். பள்ளிக்கூடத்தில் தூங்காமலிருக்கவும், பாடங்களை கவனித்து உள்வாங்கவும் இரவில் போதிய தூக்கம் முக்கியம். போதிய அளவு தூங்கும் குழந்தைகள் பாடங்களை மறப்பதில்லை என்கிறது உளவியல். 


பெரியவர்களைவிடவும் குழந்தைகளுக்கு தூக்கம் அதிகம் தேவை. 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 11 முதல் 14 மணி நேரத் தூக்கம் அவசியம். 3 முதல் 5 வயதுக் குழந்தைகளுக்கு 11 முதல் 13 மணிநேரத் தூக்கம் தேவை. 6 முதல் 13 வயதுக் குழந்தைகளுக்கு  9 முதல் 11 மணி நேரத் தூக்கம் அவசியம். டீன் ஏஜில் இருப்பவர்களுக்கு 8 மணிநேரத் தூக்கம் தேவை. 


குழந்தையை பகலில் தூங்க அனுமதிக்கலாமா என்பது பல பெற்றோர்களின் சந்தேகம். அது குழந்தை இரவில் தூங்கும் நேரத்தைப் பொறுத்தது. பொதுவாக 5 வயதுக்கு மேல் குழந்தைகளின் பகல் தூக்கம் குறைய ஆரம்பிக்கும். அந்த வயதைத் தாண்டியும் குழந்தைகள் பகலில் தூங்கினால், அவர்களை இரவில் இன்னும் சீக்கிரம் தூங்கப் பழக்கப்படுத்த வேண்டும். அதுவே டீன் ஏஜில் உள்ளவர்கள் பகலில் தூங்கினால், அது அவர்கள் இரவில் போதுமான அளவு தூங்கவில்லை என்பதையே குறிக்கும்.


பல பெற்றோர்களுக்கும் குழந்தையைத் தூங்க வைக்கிற நேரம் போராட்டமானதாகவே இருக்கிறது. உண்மையில் அதை அப்படிப் பார்க்க வேண்டியதில்லை. தினமும் இரவில் தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள். ஒரே நேரத்தில் தூங்குவதைப் பழக்குங்கள். விடுமுறை நாட்களிலும் இதையே பின்பற்றுங்கள். தூங்குவதற்கு முன் பல் தேய்ப்பது, குளிப்பது, சிறுநீர் கழிப்பது போன்றவற்றை ரொட்டீனாகச் செய்யப் பழக்குங்கள். 


குழந்தைகளின் படுக்கையறையில் வெளிச்சமின்றியும், சத்தமின்றியும், குறிப்பாக மொபைல், டி.வி திரைகள் இன்றியும் பார்த்துக் கொள்ளுங்கள். தூங்குவதில் பிரச்சனை செய்கிற குழந்தைகளுக்கு படுக்கையை தூக்கத்துக்கு மட்டும் பயன்படுத்த அனுமதியுங்கள். படுக்கையில் இருந்தபடி ஹோம் வொர்க் செய்வது, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றைச் செய்ய அனுமதிக்க வேண்டாம்.


மேலே சொன்ன விஷயத்தை சிறு குழந்தைகளுக்குப் பழக்கலாம். டீன் ஏஜ் பிள்ளைகள் விஷயத்தில் அது கஷ்டம். உங்கள் டீன் ஏஜ் மகனோ, மகளோ இரவில் அதிக நேரம் விழித்துக் கொண்டிருக்கிறார்களா? தூங்கும் நேரம் வந்ததும் வீட்டின் அனைத்து அறைகளின் வெளிச்சத்தையும் குறையுங்கள். டி.வி., லேப்டாப், மொபைல் போன்றவற்றை இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு உபயோகிப்பதை அனுமதிக்காதீர்கள். விடுமுறை நாட்களில் கூடுதலாக, அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே தூங்க அனுமதியுங்கள். அதற்கு மேல் வேண்டாம்.


உங்கள் குழந்தையை காலையில் எழுப்பும்போது அதிக சிரமமின்றி எழுந்துகொள்கிறார்களா என கவனியுங்கள். அப்படி எழுந்துகொண்டால் இரவில் நன்றாகத் தூங்கியிருக்கிறார்கள் என அர்த்தம். குழந்தைகள் போதுமான அளவு தூங்காமலிருக்க வெளிப்புறச் சூழல்கள் மட்டுமின்றி, உடல்ரீதியான விஷயங்களும் காரணமாக இருக்கலாம். 


எனவே, தூக்கத்தில் பிரச்னை இருக்கும் பிள்ளைகளின் தூக்கத்தை கவனியுங்கள். குறட்டை விடுகிறார்களா, இரண்டு மூச்சுகளுக்கு இடையில் அதிக இடைவெளி இருக்கிறதா, சுவாசப் பிரச்னைகளைப்…

[21:23, 03/04/2021] Svel: 🌱🌱🌱




!!! ❤மனசே... கொஞ்சம் ரிலாக்ஸ்... ப்ளீஸ்❤.......????!!!


சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் ‘டென்ஷன்’ ஆகிறீர்களா?


சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் ‘டென்ஷன்’ ஆகிறீர்களா? பிரச்சினையை சமாளிக்கத் தெரியாமல் அடிக்கடி சத்தம் போடுபவரா? ரசத்தில் உப்பு குறைவாக இருந்தாலும் எரிச்சல் அடைபவரா?


இப்படி எதற்க்கெடுத்தாலும், ‘சுருக்’கென கோபப்படும் நபர் என்றால் முதலில் அவற்றை கைவிட முயற்சி எடுங்கள்.


 இல்லாவிட்டால் சிறு வயதில்கூட `ஹார்ட் அட்டாக்’ வரும் அபாயம் உள்ளது.


அமைதியாக செயல்படுபவர்களுக்கு பொதுவாகவே எந்த உடல் பாதிப்பும் வருவதில்லை. 


அவர்களின் உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றம் இருந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். 


ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவோருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பல நோய்களுக்கு அது திறவுகோலாகிறது.


 இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் இப்போது மன அழுத்தம் ஏற்படுவதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


அதனால் இளந்தலைமுறையினர் மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சிடன் வாழ முன்வர வேண்டும்.


உடல் எடை அதிகமாக இருக்கலாம்; ரத்தக் அழுத்தம் இருக்கலாம்; மது பழக்கமும் கூட ஒருவருக்கு இருக்கக்கூடும். 


ஆனால் அவற்றில் எல்லாம் வராத மாரடைப்பு, மன அழுத்தத்தால் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.


 ஆத்திரப்படுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்போது, அவர்கள் என்ன தான் ஆரோக்கியமாக இருந்தாலும், ‘சி-ரியாக்திவ்’ ப்ரோட்டீன் என்ற ஒரு ரசாயனம் உருவாகிறது. 


அது தான் ஆபத்தானது. ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு வர அது தான் காரணமாகிறது. 


மாரடைப்பில் இறப்போரில் 50% பேர், இந்த வகை பாதிப்பால் தான் இறக்கின்றனர்.


போக்குவரத்து நெரிசலில் சிக்கும்போது எரிச்சல்படுவது, ரயில் முன்பதிவு செய்யும்போது ‘உச்ச்…’ கொட்டுவது, மனைவியிடம் சண்டை போடும்போது, கண் சிவப்பது, ஆபீஸில் பாஸ் ஏதாவது சொல்லிவிட்டால், தவறை திருத்திக்கொள்ளாமல் புலம்புவது போன்றவையும் மன அழுத்தத்துக்கு அறிகுறி.


 எல்லாவற்றையும் திட்டமிட்டு அமைதியாக செயல்பட்டால், இருதய பாதிப்பே வராது” என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,