‘விஞ்ஞானத்தை நம்பி நீ தூங்காதடா தம்பி/ நடிகர் விவேக் முதன்முதலில் பாடிய பாடல்
தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து அவருடைய உடல் அரசுமுறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது
அவரது மறைவுக்கு பிறகு அவரின் கலை சேவைகள் ,சமூகப்பணிகள், அவர் குறித்து யாரும் அறியாத மறுபக்கங்கள் உள்ளிட்ட பல அரிய தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் அவர் திரையில் நடித்து பாடிய பாடல் பற்றிய செய்தி நம்மை கவர்கிறது
அதன்படி விவேக் முதன்முதலில் பாடி நடித்த திரைப்படம் நடிகர் , நடிகர் விக்ரம், சௌந்தர்யா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கண்டேன் சீதையை. என்கிற படம்தான்
சேது படத்திற்கு பிறகு இரண்டாவதாக விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கண்டேன் சீதையை. இந்த படத்தில் தான் நடிகர் விவேக் முதன் முதலில் பாடி நடித்துள்ளார்.
அந்த திரைப்படம் குறித்த தகவல்களை அந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் வி.எஸ்.உதயா என்கிற உதயன் விக்டர் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
மேலும் அவர் கூறியதாவது அப்போது விவேக்கிடம், ‘சார், உங்களை நடிகராக பாடவைக்கட்டுமா? அல்லது ஒரு பாடகராக பாட வைக்கட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் கேட்டார், ‘இரண்டுக்கும் என்ன சார் வித்தியாசம்’ என்று. அப்போது நான் அவரிடம் ‘நடிகர் என்றால் நீங்கள் எப்படி பாடினாலும் நான் எடுத்துக் கொள்வேன்! ஆனால் பாடகராக பாடவைத்தால், ஒரு இசையமைப்பாளராக எனக்கு என்ன தேவையோ அதை உங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு தான் விடுவேன்’ என கூறினேன்
இதனை ரசித்த விவேக் சிரித்தபடி, ‘என்னை பாடகராகவே பாட வையுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். அப்படி உருவானதுதான் ‘விஞ்ஞானத்தை நம்பி நீ தூங்காதடா தம்பி’ என்கிற என்ற பாடல்.
பகுத்தறிவையும் சமூக கருத்தையும் உள்ளீடாக வைத்து விவேக் பாடிய இந்த பாடலை சிநேகன் எழுதினார்
. விவேக் சார் மிகவும் எளிமையானவர். கடின உழைப்பாளி. கலையோ சமூக சேவையோ எதுவாயினும் முழு அர்ப்பணிப்போடு செய்பவர். இந்த பாடலை கூட 2 மணி நேரங்கள் முழுமையாக பாடிக் கொடுத்தார்.” என வி .எஸ்.உதயா மிகவும் நெகிழ்ச்சியுடன் நம்மிடம் தெரிவித்தார்.
இதோ விவேக் பாடிய பாடல்
Comments